search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜகி வாசுதேவ்"

    தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஈஷா யோக மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் பாராட்டியுள்ளார். #SwachhataHiSeva #CleanIndia #JaggiVasudev #TNGovt
    கோவை:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் அடுத்த மாதம் 2-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

    இதனையொட்டி இன்று முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை ‘தூய்மையே சேவை’ என்னும் விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்து மக்களிடம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினார்.

    தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிரதமர் மோடியின் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிகழ்ச்சி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி சிலை முன்பு நடைபெற்றது. இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, தமிழக உள்ளாட்சி மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை கலெக்டர் ஹரிஹரன், மத்திய நீர் மற்றும் சுகாதாரத் துறை இணை செயலாளர்அருண் பரோகா, கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும், சுற்றுப்புற கிராம மக்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு முன்னதாக சத்குரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    உடல், வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்ற பண்பு நம் பாரத கலாச்சாரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. ஹரப்பா, மொகஞ்சதரோ ஆகிய இடங்களில் ஆய்வு செய்த பிரிட்ஷ் தொல்லியல் துறையினர் அங்கு டிரைனேஜ் வசதி இருந்துள்ளதை கண்டு வியந்துள்ளனர். 5000 வருடங்களுக்கு முன்பு இதுபோன்று வேறு எந்த கலாச்சாரத்திலும் இந்த டிரைனேஜ் முறை உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து பல்வேறு படையெடுப்புகள் காரணமாக நமது தேசம் 20, 30 வருடங்களுக்கு ஏழ்மை நிலையில் இருந்தது. இதனால், இந்த பண்பு மறைந்து போனது.

    தற்போதும் நம் தேசத்தில் இருப்பவர்கள் உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதில் போதிய கவனம் செலுத்தி வருவதை நீங்கள் கவனிக்கலாம். காலையில் குளித்து முடித்த பிறகு தான் உணவு அருந்துவதோ அல்லது வேறு பணிகளுக்கு செல்கின்றனர். ஆனால், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும் பண்பு மறைந்து போயுள்ளது.


    இந்நிலையில், இந்த பண்பை மீட்டெடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தால் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

    குறிப்பாக, தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை தூய்மையாக வைத்து கொள்ளவும் புதிய கழிப்பறைகள் கட்டவும் ரூ.60 கோடியை ஒதுக்கி உள்ளது.

    தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற பொதுமக்களும், தன்னார்வ அமைப்புகளும் அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் 37 சிறு நகரங்களில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த ஈஷா அறக்கட்டளை சார்பில் சிட்டிசன் கமிட்டிக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், வார்டு வாரியாக குழுக்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அடுத்த 10 வருடங்களில் நம் தேசத்தை தூய்மையான தேசமாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு சத்குரு கூறினார்.

    பின்னர் பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துள்ள ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருவுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.  #SwachhataHiSeva #CleanIndia  #JaggiVasudev #TNGovt
    செல்போன் என்பது ஒரு சிறந்த நவீன கண்டுபிடிப்பு, அதை விழிப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். #JaggiVasudev
    சென்னை:

    இந்திய இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள்நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் இளைஞரும் உண்மையும் என்ற முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து விளக்குவதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளனர். அந்த இளைஞர்களிடம் சக்தி இருக்கிறது. அவர்களுக்கு தேவையான தெளிவும் உள்நிலையில் ஒரு சம நிலையையும் உருவாக்கி கொடுத்தால் அந்த சக்தியை ஒரு மகத்தான சக்தியாக மாற்ற முடியும்.

    அதன் அடிப்படையில் இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள் நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் ‘இளைஞரும் உண்மையும்’ என்ற நாடு தழுவிய முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது.

    கேள்வி:- மொபைல் அடிமைத் தனத்தில் இருந்து இளைஞர்களை எப்படி மீட்பது?


    சத்குரு பதில்:- மொபைல் என்பது ஒரு சிறந்த நவீன கண்டுபிடிப்பு. அதை நல்ல முறையில் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக, கட்டாயத்தின் அடிப்படையில் மொபைல் போனை பயன்படுத்துவதால் தான் அதற்கு அடிமையாகி உள்ளனர். நாம் விழிப்புணர்வுடன் அதை பயன்படுத்தினால் அந்த அடிமைத் தனத்தில் இருந்து விடுபடலாம்.

    கேள்வி:- இளைஞர்களின் தற்கொலையை தடுக்க உங்களுடைய ‘இளைஞரும் உண்மையும்’ என்ற பயணம் எப்படி உதவும்?

    பதில்:- இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது வருத்தம் அளிக்க கூடிய ஒன்று. குறிப்பாக, 15 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் நம்முடைய தற்போதைய கல்வி முறையில் உள்ள அழுத்தங்களால் அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர் என சொல்லப்படுகிறது.

    எனவே, கல்விமுறையில் கொள்கை அளவில் தேவையான மாற்றங்கள் செய்வதற்கு மத்திய அரசுடன் பேசி வருகிறோம். பள்ளி, கல்லூரிகளில் 50 சதவீதம் நேரம் மட்டுமே கல்வி கற்பதற்காக ஒதுக்க வேண்டும். மீதமுள்ள 50 சதவீதத்தை விளையாட்டு, இசை, பாரம்பரிய கலைகள் போன்றவற்றுக்காக ஒதுக்க வேண்டும் என பரிந்துரைக்க உள்ளோம்.

