search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருடும் கும்பல்"

    • தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • முன்னுக்குபின் முரணாக கூறியதால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் மற்றும் இதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடு போய்வந்தது. இதனால் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளை குறிவைத்து திருடும் கும்பலை பிடிக்க திட்டக்குடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் திட்டக்குடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது இந்த சர்வீஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜ் அருகே சந்தேகத்திற்கு இடமாக கும்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த போலீசார் அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக கூறியதால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் திட்டக்குடி மா.புடையூர் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ராஜகோபால் (வயது 24), போத்திரமங்கலம் முத்தழகன் மகன் ராஜா (20), பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் மகன் வசந்தகுமார் (20), திருமாந்துறை அண்ணாநகர் வீரமுத்து மகன் அன்பரசன் (20) என்பது தெரியவந்தது.

    மேலும் ராமநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மோட்டார் சைக்கிள்களை திருடி செல்வதை ஒப்பு க்கொண்டனர். இவர்கள் இரவு, பகல் நேரத்தில் கூட சாலை மற்றும் வீட்டின் அருகே நின்று கொண்டிருக்கும் மோ ட்டார் சைக்கிள்களை கள்ள ச்சாவி பயன்படுத்தியும், மோட்டார் சைக்கிளில் போடப்ப ட்டுள்ள லாக்கை உடைத்தும் இந்த திருட்டில் ஈடுபட்டு வந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடும் கும்பலான ராஜகோபால், ராஜா, வசந்தகுமார். அன்பரசன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து தொடர்ந்து வேறுபகுதியில் இந்த மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு உள்ளனாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 3 விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • அங்கு தனது இருசக்கர வாகனத்தை மெடிக்கல் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
    • சி.சி.டிவி கேமராவில் உள் பதிவுகள் வைத்து விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே தொழுதூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது67). இவர் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் ராமநத்ததில் உள்ள மெடிக்கலுக்கு மருந்து வாங்க சென்றார்.பின்னர் அங்கு தனது இருசக்கர வாகனத்தை மெடிக்கல் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். பின் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை.

    இது குறித்து ராஜேந்திரன் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமராவில் உள் பதிவுகள் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் மட்டும் இறங்கி வந்து டிவிஎஸ்.எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தை திருடி செல்கின்றனர். மேலும் திருடி சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • விலை உயர்ந்த சுமார் 1000 மீட்டருக்கும் மேற்பட்ட மின் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
    • இது குறித்து அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வட பொன் பரப்பி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தொழுவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், கோவிந்தசாமி, சேகர், கோவிந்தராஜ் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள். இவர்கள் தங்களது விவசாய நிலங்களுக்கு மின் மோட்டார் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் காணங்காடு எல்லைக்குட்பட்ட பகுதி யில் விவசாயிகள் விவ சாயத்திற்கு பயன்படுத்தும் மின்மோட்டோர்களின் விலை உயர்ந்த சுமார் 1000 மீட்டருக்கும் மேற்பட்ட மின் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

    இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் தங்களது விவசாய நிலங்களுக்கு மின் மோட்டார் மூலம் நீர் பாசனம் செய்ய முடியாமல் செய்வதறியாது பாதிப்படைந்துள்ளனர். திருடி சென்ற மின் வயர்களின் மதிப்பு ஒரு லட்சம் இருக்கும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வடபொன் பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாய நிலங்களில் மின் வயர்களை திருடி சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். விவசாய நிலங்களிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    ×