என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரைவிமர்சனம்"

    தமனின் இசை படத்திற்கு மற்றொரு பலம்.

    அகண்டா முதல் பாகத்தில் தனது தம்பி மகள் ஹர்ஷாலிக்கு ஏதாவது கஷ்டம் ஏற்பட்டால் உடனடியாக அங்கு நான் வருவேன் என அகண்டா சத்தியம் செய்திருந்தார். இதில், இருந்து 2ம் பாகம் தொடர்கிறது. ஆண்டுகள் கடந்து செல்ல பாலைய்யாவின் மகள் நன்றாக வளர்ந்து விஞ்ஞானியாக பணிபுரிகிறார். இது ஒருபக்கம் இருக்க, இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்கிற எண்ணத்துடன் எதிர்நாட்டில் உள்ள ஜெனரல், இந்தியர்களை கொன்று குவிக்கிறார்.

    கடவுள் நம்பிக்கையுள்ள இந்திய மக்கள், இனி கடவுளே ஒருவர் இல்லை என்று கடவுளை வெறுக்கும் வகையில் முடிவு கட்ட திட்டமிடுகிறார் எதிர்நாட்டு ஜெனரல். இதற்காக, நாட்டில் உள்ள அரசியல்வாதியுடன் கைகோர்த்து மகா கும்பமேளாவிற்கு வரும் மக்கள் மேல் வைரஸை பரப்பி விடுகிறார்கள்.

    இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. நாடு முழுவதும் பிரச்சனை வெடிக்கிறது. அப்போது, கடவுளே இல்லை என வெறுக்கும் மக்கள் நம்பிக்கையை இழக்கின்றனர். இந்தநிலையில், விஞ்ஞானியான பாலைய்யாவின் மகள் ஹர்ஷாலி, பரவிக் கொண்டிருக்கும் வைரசை அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்கிறார். இது எதிரி நாட்டிற்கு தெரிய வர, விஞ்ஞானிகள் குழுவையும் அழிக்கிறது.

    அங்கிருந்து தப்பிக்கும் ஹர்ஷாலியை கொலை செய்ய அந்த கூட்டம் துரத்துகிறது.எதிரி கூட்டத்திடம் இருந்து ஹர்ஷாலியை காப்பாற்ற அகண்டா வந்தாரா? வைரசை அழிக்க கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை மக்களிடம் கொண்டு சேர்த்தாரா? மக்கள் மத்தியில் கடவுள் நம்பிக்கை வந்ததா? என்பது படத்தின் மீதி கதை..

    நடிகர்கள்

    கதாநாயகனாக நடித்துள்ள பாலகிருஷ்ணா அவருக்கே உரிதான நடிப்பில் மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து செல்கிறார். சண்டை, நடனம், வசனம் என அனைத்திலும் மாஸ். பாலய்யா ரசிகர்களுக்கு அகண்டா 2 ஸ்பெஷல் விருந்து என்றே சொல்லலாம்.

    அகண்டா கதாபாத்திரத்தை தவிர வேறு யாருக்கும் வலுவான ரோல் இல்லை.படம் முழுவதும் பாலய்யாவின் மேஜிக்தான் நிறைந்திருக்கிறது. படம் பார்க்க வருபவர்கள் லாஜிக் எதிர்க்காமல் வந்தால் நல்லது.

    இயக்கம்

    பாலகிருஷ்ணா என்ற கூர்மையான ஆயுதத்தை 4-வது முறையாக பட்டை தீட்டி இருக்கும் இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு, இந்த முறையில் மாஸ் கதையை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

    இசை

    தமனின் இசை படத்திற்கு மற்றொரு பலம்.

    ஒளிப்பதிவு

    அகண்டா 2 படத்தை அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

    சௌந்தர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    அரசு பள்ளி ஆசிரியரான நாயகன் பிரபாகரன், மாணவர்களுக்கு படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சமூகப் பணி மற்றும் அரசியல் பற்றியும் கற்றுக் கொடுத்து, அநீதிகளுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் மனதில் விதைக்கிறார். தொடர்ந்து ஆசிரியர் பிரபாகரனின் அதிரடி நடவடிக்கையால், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் லெனின் வடமலை பாதிக்கப்படுகிறார்.

