என் மலர்
செய்திகள்

திசையன்விளையில் தீயில் கருகி பெண் பலி
திசையன்விளையில் தீயில் கருகி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
திசையன்விளை சன்னதி தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி செல்வகுமாரி (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இது வரை குழந்தை இல்லை.
இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி செல்வகுமாரி தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று செல்வகுமாரி பரிதாபமாக இறந்தார்.
அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தீக்குளித்தாரா? அல்லது சமையல் செய்யும் போது தீயில் கருகினாரா? என்று தெரியவில்லை. இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேரன் மகாதேவி கோட்டாட்சித் தலைவரும் நேரில் சென்று காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story