search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜக்கி வாசுதேவ்"

    • இந்நிலையில்,ஜக்கி வாசுதேவ் தற்போது பூரண குணமடைந்து உள்ளார்.
    • இதையொட்டி இன்று மாலையில் மருத்துவமனையில் இருந்து ஜக்கி வாசுதேவ் டிஸ்சார்ஜ் ஆனார்.அவர் நலமுடன் காரில் ஏறி புறப்பட்டார்

    கோவை 'ஈஷா' யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் கடும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவரது மூளையில், ரத்த கசிவு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ஜக்கி வாசுதேவ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு கடந்த 17- ந்தேதி மூளை பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    கடந்த 10 நாட்களாக மருத்துவமனை கண்காணிப்பு சிகிச்சையில் இருந்தார். ஜக்கி வாசுதேவ் நலமுடன் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா அறக்கட்டளை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவித்து வீடியோ ஒன்றும் வெளியானது.அதில் சத்குருவின் உடல்நிலை முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.




    இந்நிலையில்,ஜக்கி வாசுதேவ் தற்போது பூரண குணமடைந்து உள்ளார்.இதையொட்டி இன்று மாலையில் புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஜக்கி வாசுதேவ் டிஸ்சார்ஜ் ஆனார்.அவர் நலமுடன் நடந்து சென்று காரில் ஏறி புறப்பட்டார்

    அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதாரெட்டி சத்குருவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    ஈஷா அறக்கட்டளை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் 'சத்குருவிற்கு சிறப்பான சிகிச்சை அளித்த டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர், டாக்டர் எஸ். சாட்டர்ஜீ மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஒட்டு மொத்த குழுவிற்கும் ஈஷா அறக்கட்டளை மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறது". என்று  கூறி உள்ளது.

    • ஷாரிக்கின் பயங்கரவாத தாக்குதல் பட்டியலில் சுற்றுலா மையமான ஈஷா யோகா மையமும் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • ஷாரிக், ஆதியோகி சிலையை வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்திருந்தது குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

    கோவை:

    கர்நாடக மாநிலம் மங்களூரில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ மற்றும் மங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குண்டு வெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் தனது வாட்ஸ்அப்பில் டி.பி.யாக கோவை வெள்ளிங்கிரி அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இருக்கும் ஆதியோகி சிலையை வைத்திருந்தான். மேலும் அதில் பிரேம்ராஜ் என்ற பெயரையும் பதிவிட்டிருந்தான்.

    இதனால் ஷாரிக் ஈஷா யோகா மையம் சென்றானா? என்பது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கோவை தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஷாரிக் ஈஷா யோகா மையத்திற்கு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, ஷாரிக்கின் பயங்கரவாத தாக்குதல் பட்டியலில் சுற்றுலா மையமான ஈஷா யோகா மையமும் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஷாரிக், ஆதியோகி சிலையை வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்திருந்தது குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஷாரிக், ஆதியோகி சிலையை டிபியாக வைத்துள்ளார். அவர் ஆதியோகி மீதான பற்றின் காரணமாக வைக்கவில்லை. அவருடைய மத அடையாளத்தை மறைப்பதற்காகவே ஆதியோகி புகைப்படத்தை டி.பி.யாக வைத்துள்ளார்.

    மிரட்டல்கள் என்பது எனக்கு புதிது அல்ல. எனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் எண்ணிலடங்கா மிரட்டல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நான் கண்டு கொள்வதில்லை. நான் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×