    இதனால், ஆசிரியர் பிரபாகரனை பழிவாங்குவதற்கு சரியான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் லெனின் வடமலை. இந்த நிலையில், பள்ளியில் புதிதாக வேலைக்கு சேரும் ஆசிரியை மேஹாலி மீனாட்சியும், பிரபாகரனும் காதலிக்கிறார்கள். மேஹாலி மீனாட்சி ஏற்கனவே திருமணமானவராக இருக்கிறார்.

    இறுதியில் திருமணமான மேஹாலி மீனாட்சி பிரபாகரனை காதலிப்பது ஏன்? வில்லன் லெனின் வடமலை, பிரபாகரனை பழி வாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கதாநாயகனாக நடித்திருக்கும் பிரபாகரன், கிராமத்து ஆசிரியர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் மேஹாலி மீனாட்சி, குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்து இருக்கிறார்.

    வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் லெனின் வடமலை, தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் மறைந்த டேனியல் பாலாஜியை நினைவுப்படுத்துகிறார். வில்லன் லெனின் வடமலையின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் துகின் சே குவேரா, வியக்க வைக்கும் விதத்தில் வசன உச்சரிப்பு, உடல் மொழி என்று நடிப்பில் மிரட்டுகிறார்.

    இயக்கம்

    சாதி பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லெனின் வடமலை. தற்போதைய காலக்கட்டத்தில், அறிவியலும், தொழில்நுட்பமும் மிகப்பெரிய வளர்ச்சியடைந்தாலும், இன்னமும் சாதி பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். விறுவிறுப்பான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    இசை

    சௌந்தர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜான்ஸ் வி.ஜெரின், தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.

    ரேட்டிங்- 2/5

    பிரவீன் குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

    குரங்கணி மலைப்பகுதியில் யாழி கிராம மக்களுக்கும் அடிவார பகுதி மக்களுக்கும் 3000 ஆண்டுகால பகை இருந்து வருகிறது. குறிப்பாக யாழி கிராமத்தில் இருக்கும் சாமி சிலையை அடிவார பகுதி மக்கள் அபகரிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்கள். யாழி கிராமத்தைச் சேர்ந்த நாயகன் விமல் கிராம மக்களுக்கும் சாமி சிலைக்கும் பாதுகாவலனாக இருந்து வருகிறார்.

    யாழி கிராமத்தில் சித்ரா பௌர்ணமி அன்று கோவில் திருவிழா நடத்த முயற்சி செய்கிறார்கள். அன்றைய தினத்தில் அடிவார பகுதி மக்கள், சாமி சிலையை திருட நினைக்கிறார்கள். அதே சமயம் மற்றொரு கும்பல் சாமி சிலையை வனப்பகுதி காவல் அதிகாரி ஜான் விஜய் மூலம் திருட திட்டம் போடுகிறார்கள்.

    இறுதியில் யாழி கிராமத்தில் திருவிழா நடைபெற்றதா? சாமி சிலை என்ன ஆனது? சாமி சிலையை விமல் பாதுகாத்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விமல் மிகவும் சாதாரணமாக நடித்திருக்கிறார். பல இடங்களில் நடிக்காமல் பொம்மை போல் நிற்கிறார். செங்குட்டுவன் என்ற பெயரில் இருக்கும் கம்பீரம் நடிப்பில் இல்லை. நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பொம்மி என்ற கதாபாத்திரத்தில் சாதாரண பெண்ணாகவும் ஆக்ரோஷமான பெண்ணாகவும் நடித்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இவரது நடிப்பு மட்டுமே படத்திற்கு பெரிய பலம்.

    வனத்துறை அதிகாரியாக வரும் ஜான்விஜய் படம் முழுவதும் கத்திக் கொண்டே இருக்கிறார். யோகி பாபுவின் காமெடி பெரியதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. வில்லனாக நடித்திருக்கும் கபீர் சிங் கடைசி பத்து நிமிடமே மட்டுமே வந்து கவனத்தை பெற்று இருக்கிறார். அடிவார பகுதி மக்கள் தலைவியாக வரும் மகிமா குப்தா அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

    இயக்கம்

    கோவில் சிலையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன். தெளிவான திரைக்கதை இல்லாமல் படத்தை நகர்த்திருக்கிறார் இயக்குனர். காட்சிகளின் தொடர்ச்சி இல்லாதது வருத்தம். கதாபாத்திரங்களிடையே வேலை வாங்காமல் விட்டிருக்கிறார். நிறைய லாஜிக் மீறல்கள், சம்மந்தம் இல்லாத காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

    இசை

    பிரவீன் குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஒரு சில இடங்களில் மட்டுமே ரசிக்க முடிகிறது.

