சேலம் சூரமங்கலத்தில்பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த முதியவர்

முல்லைநகர் சின்னப் பசெட்டி தெருவில் உள்ள ஒரு வீட்டில் மேல் மாடியில் வாடகைக்கு ரவி (வயது 60) என்பவர் குடியிருந்து வந்தார். நேற்று முன்தினம் வீடு உள்பக்கமாக பூட்டி யிருந்த நிலையில் இவர் வீட்டுக்குள் இறந்து கிடந்தார்.
சேலம் சூரமங்கலத்தில்பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த முதியவர்
Published on

சேலம்:

சேலம் சூரமங்கலம் முல்லைநகர் சின்னப் பசெட்டி தெருவில் உள்ள ஒரு வீட்டில் மேல் மாடியில் வாடகைக்கு ரவி (வயது 60) என்பவர் குடியிருந்து வந்தார். நேற்று முன்தினம் வீடு உள்பக்கமாக பூட்டி யிருந்த நிலையில் இவர் வீட்டுக்குள் இறந்து கிடந்தார். இது பற்றி வீட்டின் உரிமை யாளர், சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார், சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று ரவி உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார், அக்கம் பக்கத்தில் உள்ளவர் களிடம் அவரை பற்றி விசாரணை செய்தபோது அவருடைய முகவரியோ, உறவினர்கள் பற்றிய விபரமோ தெரியவில்லை என்றனர். இறந்த நபரின் வலது காலில் கருப்பு மச்சம், இடது முட்டியின் கீழ் காயத்தழும்பு உள்ளது. எனவே அவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com