search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்துத் தகராறு"

    • ஆஸ்பத்திரியில் தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • தாக்குதல் நடத்தி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆக்க னூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு ராஜா என்ற ராஜேந்திரன், கிருஷ்ணன், அசோக்ராஜ், தர்மராஜ் என்ற 4 மகன்கள் உள்ளனர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்ற னர். இவர்களில் ராஜேந்திர னுக்கும், கிருஷ்ணணுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அசோக்ராஜூக்கும், தர்ம ராஜூக்கும் திருமணம் ஆக வில்லை. ராஜேந்திரனை தவிர மற்று 3 பேரும் பரம சிவத்திடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளனர். அப்போது மூத்த மகன் ராஜேந்திரன் பின்னர் பார்ப்போம் என்று கூறி வந்தார். இந்நிலையில் தற்போது கடைசி மகனான தர்மராஜ் மீண்டும் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். பின்னர் தர்மராஜ் தனது அண்ணன் அசோக்ராசுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் திட்டக்குடி இடைச்செருவாய் அய்யனார் கோவில் அருகே மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த ராஜேந்திரன், அவரது மகன் சக்திவேல் மற்றும் சிலர் சேர்ந்து தர்மராஜ், அசோக்ராஜ் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்து அவர்கள் வைத்தி ருந்த கம்பியால் 2 பேரை யும் பலமாக தாக்கினர். இதில் வலிதாங்க முடியா மல் அசோக்ராஜ் அங்கிருந்து தப்பித்து அய்யனார் கோவில் அருகில் இருந்த காட்டு பகுதிக்குள் சென்றார். தர்மராஜை அந்த கும்பல் தலை, கை, கால்களில் பலமாக தாக்கியது. இந்த தாக்குதலில் தர்மராஜ் ரத்த வெள்ளத்தில் சாலையில் சுருண்டு விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றது. அந்த வழியாக கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள், வாகனங்களில் வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து திட்டக்குடி போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரிவித்த னர்.

    தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தர்மராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து தாக்குதல் நடத்திய ராஜேந்திரன் உள்ளிட்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். சொத்திற்காக தம்பியை அண்ணனே கும்பலுடன் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×