    ஒளிப்பதிவு

    மனாஸ் பாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். இவரது கேமரா மலைப்பகுதிகளை அழகாக படம் பிடித்து இருக்கிறது.

    ரேட்டிங்- 1.5/5

    சமந்த் நாக் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

    திருப்பரங்குன்றம் பகுதியில் வாழ்ந்து வரும் நாயகன் நிஷாந்த், தனது மாமா லொள்ளு சபா மாறன் நண்பர்கள் பால சரவணன், கும்கி அஸ்வின் ஆகியோருடன் திருச்சிக்கு வேலைக்கு செல்கிறார். அங்கு நாயகி காயத்ரியை பார்த்தவுடன் காதலில் விழுகிறார். பின்னர் அவருடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி சந்திக்கிறார்.

    ஒரு கட்டத்தில் நிஷாந்த் காதலை சொல்லும் போது, காயத்ரி மறுக்கிறார். காதல் தோல்வியை தாங்க முடியாத நிஷாந்த் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். அப்போது ஆமானுஷ்ய சக்தி கொண்ட மொட்டை ராஜேந்திரன், நிஷாந்த் தற்கொலையை தடுக்கிறார்.

    இறுதியில் நிஷாந்த், காயத்ரியுடன் இணைந்தாரா? மொட்டை ராஜேந்திரன் யார்? நிஷாந்த் தற்கொலையை மொட்டை ராஜேந்திரன் தடுக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் நிஷாந்த் ரூசோ காதல், ஆக்ஷன், காமெடி என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் காயத்ரி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    மொட்டை ராஜேத்திரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன், கும்கி அஸ்வின் ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள். அர்ஷத் வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார்.

    இயக்கம்

    காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் பாண்டியன். இதில் பேண்டஸி, காமெடி கலந்த திரைக்கதை அமைத்திருக்கிறார். முதல் பாதி காதல் இரண்டாம் பாதி பேண்டஸி என திரைக்கதையை நகர்த்திருக்கிறார். காமெடி காட்சிகள் பெரிதாக எடுபடவில்லை. முதல் பாதி திரைக்கதை வழக்கமான சினிமா தனம் போல் அமைந்திருப்பது படத்திற்கு பலவீனம்.

    இசை

    சமந்த் நாக் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    ஒளிப்பதிவு

    ஜோன்ஸ் வி ஆனந்த் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

    ரேட்டிங்- 2/5

    தேவாவின் இசையில் பாடல்கள் படத்தின் முதுகெலும்பாக அமைந்திருக்கிறது.

    சுனாமியல் குடும்பத்தை இழந்த நாயகன் கௌதம் கண்ணகி நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தீபா உமாபதியை ஐந்து பேர் சேர்ந்து கடத்தி கற்பழித்து கொன்றதாக கௌதமுக்கு தகவல் கிடைக்கிறது. இதை அறிந்த கௌதம் அவர்களை பழிவாங்க திட்டம் போடுகிறார்.

    இறுதியில் தீபாவிற்கு என்ன ஆனது? அந்த ஐந்து பேர் யார்? கௌதம் அவர்களை பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் கதையின் நாயகனாக நடித்து இருக்கும் கௌதம், கண்ணகி நகர் மொழியை உள்வாங்கி, முக பாவனைகளில் வெளிப்படுத்துகிறார். நாயகியான தீபா உமாபதி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    எல்லா உறவுகளையும் இழந்த பின்பு ஒரு மனிதனின் கடைசி முடிவு என்ன என்பதை மக்களுக்கு காட்டியிருகிறார் இயக்குனர் குணா. சென்னை தமிழ், கண்ணகி நகர், காட்சிப்படுத்திய விதம் அருமை. வலுவான காட்சிகள் இல்லாதது படத்திற்கு பலவீனம்.

