search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cooking fire"

    சாத்தான்குளம் அருகே சமையல் செய்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சாத்தான்குளம்: 

    சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மனைவி பாக்கியத்தாய் (வயது95). இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். தனுஷ்கோடி இறந்து விட்டார். இதனால் பாக்கியதாய் மகள் ரத்தினம் பராமரிப்பில் இருந்து வந்தார். 

    இந்த நிலையில் நேற்று பாக்கியதாய் வீட்டில் சமையல் செய்ய அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அடுப்பில் தவறி விழுந்தார். இதில் அவரது உடல் முழுவதும் தீப்பிடித்தது. இதில் உடல் கருகி பாக்கிய தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அந்தோணி, சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    தஞ்சையில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து இளம்பெண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதா கோட்டை அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி மீனா (வயது 39). இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மண்எண்ணை கொட்டி மீனாவின் சேலையில் தீப்பிடித்தது. இதனால் அவர் காப்பாத்துங்க... காப்பாத்துங்க என்று கூக்குரலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போராடி தீயை அணைத்தனர். 

    இதையடுத்து உடல் கருகிய நிலையில் இருந்த மீனாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    வீட்டில் சமையல் செய்யும்போது தீப்பிடித்து இளம்பெண் கருகி பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள அத்திபாடியைச் சேர்ந்தவர் பிரபு. விவசாயி. இவரது மனைவி லட்சுமி (வயது 24). 

    இவர் கடந்த 29-ந் தேதி வீட்டில் சமையலுக்காக அடுப்பை பற்ற வைத்துக் கொண்டு இருந்தார். அப்போது அடுப்புக்கு மேலே சிலாப்பில் இருந்த  மண்எண்ணை கேன் எதிர்பாராதவிதமாக எரிந்து கொண்டிருந்த அடுப்பில் தவறி விழுந்தது. இதில் மண்எண்ணை கேன் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த லட்சுமி மீது மண்எண்ணையுடன் தீப்பற்றி கொண்டது. இதில் அவரது உடல் தீ பரவியது. இதனால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு உடனே உறவினர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். 

    இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×