search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை பறிக்க முயற்சி"

    • அரசு விடுதி பெண் காப்பாளரிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
    • சந்தேகத்தின் பேரில் இரு வரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள மண்டபசாலை புதூர் பகு தியை சுப்புலட்சுமி (வயது 58). இவரது கணவர் சின் னத்தம்பி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் சுப்புலட்சுமி கோவிலாங்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள் ளியின் மாணவிகள் விடுதி யில் இரவு காவலராக பணி புரிந்து வருகிறார்.

    இதற்கிடையே சுப்புலட் சுமி தனது ஊரான எம்.புதூரில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில் சுப்புலட்சுமி வழக்கம்போல் விடுதிக்கு இரவு காப்பாளர் வேலைக்கு சென்று விட்டு நேற்று காலை தனது சொந்த ஊரான எம்.புதூர் கிராமத் திற்கு செல்வதற்காக பேருந் தில் வந்தார்.

    ஒத்தக்கடை பஜார் பகு தியில் இறங்கிய அவர் அங்குள்ள காய்கறிக்கடை யில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு எம்.புதூருக்கு குறுக்கு வழியில் செல்ல எண்ணி நடந்து சென்று கொண்டிருந்தார். அப் போது அவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

    மேலும் எப்பொழுதும் ஆள் நடமாட்டம் அதிக முள்ள பஜார் பகுதியில் நேற் க்கு ஆள் நடமாட்ட மில்லாத நேரத்தை தங்க ளுக்கு சாதகமாக பயன்ப டுத்திகொண்ட அந்த வாலி பர்கள் சுப்புலட்சுமி யிடம் நகை பறிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் சுதாரித்துக் கொண்ட சுப்புலட்சுமி நகை பறி கொடுக்காமல் தப்பி னார். இதுகுறித்து எம்.ரெட்டியாபட்டி போலீஸ் நிலையத்தில் சுப்புலட்சுமி புகார் அளித்தார். இதனை யடுத்து சம்பவம் நடந்த பகுதியான ஒத்தக்கடை பஜார் பகுதியில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிப்பதிவுகளை அடிப்படையாக வைத்து நகை பறிப்பு முயற்சியில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவந்தனர்.

    மேலும் இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரு வரை பிடித்து போலீ சார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • காட்டுப் பகுதியில் இருந்து பெண் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் மற்றும் கிரிவலப் பாதையில் சென்றவர்கள் காட்டு பகுதிக்கு சென்றனர்.
    • வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    திருவண்ணாமலை:

    ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் லாவண்யா. தனது உறவினர்களுடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அவர் இன்று காலை கிரிவலம் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது செங்கம் செல்லும் சாலையை அடுத்து தூர் வாசகர் முனிவர் கோவில் அருகில் இயற்கை உபாதையை கழிக்க சாலையின் ஓரமாக இருந்த காட்டுப் பகுதிக்குள் சென்றார்.

    இருளில் மறைந்திருந்த ஒருவர் அவரை கத்தியால் தாக்கி நகைகளை பறிக்க முயற்சித்தார். இதனைக்கண்டு லாவண்யா கூச்சலிட்டார்.

    காட்டுப் பகுதியில் இருந்து பெண் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் மற்றும் கிரிவலப் பாதையில் சென்றவர்கள் காட்டு பகுதிக்கு சென்றனர். கொள்ளையனிடமிருந்து லாவண்யாவை மீட்டனர்.

    கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். திருவண்ணாமலை தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் திருக்கோவிலூரை சேர்ந்த பாபு என்பது தெரியவந்தது. அவர் போலி சாமியாராக வலம் வருவது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    கிரிவலப் பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து கழிவறைகளையும் திறந்து வைத்து பராமரிக்க வேண்டும்.

    கிரிவலப்பாதையில் கடந்த சில தினங்களாகவே சாதுக்கள் போர்வையில் ஆன்மீக பக்தர்களை மிரட்டுவதும், தாக்குவதும், கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.

    உண்மையான சாதுக்கள் யார் என்று அறிந்து அவர்களை அடையாளப்படுத்துவதுடன் போலி சாமியார்களை கைது செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    • அழகான இளம்பெண் போன்ற தோற்றம் ஏற்படுத்திக் கொண்டு, நைட்டி அணிந்து கொண்டு வந்த ஒரு வாலிபர், அலமேலு வீட்டுக்கதவை தட்டியுள்ளார்.
    • திடீரென அந்த நபர் அலமேலு கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி, அகத்தியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு (வயது 70). இவரது குடும்பத்தினர் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று விட்டனர். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த அலமேலு, தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது மாலை 3.15 மணியளவில், முழுக்க அலங்காரம் செய்து கொண்டு, அழகான இளம்பெண் போன்ற தோற்றம் ஏற்படுத்திக் கொண்டு, நைட்டி அணிந்து கொண்டு வந்த ஒரு வாலிபர், அலமேலு வீட்டுக்கதவை தட்டியுள்ளார்.