    இசை

    தேவாவின் இசையில் பாடல்கள் படத்தின் முதுகெலும்பாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையை தேவையான அளவிற்கு கொடுத்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    பா.மு.முஹம்மது ஃபர்ஹான்  ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

    ரேட்டிங்- 2/5

    படத்தின் பின்னணி இசை பாராட்டக்கூடியது.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகிறார் கதையின் நாயகன் நிவாஸ் ஆதித்தன். ஒரு கட்டத்தில் ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்குகிறார். இதனால், எதிர்பாராத விபரீதத்தை சந்திக்கிறார்.

    இந்த கடனில் சூழல் என்ன ?, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை..

    நடிகர்கள்

    கதையின் நாயகன் நிவாஸ் ஆதித்தன், உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார். அளவாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநய், நாயகனுக்கு இணையாக கவனம் ஈர்க்கிறார்.

    ஆத்விக், எஸ்தர் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.

    இயக்கம்

    ஒரு சம்பவத்தின் மூலம் பல உண்மைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அபிஷேக் லெஸ்லி. உண்மை சம்பவத்தின் பின்னணியில், அதிர்ச்சிகரமான கற்பனை மூலம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஆங்காங்கே படத்தின் ஓட்டத்தில் வரும் தொய்வு படத்திற்கு பலவீனம். கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    இசை

    படத்தின் பின்னணி இசை பாராட்டக்கூடியது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் சபரி நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். 

    ரேட்டிங்- 1.5/5

    ஸ்ரீகாந்த் தேவாவின் இசை குத்தாட்ட பாடலுக்கு ஆட்டம் போட வைக்கிறது.

    நாயகன் கார்த்தீஸ்வரன், பல வழிகளில் மோசடி செய்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பித்து விட நினைக்கும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார்.

    இறுதியில் போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் தப்பித்தாரா? கார்த்தீஸ்வரன் செய்த மோசடிகள் என்ன? மோசடி செய்ய என்ன காரணம்? என்பதே படத்தின் மிதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் கார்த்தீஸ்வரனே படத்தை இயக்கவும் செய்து இருக்கிறார். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஸ்ரீநிதி விசாரணை நடத்தும் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். கார்த்தீஸ்வரன் நண்பர்களாக ஆதவன், அகல்யா வெங்கடேசன் மற்றும் லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி ஆகியோர் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.

    இயக்கம்

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதை படத்தில் விழிப்புணர்வோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்தீஸ்வரன்.

    சொல்ல வந்த கதையை இன்னும் கூடுதலாக அழுத்தமாக சொல்லி இருக்கலாம். மோசடி செய்யும் காட்சிகளை பார்க்கும் போது செல்போனை தொடுவதற்கே பயமாக இருக்கிறது. தினமும் ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை பறிகொடுக்கும் மக்களின் பரிதாப நிலையை அப்படியே சொல்லி இருக்கிறார்.

    இசை

    ஸ்ரீகாந்த் தேவாவின் இசை குத்தாட்ட பாடலுக்கு ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையை அதிக இரைச்சலுடன் கொடுத்து இருக்கிறார்.

    ஔிப்பதிவு

    என்.எஸ்.ராஜேஷ் ஒளிப்பதிவில் காட்சிகளை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    ரேட்டிங்- 2.5/5

    காணாமல் போகும் பிணத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் சாவீ.

    நாயகன் உதய தீப், தனது தந்தையை 2 மாமன்கள் கொலை செய்துவிட்டதாக இருவரையும் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மாமனின் மகளை காதலித்து வரும் உதய தீப் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்.

    இந்த நேரத்தில் மாமன் ஒருவர் விபத்தில் மரணம் அடைகிறார். அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தபோது மாமனின் உடல் காணாமல் போகிறது. பிணத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதேஷ்பாலாவும் குடும்பத்தினரும் தீவிரமாக தேடிக் கொண்டிருந்தபோது இன்னொரு மாமனும் திடீரென மரணமடைகிறார்.

