search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோட்டத்தில்"

    • தோட்டத்தில் ராமகிருஷ்ணன் இறந்து கிடந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குளத்தூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். (வயது 44). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி அருகில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

    இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்த ன்று கல்லூரி அருகில் உள்ள ஒரு தனியார் தோட்ட த்தில் ராமகிருஷ்ணன் இறந்து கிடந்தார்.

    அவருடைய உடலை பெருந்துறை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்ற னர்.

    • பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல் பாளையத்தை சேர்ந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரும்பை அறுவடை செய்த பின் விவசாய தோட்டத்திலேயே கரும்பு தோகைகளை போட்டிருந்தார்.
    • காய்ந்து போன கரும்பு தொகைகளுக்கு தீ வைத்துள்ளார்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல் பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி விவசாயி, இவர் தனது விவசாய தோட்டத்தில் கருப்பு சாகுபடி செய்திருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கரும்பை அறுவடை செய்த பின் விவசாய தோட்டத்திலேயே கரும்பு தோகைகளை போட்டிருந்தார். காய்ந்து போன கரும்பு தொகைகளுக்கு தீ வைத்துள்ளார்.

    அப்போது காற்று பலமாக வீசியதால் அருகில் விவசாயம் செய்யப்படாமல் பல்வேறு செடி கொடிகள் முளைத்து காய்ந்து இருந்த செடிகளில் தீ பரவியது. அப்பகுதியில் இருந்த பொது மக்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் வேகமாக அருகில் இருந்த தோட்டத்துக்கும் பரவியது. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததனர்.

    தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனர் இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாழைத்தோப்பு காட்டில் அருகே முதியவர் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
    • கிராம நிர்வாக அலுவலர் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பஞ்சலிங்கபுரம் அருகே உள்ள பட்டாணி வயல் பகுதியில் மகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    இவரது தோட்டத்தின் வாழைத்தோப்பு காட்டில் அருகே உள்ள சிறிய வாய்க்கால் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு 50 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.

    இது குறித்து சாத்தம்பூர் கிராம நிர்வாக அலுவலர் பூபதி ராஜாவுக்கு பொது மக்கள் தகவல் தெரி வித்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மொடக்குறிச்சி போலீ சாருக்கு தகவல் அளித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மொடக்குறிச்சி போலீசார் வாய்க்கால் அருகே கிடந்த அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் கிடந்த முதியவர் பிணத்தை மீட்டனர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என தெரிய வில்லை.

    இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டாக்டர் சங்கர் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து இது கொலையா? தற்கொ லையா? என தொடர்ந்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது.
    • சேதமடைந்த விவசாயப் பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும் அகலமாகவும் அகழி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (40) இவர் தனது 2 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

    நேற்று இரவு வனப்பகுதியில்11 மணி அளவில் வந்த காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து வாழையை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தன. இதைப் பார்த்த விவசாயி ஜீவாநந்தம் பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்கு தகவல் அளித்தார். விவசாயிகள் ஒன்று சேர்ந்து சப்தம் போட்டும் யானைகளை துரத்தினர்.

    ஆனால் யானை வனப்பகுதியில் செல்லாமல் வாழையை தொடர்ந்து சேதபடுத்தியது. அதிகாலையில் யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றது.

    இதில் யானைகளால் 150 வாழைகள் சேதமடைந்தது. சேதமடைந்த விவசாயப் பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும் அகலமாகவும் அகழி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×