search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜஸ்டின் லாங்கர்"

    எங்கள் மண்ணில் இந்தியா சிறப்பாக விளையாடியது, அதேபோல் நாங்கள் இந்தியாவில் சிறப்பாக விளையாடினோம் என ஆஸி. பயிற்சியாளர் லாங்கர் தெரிவித்துள்ளார். #INDvAUS
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 3-2 எனத் தொடரை கைப்பற்றியது.

    இதற்கு முன் இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. தற்போது இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது.

    இந்தியாவிற்கு எதிராக தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், “எல்லா புகழும் ஆஸ்திரேலிய வீரர்களைச் சேரும். நாங்கள் ஒரு போட்டிக்கு எப்படி தயாராகுவோமோ அதேபோல்தான் தயாராகினோம். ஆனால் எங்கள் வீரர்கள் முக்கியமான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடினார்கள்.

    வீரர்களின் செயல்பாடு வியக்கத்தக்க பெருமை அளிக்கிறது. உலகக்கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்வது கடுமையாக இருக்கப் போகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியா வந்ததில் இருந்து எங்கள் அணி நம்ப முடியாத வளர்ச்சி அடைந்துள்ளது.

    விராட் கோலியை போன்ற வீரரை நான் பார்த்ததே இல்லை. இந்திய அணி சிறப்பான வகையில் போட்டியிடும் உத்வேகத்தை வெளிப்படுத்தினார்கள். ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. அதேபோல் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டது” என்றார்.
    உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் இல்லையென்றால் அது பைத்தியக்காரத்தனம் என்று ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். #Smith #Warner
    ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடைக்காலம் மார்ச் மாதம் 29-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இருவரும் ஆஸ்திரேலிய தேசிய அணியில் இடம் பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகக்கோப்பைக்கான அந்த அணியில் வார்னர் இடம்பெற வாய்ப்புள்ளது. ஸ்மித் ஆஷஸ் தொடரில்தான் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித், வார்னரை தேர்வு செய்யவில்லை எனில், அது பைத்தியக்காரத்தனமானதாக இருக்கும் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் “இருவரும் அணிக்கு திரும்பும் முன் சில போட்டிகளில் விளையாடுவது அவசியம். இது எல்லாம் நிர்வாகத்தின் ஒரு பகுதி. நாம் சற்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவர்களுக்கு இது கடினமான நேரம் என்பது எங்களுக்குத் தெரியும். அணிக்கும் கடினமான நேரம்தான். கடந்த 9 அல்லது 10 மாதங்களாக ஒருங்கிணைந்து சென்று கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.



    தற்போதும், வரும் காலத்திலும் அவர்கள் எவ்வளவு கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களும் வாய்ப்பை தேடுவார்கள், நாங்களும் (ஆஸ்திரேலியா) வாய்ப்பை தேடுவோம்.

    நாம் இரண்டு சிறந்த வீரர்களை பற்றி பேசி வருகிறோம். நாம் உண்மையிலேயே இரண்டு சிறந்த வீரர்களை பற்றி பேசவில்லை. அவர்களை நாங்கள் உலகக்கோப்பைக்கான அணியில் சேர்க்கவில்லை என்றால், அது பைத்தியக்காரத்தனமாகும்” என்றார்.
    ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா அணியின் விராட் கோலி. அவரின் வருகைக்காக காத்திருக்க முடியாது என ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். #AUSvIND
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படுகின்றனர்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்டின்போது ஆஸ்திரேலியா பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்கியது. இதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கேப்டன் ஸ்மித் மற்றும் துணைக்கேப்டன் வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடைவிதித்தது.

    ஸ்மித் மீதான தடைக்காலம் சுமார் 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில், சில நாட்களுக்கு முன் முதன்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஸ்மித், இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் ஸ்மித் ஆஸ்திரேலியா அணியின் விராட் கோலி என்று தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘ஸ்மித் அணிக்கு திரும்பும் வரை எங்களால் காத்திருக்க முடியாது. ஸ்மித் ஆஸ்திரேலியா அணியின் விராட் கோலி.

    கூடுதலாக சில ஓவர்களை வீசுவதற்காக இன்னொரு பந்து வீச்சாளர் இருந்தால், எங்கள் அணி மெல்போர்னில் சம அளவு பேலன்ஸ் கொண்ட அணியாக இருக்கும். மிட்செல் மார்ஷ் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லாத ஆடுகளத்தில் முக்கியமான நபராக திகழ்வார். மெல்போர்ன் ஆடுகளத்தில் லேசான ஈரப்பதம் உள்ளது. என்றாலும் அதன் வரலாறு எங்களுக்கு நன்றாகத் தெரியும்’’ என்றார்.
    பால் டேம்பரிங் என்பது சர்வதேச அளவிலான பிரச்சனை என்று ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார். #JustinLanger
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடும்போது கேப் டவுனில் நடைபெற்ற போட்டியில் வார்னர், ஸ்மித், பான்கிராப்ட் ஆகியோருக்கு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஒரு வருடம் தடைவிதித்துள்ளது.