    இறுதியில் காணாமல் போன மாமனின் உடல் கிடைத்ததா? இன்னொரு மாமன் எப்படி இறந்தார்? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் உதய தீப் இயல்பாகவும் காமெடி கலந்தும் நடித்துள்ளார். சில இடங்களில் ஓவர் ஆக்டிங் போல் இருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் ஆதேஷ்பாலா காணாமல் போன பிணத்தையும் இன்னொரு மாமன் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தும் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

    மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாசர், மாஸ்டர் விஜய், கவிதா சுரேஷ், பிரேம், கே.சேஷாத்திரி ஆகியோர் நடிப்பு படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளன.

    இயக்கம்

    காணாமல் போகும் பிணத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆண்டனி அஜித். ஆரம்பத்தில் புரியாமல் செல்லும் திரைக்கதை, இறுதியில் சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ள போதை கலாச்சாரம் பற்றி பேசியிருப்பது சிறப்பு. இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    இசை

    சரண் ராகவன், வி.ஜே.ரகுராம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

    ஒளிப்பதிவு

    பூபதி வெங்கடாசலத்தின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    ரேட்டிங்- 2.5/5

    • இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசை கதையோடு இணைந்து பயணித்து இருக்கிறது.

    கிராமத்தில் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வரும் கீதா கைலாசம், பால் வியாபாரம், விவசாயம் என்று கடுமையாக உழைத்து வருகிறார். இவர் தைரியமான பெண்ணாகவும், மேல் சட்டை (ஜாக்கெட்) அணியாமல் பழமைவாத பெண்மணியாகவும் வலம் வருகிறார்.

    மூத்த மகனான பரணி திருமணமாகி அம்மாவுடன் இருக்க, இரண்டாவது மகன் சரண் நன்றாக படித்து மருத்துவராகிறார். இவர் பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்க, அவரது காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கிறார்கள். பெண் வீட்டார் ஜாக்கெட் அணியாமல் இருக்கும் தனது தாயை பார்த்து தவறாக நினைப்பார்கள் என்று சரண் வருந்துகிறார்.

    இதனால் தனது தாய் மேல் சட்டை அணிய வேண்டும் என்று விரும்புகிறார். இதற்காக அவர் நேரடியாக தனது தாயிடம் சொல்லாமல், அண்ணி மற்றும் ஊர் மக்கள் மூலமாக தாயை மேல் சட்டை அணிய வைக்கிறார். ஆனால், அவர் தினங்களில் மீண்டும் மேல் சட்டையை அணிய மறுக்கிறார்.

    இறுதியில் கீதா கைலாசம் மேல் சட்டை அணிந்தாரா? மேல் சட்டை அணிய மறுக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், ஜாக்கெட் அணியாமல் இருப்பது, சுருட்டு பிடிப்பது படத்தின் முழு கதையையும் தாங்கி பிடித்து இருக்கிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

    மூத்த மகனாக நடித்திருக்கும் பரணி, அவரது மனைவியாக நடித்திருக்கும் தென்றல், இளைய மகனாக நடித்திருக்கும் சரண், அவரது காதலியாக நடித்திருக்கும் முல்லையரசி, சரணின் நண்பராக நடித்திருக்கும் சுதாகர், ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    இயக்கம்

    அங்கம்மாள் என்ற பெண்மணியின் வாழ்வியலை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன். சுதந்திரமான பெண்ணாக இருந்தாலும், பிள்ளைகள் மூலம் அவரது சுதந்திரம் பரிக்கப்படுவதும், அவர்களுக்காக அடிபனிவதும் என்று திரைக்கதை அமைத்து இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.

    இசை

    இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசை கதையோடு இணைந்து பயணித்து இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    அன்ஜாய் சாமுவேல் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது. பல காட்சிகள் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

    ரேட்டிங்- 3.5/5

    • நண்பன் விஷ்ணு, கெளஷிக் பணிபுரியும் நிறுவனத்தில் டீம் லீடராகிறான்.
    • காதல் மோதலுடன் கமர்ஷியலாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்.

