search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் காப்பகம்"

    • ஒரு வாரத்துக்கு மேலாகியும் தப்பி ஓடிய சிறுவர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை.
    • குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 20 குழந்தைகளை வேறு சில மாவட்டங்களில் செயல்படும் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    திருச்சி:

    திருச்சி சத்திரம் வி.என்.நகர் பகுதியில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு உரிமம் பெற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு குழந்தை திருமணங்களால் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர் சிறுமிகள், பல்வேறு காரணங்களால் வீடுகளில் இருந்து வெளியேறி காவல் துறையினரால் மீட்கப்படும் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு காப்பக வார்டனின் கையில் இருந்த சாவியை பறித்துக் கொண்டு 16 வயதுள்ள ஒடிசா மற்றும் ராமநாதபுரம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 4 சிறுவர்கள் தப்பி ஓடினர்.

    அதைத்தொடர்ந்து மறுநாள் அந்த காப்பகத்தின் பொறுப்பாளர் ராஜேஷ் கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.

    ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் தப்பி ஓடிய சிறுவர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை.

    அதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப் குமார் அந்தக் காப்பக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி சிறுவர்கள் தப்பி ஓடியது குறித்து விளக்கம் கேட்டார். பின்னர் அந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 குழந்தைகளை வேறு காப்பகங்களுக்கு மாற்றுவதற்கு உத்தரவிட்டார். அதன்படி குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 20 குழந்தைகளை வேறு சில மாவட்டங்களில் செயல்படும் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    மறு உத்தரவு வரும் வரை அந்த சிறுவர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ள காப்பகங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என கலெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தனியாயா காப்பகத்தில் 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. அங்கிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
    • இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூர் கிராமத்தில் அன்பு ஜோதி ஆசிரமம் உள்ளது. இதனை கேரளாவைச் சேர்ந்த ஜீபின் பேபி (வயது 45) நடத்தி வருகிறார். இங்கு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு ஊர்களில் இருந்து ஆதரவற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்ப ட்டவர்கள் தங்கியுள்ளனர்.மனநலம் பாதிக்கப்பட்ட ஜாபருல்லா (45) என்பவரை இந்த காப்பகத்தில் திருப்பூரைச் சேர்ந்த ஹனிதின் 2021 அக்டோபர் 1-ந் தேதியன்று சேர்த்தார். பின்னர் 2022-ம் வருடம் ஜாபருல்லாவை காண ஹனிதின் அன்பு ஜோதி காப்பகத்திற்கு வந்தார். அங்கு அவரைக் காணவில்லை. இது குறித்து ஆசிரம உரிமையாளரிடம் விசாரித்த போது, ஜாபருல்லாவை பெங்களூரு காப்பத்திற்கு மாற்றியுள்ளதாக கூறினார். அங்கும் ஜாபருல்லாவை காணவில்லை.இது தொடர்பாக ஹனிதின் கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகாரினை பெற மறுத்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்அதன் மீதான உத்தரவின் பேரில் வருவாய்த் துறை விழுப்புரம் ஆர்.டிஒ. ரவிச்சந்திரன், செஞ்சி போலீஸ் டி.எஸ்.பி. பிரியதர்ஷினி, சமூக நல அலுவலர் ராஜாம்பாள், மாற்றுத் திறனாளி நல அலுவலர் தங்கல் மற்றும் போலீசார் காப்பகத்திற்கு சென்றனர். அங்கிருந்த 137 பேர் மற்றும் காப்பக உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். இதில் காப்பகத்தில் அடிப்படை வசதிகள் இன்றி சுகாதாரமற்று இருந்தது. மேலும், இந்த காப்பகத்தில் இருந்து 17 பேர் காணாமல் போனது தெரியவந்ததுகுரங்கு கடித்ததுஆய்வு நடத்து கொண்டிருந்த போது, காப்பக உரிமையாளர் ஜீபின் பேபியால் வளர்க்கப்படும் குரங்கு அங்கிருந்த 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. அங்கிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து காப்பகத்தில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அங்கிருந்து மாலை 4 மணிக்கு வெளியேறினர். தொடர்ந்து இன்றும் விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

    மருத்துவ சிகிச்சைமேலும், விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறையை சேர்ந்த மருத்துவக் குழு நேற்று இரவு காப்பகத்திற்கு விரைந்தது. குரங்கு கடித்தவர்களுக்கும், அங்கிருந்த அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளித்து மாத்திரை மருந்துகள் வழங்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • இதனால் அதிர்ச்சி அடைந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் அம்சா சிறுமி மற்றும் சிறுவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
    • இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி வழக்கு பதிவு செய்து சிறுமி மற்றும் சிறுவனை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் வன்னியர் பாளையத்தில் தனியார் காப்பகம் உள்ளது. இங்கு குழந்தைகள் நலக்குழு மூலமாக கடலூர் குப்பன்குளம் சேர்ந்த 12 வயது சிறுமி, 7 வயது சிறுவன் ஆகியோரை தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். நேற்று இரவு புதிதாக விடப்பட்ட சிறுவன் மற்றும் சிறுமி ஆகியோரை காணவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் அம்சா சிறுமி மற்றும் சிறுவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் புதுநகர் ேபாலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி வழக்கு பதிவு செய்து சிறுமி மற்றும் சிறுவனை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • விருதுநகர் மாவட்டத்தில் தனியார் காப்பகத்தில் 2 மாணவிகள் மாயமானார்கள்.
    • ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் உள்ள தனியார் தொண்டு குழந்தைகள் காப்பக நிர்வாகி எலிசபத் (வயது 40). இவர் பாண்டியன் நகர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கடந்த வாரம் காப்பகத்தில் கீழராஜகுலராமன், தாயில்பட்டியை சேர்ந்த 15 வயதுடைய 2 மாணவிகள் சேர்ந்தனர். சம்பவத்தன்று சாப்பிட செல்லும் போது இருவரும் காப்பகத்தில் இருந்து மாயமானார்கள். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவி

    சிவகாசி சாரதா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் கார்த்தீஸ்வரி (21). பட்டதாரியான இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். இதே போல் திருத்தங்கலை சேர்ந்த தர்மராஜ் மகள் லட்சுமிபிரியா (22) என்பவரும் மாயமானார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.சிவகாசி காமராஜர் காலனியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி சங்கரலிங்கபுரத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி மாயமானார். ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×