    அப்போது சத்தம் கேட்டு எழுந்து வந்த மூதாட்டியிடம் அந்த நபர், "பாட்டி, இந்த பகுதியில் உள்ள எனது உறவினர் வீட்டிற்கு வந்தேன். முகவரி தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். கண்டு பிடிக்க முடியவில்லை. அலைந்து திரிந்து, களைப்பாக மயக்கம் வருகிறது. கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டதாக தெரிகிறது. தொடர்ந்து அந்த நபர் மூதாட்டியிடம் ஏதேதோ நைசாக பேசியபடி, அவரது கவனத்தை திசை திருப்ப முயற்சித்துள்ளார். அப்போது திடீரென அந்த நபர் அலமேலு கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றார்.

    இதனை சற்றும் எதிர்பாராத அலமேலு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மின்னல் வேகத்தில் சுதாரித்துக்கொண்ட மூதாட்டி, பெண் வேடமணிந்து வந்த அந்த வாலிபரை கெட்டியாக இறுக பிடித்துக்கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அலமேலு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் மூதாட்டியை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் ஆய்வு செய்தனர். அதில் சுமார் 30 வயதுள்ள நபர் நைட்டி அணிந்து, பெண் வேடத்தில் அப்பகுதியில் நடந்து செல்வது தெரிந்தது. பெண் வேடம் அணிந்து வந்த வாலிபர், கண் இமைக்கும் நேரத்தில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அருப்புக்கோட்டையில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்தனர்.
    • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு மோப்பநாயுடன் வந்து விசாரணை நடத்தினர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் வடக்கு மகாராஜபுரத்தை சேர்ந்தவர் செண்பக ரத்தினம் (வயது 68). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில்நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் செண்பகரத்தினம் வீட்டின் ஓட்டை பிரிந்து உள்ளே இறங்கி உள்ளார். பின்னர் தூங்கி கொண்டிருந்த செண்பகரத்தினம் கழுத்தை நெரித்து மிரட்டி அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளார்.

    அப்போது அவர் சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தில் வசிப்ப

    வர்கள் அங்கு வந்துள்ளனர். இதனால் அச்சமடைந்த கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான்.

    இதுகுறித்து அருப்பு க்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு மோப்பநாயுடன் வந்து விசாரணை நடத்தினர்.

    அருப்புக்கோட்டை பகுதியில் தொடர்ந்து கொலை மற்றும் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே அருப்புக்கோ ட்டை போலீசார் தினமும் இரவு ரோந்து சென்று கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவிந்தம்மாள்தனக்கு சொந்தமான வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த ஒருவர், கோவிந்தம்மாளின் காதில் அணிந்திருந்த தோடு மற்றும் மூக்குத்திகளை பறிக்க முயன்றுள்ளார்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த விழுதுடையான் கிராமத்தில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி கோவிந்தம்மாள்(வயது 70). இவர் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஒருவர், கோவிந்தம்மாளின் காதில் அணிந்திருந்த தோடு மற்றும் மூக்குத்திகளை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோவிந்தம்மாள் சத்தம் போட்டதையடுத்து, அருகில் உள்ள வயலில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைக்கண்ட அந்த நபர் தப்பியோடிவிட்டார்.

    இது குறித்து கோவிந்தம்மாள் ஆண்டிமடம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் கோவிந்தம்மாளிடம் நகை பறிக்க முயன்றது பெரியாத்துக்குறிச்சி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 2 பேர் கைது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் அவர்களை போலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் வாணியம்பாடி அருகே ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த இம்ரான் மகன் முகமது பைசான் (வயது 22) மற்றும் முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்த சையத் ரகுமான் மகன் நிஜாஸ் சாஹிப் (வயது 19) ஆகிய இருவரும் கடந்த 26ந்தேதி வெலக்கல்நத்தம் அருகே பைக்கில் சென்ற பவித்ரா என்பவரிடம் செல்போன் மற்றும் தங்க நகை பறிக்க முயன்றதாக தெரிவித்தார்.

    இதனையடுத்து நாட்டறம்பள்ளி போலிசார் முகம்மது பைசான் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×