    நாயகன் கெளஷிக் உட்பட நான்கு பேர் சென்னையிலுள்ள ஒரு பூங்காவில் சந்தித்துப் பழகி நட்பாகிறார்கள். பூங்கா மூலம் கிடைத்த நண்பன் விஷ்ணு, கெளஷிக் பணிபுரியும் நிறுவனத்தில் டீம் லீடராகிறான். ஒரு கட்டத்தில் அந்த விஷ்ணுவை கெளஷிக் கடுமையாக தாக்குகிறான். நட்பில் விரிசல் ஏற்படுகிறது. அது மட்டுல்லாது பூங்காவுக்கு தன் காதலியுடன் வந்து போய்க் கொண்டிருக்கும் இன்னொரு இளைஞனையும் கெளஷிக் அடிக்கிறார்.

    இறுதியில் கெளஷிக் அவர்கள் மீது அப்படி என்னதான் கோபம்? எதற்காக அப்படி நடந்துகொள்கிறார்? நண்பர்களுக்குள் உருவான பிரச்சனை தீர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கெளஷிக், காதல், கோபம் என நடிப்பில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் ஆரா, காதலுக்குத் தேவையான மயக்கம், கிறக்கம், நடனம் என தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

    பிராணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்ரீதேவி, ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன், கோவிந்தராஜ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    நட்பு, உறவு, சந்தோஷத்தை பூங்காக்களில் சுற்றித்திரிகிற மனிதர்கள் மூலம் பெற முடியும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். இதில் காதல் மோதலுடன் கமர்ஷியலாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். திரைக்கதை வழுவில்லாமல் நகர்த்தி இருக்கிறார்.

    அகமது விக்கியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆர்.ஹெச்.அசோக்கின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். 

    மாலைமலர் ரேட்டிங் : 2 / 5

    • மிருகங்கள் எல்லாம் சேர்ந்து மனிதர்களை போல வீடு வாசல், வேலை என ஒரு நகரத்தில் வாழந்தால் எப்படி இருக்கும்.
    • உலகிலேயே மிக சோம்பேறியான ஸ்லோத் மிருகங்கள் ஜூடோபியாவில் அரசு அதிகாரிகளாக வேலை செய்கின்றன.

    மிருகங்கள் எல்லாம் சேர்ந்து மனிதர்களை போல வீடு வாசல், வேலை என ஒரு நகரத்தில் வாழந்தால் எப்படி இருக்கும். அந்த நகரம் தான் 'ஜூடோபியா'

    2016இல் வெளியான முதல் பாகத்தில் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு காவல்துறை வேளையில் சேர முயல் குடும்பத்தை சேர்ந்த ஜூடி ஹாப்ஸ் செல்கிறாள்.

    அங்கு ஒரு திருட்டு நரி (நிக் வைல்ட்) உதவியுடன் ஒரு வழக்கின் மர்மங்களை ஜூடி ஹாப்ஸ் கண்டுபிடிப்பதே கதை. இறுதியில் நிக் வைல்டும் காவல் அதிகாரி ஆகிவிடுகிறான்.

    இந்நிலையில் 'ஜூடோபியா 2' படத்தின் கதை முதல் பாகத்திலிருந்து தொடர்கிறது. காவல் துறையில் பார்ட்னர்களாக இருந்து வரும் ஜூடி ஹாப்ஸ் மற்றும் நிக் வைல்ட் இருவரிடையே பிரிவு ஏற்படுகிறது.

    ஜூடி ஒரு பாம்பு ஜூடோபியாவில் ஊடுருவியதாக சந்தேகிக்கிறாள். ஜூடோபியா ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பாம்புகள் அங்கு வந்தது என அவள் கூறியதை யாரும் நம்பவில்லை.

    ஆனால் ஜூடி நிக்கை சம்மதிக்க வைத்து அவனுடன் சேர்ந்த இதுகுறித்து விசாரணையை தொடங்குகிறாள்.

    இதற்கிடையில், ஜூடோபியாவின் நிறுவனர்களான லிங்க்ஸ்லி என்ற சிங்கக் குடும்பம் ஒரு விருந்து வைக்கிறது. இந்த விருந்தின்போது ஒரு திருட்டு நடக்கிறது. பாம்பு ஏன் ஊருக்குள் வந்தது, அதற்கும் இந்த திருட்டுக்கும் என்ன தொடர்பு, ஜூடியும், நிக்கும் ஒற்றுமையாக இந்த மர்மத்தை அவிழ்த்தார்களா என்பதே மீதிக்கதை.

