என் மலர்
நீங்கள் தேடியது "பிணமாக கிடந்த முதியவர்"
- முல்லைநகர் சின்னப் பசெட்டி தெருவில் உள்ள ஒரு வீட்டில் மேல் மாடியில் வாடகைக்கு ரவி (வயது 60) என்பவர் குடியிருந்து வந்தார்.
- நேற்று முன்தினம் வீடு உள்பக்கமாக பூட்டி யிருந்த நிலையில் இவர் வீட்டுக்குள் இறந்து கிடந்தார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் முல்லைநகர் சின்னப் பசெட்டி தெருவில் உள்ள ஒரு வீட்டில் மேல் மாடியில் வாடகைக்கு ரவி (வயது 60) என்பவர் குடியிருந்து வந்தார். நேற்று முன்தினம் வீடு உள்பக்கமாக பூட்டி யிருந்த நிலையில் இவர் வீட்டுக்குள் இறந்து கிடந்தார். இது பற்றி வீட்டின் உரிமை யாளர், சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார், சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று ரவி உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார், அக்கம் பக்கத்தில் உள்ளவர் களிடம் அவரை பற்றி விசாரணை செய்தபோது அவருடைய முகவரியோ, உறவினர்கள் பற்றிய விபரமோ தெரியவில்லை என்றனர். இறந்த நபரின் வலது காலில் கருப்பு மச்சம், இடது முட்டியின் கீழ் காயத்தழும்பு உள்ளது. எனவே அவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- வாழைத்தோப்பு காட்டில் அருகே முதியவர் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
- கிராம நிர்வாக அலுவலர் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பஞ்சலிங்கபுரம் அருகே உள்ள பட்டாணி வயல் பகுதியில் மகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இவரது தோட்டத்தின் வாழைத்தோப்பு காட்டில் அருகே உள்ள சிறிய வாய்க்கால் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு 50 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
இது குறித்து சாத்தம்பூர் கிராம நிர்வாக அலுவலர் பூபதி ராஜாவுக்கு பொது மக்கள் தகவல் தெரி வித்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மொடக்குறிச்சி போலீ சாருக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மொடக்குறிச்சி போலீசார் வாய்க்கால் அருகே கிடந்த அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் கிடந்த முதியவர் பிணத்தை மீட்டனர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என தெரிய வில்லை.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டாக்டர் சங்கர் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து இது கொலையா? தற்கொ லையா? என தொடர்ந்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- அவர் இன்றுகாலை பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் சுற்றி திரிந்தார். இந்நிலையில் அவர் இன்றுகாலை பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