    இந்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. முக்கிய வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் ஆஸ்திரேலியா அணி திணறி வருகிறது.

    உட்சக்கட்டமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பால் டேம்பரிங் தனித்துவிடப்பட்ட விஷயம் அல்ல. எனது காலக்கட்டத்தில் இதுபோன்று நடக்கவே நடக்காது என்று ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜஸ்டின் லேங்கர் கூறுகையில் ‘‘விளையாட்டு நடந்த கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலிய வீரர்கள் உப்பத்தாளை (sandpaper) என்படி எடுத்தார்கள் என்பதை ஒரு நொடி என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. எனக்கு தெரிந்த வகையில் பால் டேம்பரிங் என்பது உலகளவில் இருந்து கொண்டு வருகிறது. இது மிகவும் கவலைத்தரக்கூடிய விஷயம். குறிப்பாக ஆடுகளம் பந்து வீச்சுக்கு எடுபடாத நிலையில்தான் இதுபோன்ற சம்பவம் அரங்கேறுகிறது’’ என்றார்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கர் டி20 தேர்வு குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். #JustinLanger
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டி20 தேர்வு குழுத் தலைவராக முன்னாள் வீரர் மார்க் வாக் இருந்தார். இவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் அந்த பதவி காலியாக இருந்தார். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் செயல்திறன் மேலாளர் பாட் ஹோவார்ட் கூறுகையில், ‘‘ஐசிசி டி20 உலகக்கோப்பை வரும் 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்வு குழுத்தலைவராக லேங்கர் நியமிக்கப்பட்டிருப்பது சிறப்பானது.



    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அனைத்து போட்டிகளுக்கும் பயிற்சியாளராக விளங்கும் ஜஸ்டின் லேங்கர், உள்ளூர் போட்டியான பிக் பாஷ் லீக் தொடரையும், அத்தொடரில் விளையாடும் வீரர்கள் பற்றியும் அறிவதில் பெரும் ஆற்றல் மிக்கவர்.

    மேலாளர்கள் மற்றும் பிக் பாஷ் லீக் தொடர் பயிற்சியாளர்களோடு இணைந்து ஜஸ்டின் லேங்கர் ஆஸ்திரேலிய அணியின் டி20 தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வார்” எனக் கூறினார்.
    இங்கிலாந்திற்கு எதிராக 6 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளது ஆஸ்திரேலியா. #ENGvAUS
    ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியது. முதலில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஈவுயிரக்கமின்றி ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது. 5-0 என ஒயிட்வாஷ் செய்தது. ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்தது.

    டி20 போட்டியிலும் 222 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா 193 ரன்கள் எடுத்து 193 ரன்கள் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அத்துடன் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 30 வருடத்திற்குப் பிறகு ஒருநாள் தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது.



    மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையிலும், அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு பலம் வாய்ந்த அணியாக திரும்புவோம் என்று பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ஆலன் பார்டன் என்னிடம் கேட்டிருந்தால் பந்தை சேதப்படுத்தியிருப்பேன் என ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது.

    பின்னர் நடைபெற்ற விசாரணையில் வார்னர்தான் இதற்கு மூலக்காரணமாக இருந்தார் என்பது தெரியவந்தது. அத்துடன் கேப்டன் ஸ்மித் இந்த விவகாரம் தனக்குத் தெரியும் என்றார். இதனால் பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும், வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தால் தலைமை பயிற்சியாளராக இருந்த லீமென் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக ஜஸ்டின் லாங்கர் தற்போது தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



    சீனியர் வீரர்கள் சொல்லியிருந்தால் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியிருக்கனும். நான் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அடிலெய்டில் 1993-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்டில் அறிமுகமானார். அப்போதுள்ள அணி வேறு. அந்த காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்றார்.

    மேலும், இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘பந்தை சேதப்படுத்த வேண்டும் என்று ஆலன் பார்டன் என்னிடம் கேட்டிருந்தால், நான் பந்தை சேதப்படுத்தியிருப்பேன். ஏனென்றால், நான் அதிக அளவில் பயந்திருக்கமாட்டேன். ஆனால் ஆலன் பார்டன் இதுபோன்று ஒருபோதும் என்னிடம் கேட்டிருக்கமாட்டார். பயிற்சியாளர் பாபி சிம்சனும் என்னை கொன்றிருக்கமாட்டார்’’ என்றார்.
    ×