    நடிகர்கள்: படம் அனிமேஷன் என்பதால் டப்பிங் கலைஞர்கள் கையில் தான் கதாபாத்திரங்களின் உயிர் உள்ளது. மேலும் முதல் படத்தை போல காமெடி வசனங்கள், சம்பவங்களுக்கு பஞ்சமில்லை.

    இயக்கம்: அனிமேஷன் காட்சியமைப்புகள் ஜூட்டோபியாவுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன.கதை மீதான பார்வையாளரின் நம்பிக்கையை நிறுவுகின்றன. ஒவ்வொரு சிறிய காட்சியும் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் அமர்க்களப்படுகிறது.

    நகரில் மனிதர்களை போல வெவ்வேறு பணிகளை செய்யும் வெவ்வேறு விலங்குகளை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக உலகிலேயே மிக சோம்பேறியான ஸ்லோத் மிருகங்கள் ஜூடோபியாவில் அரசு அதிகாரிகளாக வேலை செய்வது அங்கு கள எதார்த்தம் போலும். மேலும் மிருகங்களுக்கு இடையே இருக்கும் முரண்களை வைத்து நகைச்சுவை, சமூக கட்டமைப்பு, வர்க்க பேதங்கள் என அசல் நவநாகரீக மனித நகரங்களை கண் முன் கொண்டு வந்ததற்கு பாராட்டுகள்.

    நிக், ஜூடி இடையே ஏற்படும் சச்சரவுகள், சண்டை என இருந்தாலும், இருவருக்கும் உள்ள கெமிஸ்ரிக்கு 100 மார்க் கொடுக்கலாம்.

    மொத்தத்தில் கத்தி, துப்பாக்கி, சிவப்பு பெயிண்ட் (ரத்தம்) என கண்களை புண்ணாக்கும் படங்களுக்கு மத்தியில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் செல்ல ஏதுவான டிசம்பர் ட்ரீட் இந்த 'ஜூடோபியா 2' 

    மாலைமலர் ரேட்டிங் : 3.5 / 5

    வன்முறை சூழ்ந்த ரவுடிகளின் வாழ்க்கையின் மறுபக்கத்தை சொல்லும் கதை "ப்ரைடே".

    மைம் கோபிக்கு அடியாளாக இருப்பவர் நாயகன் அனிஷ் மாசிலாமணி. அனிஷ் மற்றும் கே.பி.ஒய் தீனா சேர்ந்து ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அப்போது, தீனா எதிர்பாராதவிதமாக எதிரி கும்பலிடம் மாட்டும்போது, அனிஷ் மாசிலாமணி அவரை காப்பாற்றி இருவரும் ஒரு இடத்தில் தஞ்சம் அடைகின்றனர்.

    தன்னை கொலை செய்ய முயன்றவர்களை அடியாட்களுடன் தேடி வருகிறார்கள். ஒரு பக்கம் இப்படி இருக்க, மறுபக்கம் தீனாவும் அனிஷ் மாசிலாணியுடன் இருந்துக் கொண்டே அவரை கொலை செய்ய திட்டமிடுபவருக்கு உதவுகிறார்.

    இறுதியில், அனிஷ் மாசிலாமணி யாரை, எதற்காக கொலை செய்ய முயன்றார்? தீனா ஏன் அதற்கு உதவுகிறார்? இதில் இருந்து அனிஷ் மாசிலாமணி தப்பித்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக் கடை..

    நடிகர்கள்

    கே.பி.ஒய் தீனா எளிமையான கதாபாத்திரத்தில் நடித்து 2ம் பாதியில் கதையின் திருப்புமுனையாக இருக்கிறார். நடிகர் அனிஷ் மாசிலாமணி அளவான நடிப்பு மூலம் ரவுடி கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். மைம் கோபி தனது அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    இயக்கம்

    படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஹரி வெங்கடேஷ், வன்முறை சூழ்ந்த ரவுடிகளின் மறுபக்கத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார் ஹரி வெங்கடேஷ். ஒரு சாதாரண கதையை சுவாரஸ்யமாக எடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அது இயக்குனருக்கு கைக்கொடுக்கவில்லை.

    இசை

    படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பலம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜானி கதைக்களத்தின் பயங்கரத்தை பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு.

    ரேட்டிங்- 1.5/5

    ×