search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case Records"

    • இதனால் அதிர்ச்சி அடைந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் அம்சா சிறுமி மற்றும் சிறுவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
    • இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி வழக்கு பதிவு செய்து சிறுமி மற்றும் சிறுவனை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் வன்னியர் பாளையத்தில் தனியார் காப்பகம் உள்ளது. இங்கு குழந்தைகள் நலக்குழு மூலமாக கடலூர் குப்பன்குளம் சேர்ந்த 12 வயது சிறுமி, 7 வயது சிறுவன் ஆகியோரை தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். நேற்று இரவு புதிதாக விடப்பட்ட சிறுவன் மற்றும் சிறுமி ஆகியோரை காணவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் அம்சா சிறுமி மற்றும் சிறுவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் புதுநகர் ேபாலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி வழக்கு பதிவு செய்து சிறுமி மற்றும் சிறுவனை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×