search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயில் கருகி பெண் பலி"

    சாத்தான்குளம் அருகே சமையல் செய்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சாத்தான்குளம்: 

    சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மனைவி பாக்கியத்தாய் (வயது95). இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். தனுஷ்கோடி இறந்து விட்டார். இதனால் பாக்கியதாய் மகள் ரத்தினம் பராமரிப்பில் இருந்து வந்தார். 

    இந்த நிலையில் நேற்று பாக்கியதாய் வீட்டில் சமையல் செய்ய அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அடுப்பில் தவறி விழுந்தார். இதில் அவரது உடல் முழுவதும் தீப்பிடித்தது. இதில் உடல் கருகி பாக்கிய தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அந்தோணி, சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    அரக்கோணம் அருகே எரிந்த நிலையில் பெண் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே நாகவேடு காலனியை சேர்ந்தவர் தியாகராஜன் என்ற கோபி (வயது 38), காஞ்சீபுரத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி (31). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று காலை தியாகராஜன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். காலை 10.30 மணியளவில் வீட்டின் கழிப்பறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது வளர்மதி தீயில் எரிந்த நிலையில் தீக்காயத்துடன் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், மணிவாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் வளர்மதியின் தந்தை பொன்னுரங்கம் எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது, அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் மனு கொடுத்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.கே.துரைப்பாண்டியன் புகார் மனு மீது தீவிர விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    திசையன்விளையில் தீயில் கருகி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    திசையன்விளை சன்னதி தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி செல்வகுமாரி (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இது வரை குழந்தை இல்லை.

    இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி செல்வகுமாரி தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று செல்வகுமாரி பரிதாபமாக இறந்தார்.

    அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தீக்குளித்தாரா? அல்லது சமையல் செய்யும் போது தீயில் கருகினாரா? என்று தெரியவில்லை. இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேரன் மகாதேவி கோட்டாட்சித் தலைவரும் நேரில் சென்று காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×