    கேள்வி:- நீங்கள் நடத்தும் ‘இளைஞரும் உண்மையும்’ என்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் நகர்புறங்களில் தான் நடைபெறுகிறது. இதனால் கிராமப்புற மாணவர்கள் எப்படி பயன்பெறுவார்கள்?

    பதில்:- கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்துக்காக ஈஷா பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 9 இடங்களில் ஈஷா வித்யா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகள் அனைத்தும் தொலைதூர கிராமப் புறங்களில் தான் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், 9,000 கிராமப்புற மாணவர்கள் நகர் புறங்களுக்கு இணையாக தரமான ஆங்கில வழி கல்வி கற்கின்றனர். மேலும், ஈஷா வித்யா பள்ளிகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு முழு இலவச கல்வி வழங்கப்படுகிறது.

    இதுமட்டுமின்றி, தமிழகத்தில் 400 அரசு பள்ளிகளிலும், ஆந்திராவில் 4000 அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் தரமான கல்வி பெறுவதற்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    கேள்வி:- இந்தியாவில் நிறைய வேலையின்றி சிரமப்படுகின்றனர். போதிய வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?

    பதில்- நம்முடைய இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடு. இங்கு மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப போதிய தொழில் வளர்ச்சிகள் இன்னும் உருவாகவில்லை. அரசு வேலை என்பது வெகு சிலருக்கு மட்டும் தான் கிடைக்கும். மேலும், இளைஞர்கள் படித்து பட்டம் வாங்கி விட்டு பிறரிடம் வேலை கேட்டு செல்வதை சற்று குறைக்க வேண்டும். அவர்களே நேரடியாக மக்களுக்கு பயன்படும் வகையில் தொழில் தொடங்க வேண்டும்.

    கேள்வி:- மத்திய அரசுக்கு நீங்கள் அளிக்கும் பரிந்துரையில் விவசாயத் துறைக்கும் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள்?


    பதில்:- தற்போது விவசாயம் செய்து கொண்டிருக்கும் விவசாயிகளில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே தங்களுடை சந்ததியினர் விவசாயம் செய்ய வேண்டும் என விரும்புகின்றனர். இதே நிலை நீடித்தால் அடுத்த 20 ஆண்டுகளில் நமது நாட்டின் உணவு பாதுகாப்பு என்பது பெரியளவில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஆகவே, புதிய கல்வி கொள்கை உருவாக்கும் போது அதில் விவசாய கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்.

    பெற்றோருடன் சேர்ந்து சிறு வயதில் இருந்தே வயலில் இறங்கி வேலை பார்த்தால் தான் விவசாயத்தை கற்றுக் கொள்ள முடியும். கல்லூரியில் படித்து பட்டம் பெற்றால் மட்டும் விவசாயம் செய்துவிட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள்நிலையில் ஒருசம நிலையை உருவாக்கும் நோக்கத்துடன் “இளைஞரும் உண்மையும்” என்ற ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது.

    இதன் தொடக்கமாக இம்மாதம் (செப்டம்பர்) கோவை, சென்னை, பெங்களூரு, மைசூர், டெல்லி, ஐதராபாத், மும்பை, புனே, அகமதாபாத், சில்லாங்க், வாராணாசி என நாட்டின் பல்வேறு பகுதிகளில் 18 தலை சிறந்த பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    ஐ.ஐ.எம். பெங்களூரு, ஐ.ஐ.டி மும்பை, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஐ.ஐ.எம். அகமதாபாத் உள்ளிட்ட புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் ‘இளைஞரும் உண்மையும்’ என்ற நிகழ்ச்சி அடுத்தடுத்து நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சிகளில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு இளைஞர்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார். இளைஞர்களும், மாணவர்களும் தாங்கள் விரும்பும் எந்த கேள்வியையும் சத்குருவிடம் கேட்க முடியும்.

    மேலும், இந்நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள், கேள்வி பதில்கள் யூடியூப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தப்பட உள்ளது. #JaggiVasudev
    மதிப்பெண்களை நோக்கிய கல்வி முறையை மாற்ற வேண்டும் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் வலியுறுத்தினார். #JaggiVasudev
    சென்னை:

    இந்திய இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள்நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் இளைஞரும் உண்மையும் என்ற முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து விளக்குவதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    நன்மைக்கு எதிர்மாறாக செல்போன் பயன்பாடு மாறிவிட்டது. கல்வி சுமையால் தற்கொலை அதிகரித்துள்ளது. மதிப்பெண்ணை நோக்கிய கல்வி முறையை மாற்றாவிட்டால் தற்கொலைகளை தடுக்க முடியாது. பள்ளிகளில் 50 சதவீத நேரம் மட்டுமே கல்வி போதிக்க வேண்டும்.

    நாடு முழுவதும் கல்வித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு புதிய திட்டத்தை தயார் செய்து அரசுக்கு கொடுக்க உள்ளோம்.

    கோவை, சென்னை, பெங்களூரு, மைசூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத், சில்லாங், வாரணாசி என நாட்டின் பல்வேறு பகுதிகளில் 18 பல்கலைக்கழகங்களின் மாணவர்களை சந்திக்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #JaggiVasudev
    ×