search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி தாளாளர் அறையில் நகை, பணம் கொள்ளை
    X

    பள்ளி தாளாளர் அறையில் நகை, பணம் கொள்ளை

    • திருச்சி அருகே தனியார் பள்ளியில் தாளாளர் அறையில் உள்ளே புகுந்த மர்ம நபர் அங்கிருந்த நகை, பணத்தை திருடி சென்றுவிட்டார்
    • உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்றதால் பாதுகாப்பு கருதி வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை பள்ளிக்கூடத்தில் உள்ள தனது அறையில் பீரோவில் வைத்துவிட்டு புறப்பட்டார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருேக உள்ள சிறுமையன்குடி காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி சாவித்திரி (வயது 52).

    இவர் லால்குடி சாந்தி நகர் பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவித்ரி தனது உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்றார்.

    முன்னதாக பாதுகாப்பு கருதி வீட்டில் இருந்த 2¾ பவுன் நகை மற்றும் ரூ.30,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை பள்ளிக்கூடத்தில் உள்ள தனது அறையில் பீரோவில் வைத்துவிட்டு புறப்பட்டார்.

    இந்த நிலையில் மர்ம நபர்கள் அறை பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த மேற்கண்ட நகை, பணத்தை திருடிக் கொண்டு சென்றனர்.

    இது பற்றி பள்ளி ஆசிரியர்கள் தாளாளர் சாவித்திரிக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் இதுபற்றி சாவித்ரி லால்குடி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×