search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு விடுதி பெண் காப்பாளரிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர்கள்
    X

    அரசு விடுதி பெண் காப்பாளரிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர்கள்

    • அரசு விடுதி பெண் காப்பாளரிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
    • சந்தேகத்தின் பேரில் இரு வரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள மண்டபசாலை புதூர் பகு தியை சுப்புலட்சுமி (வயது 58). இவரது கணவர் சின் னத்தம்பி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் சுப்புலட்சுமி கோவிலாங்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள் ளியின் மாணவிகள் விடுதி யில் இரவு காவலராக பணி புரிந்து வருகிறார்.

    இதற்கிடையே சுப்புலட் சுமி தனது ஊரான எம்.புதூரில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில் சுப்புலட்சுமி வழக்கம்போல் விடுதிக்கு இரவு காப்பாளர் வேலைக்கு சென்று விட்டு நேற்று காலை தனது சொந்த ஊரான எம்.புதூர் கிராமத் திற்கு செல்வதற்காக பேருந் தில் வந்தார்.

    ஒத்தக்கடை பஜார் பகு தியில் இறங்கிய அவர் அங்குள்ள காய்கறிக்கடை யில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு எம்.புதூருக்கு குறுக்கு வழியில் செல்ல எண்ணி நடந்து சென்று கொண்டிருந்தார். அப் போது அவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

    மேலும் எப்பொழுதும் ஆள் நடமாட்டம் அதிக முள்ள பஜார் பகுதியில் நேற் க்கு ஆள் நடமாட்ட மில்லாத நேரத்தை தங்க ளுக்கு சாதகமாக பயன்ப டுத்திகொண்ட அந்த வாலி பர்கள் சுப்புலட்சுமி யிடம் நகை பறிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் சுதாரித்துக் கொண்ட சுப்புலட்சுமி நகை பறி கொடுக்காமல் தப்பி னார். இதுகுறித்து எம்.ரெட்டியாபட்டி போலீஸ் நிலையத்தில் சுப்புலட்சுமி புகார் அளித்தார். இதனை யடுத்து சம்பவம் நடந்த பகுதியான ஒத்தக்கடை பஜார் பகுதியில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிப்பதிவுகளை அடிப்படையாக வைத்து நகை பறிப்பு முயற்சியில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவந்தனர்.

    மேலும் இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரு வரை பிடித்து போலீ சார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×