என் மலர்
நீங்கள் தேடியது "The mechanic found dead"
- தோட்டத்தில் ராமகிருஷ்ணன் இறந்து கிடந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குளத்தூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். (வயது 44). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி அருகில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்த ன்று கல்லூரி அருகில் உள்ள ஒரு தனியார் தோட்ட த்தில் ராமகிருஷ்ணன் இறந்து கிடந்தார்.
அவருடைய உடலை பெருந்துறை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்ற னர்.






