search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lying rotting"

    • வாழைத்தோப்பு காட்டில் அருகே முதியவர் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
    • கிராம நிர்வாக அலுவலர் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பஞ்சலிங்கபுரம் அருகே உள்ள பட்டாணி வயல் பகுதியில் மகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    இவரது தோட்டத்தின் வாழைத்தோப்பு காட்டில் அருகே உள்ள சிறிய வாய்க்கால் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு 50 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.

    இது குறித்து சாத்தம்பூர் கிராம நிர்வாக அலுவலர் பூபதி ராஜாவுக்கு பொது மக்கள் தகவல் தெரி வித்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மொடக்குறிச்சி போலீ சாருக்கு தகவல் அளித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மொடக்குறிச்சி போலீசார் வாய்க்கால் அருகே கிடந்த அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் கிடந்த முதியவர் பிணத்தை மீட்டனர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என தெரிய வில்லை.

    இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டாக்டர் சங்கர் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து இது கொலையா? தற்கொ லையா? என தொடர்ந்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×