search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேர்வலாறு"

    • கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கட்டுக்கடங்காத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
    • இதன் காரணமாக ஊருக்குள் வெள்ளம் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது.

    திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்தது. வரலாறு காணாத மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சி அளித்தன. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இதனால் கலெக்டர் அலுவலகம், ஜங்ஷன், ரெயில் நிலையம் சாலை போன்று ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளை மழை வெள்ளத்துடன் தாமிரபரணி ஆற்று நீரும் சேர்ந்து மூழ்கடித்தன. இதனால் மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

    மீட்புப்படையினர் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனர். திருநெல்வேலி புறநகர் பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல் சென்றது.

    இந்த நிலையில் நேற்றிரவு முதல் மழை குறைந்துள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் செல்லும் வெள்ளத்தின் அளவும் கணிசமாக குறைந்துள்ளது.

    நேற்று காலை ஆற்றை மூழ்கடித்து சென்ற வெள்ளம் இன்று சுமார் 15 அடி குறைந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் நெல்லை சந்திப்பு, கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் சாலை போன்ற பகுதிகளில் வெள்ளம் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியுள்ளது.

    இன்று கனமழை பெய்யாவிடில், மாலைக்குள் நீர் வடிந்துவிடும் என கூறப்படுகிறது. இதற்கிடையே பல இடங்கள் தீவு போல் மாறியுள்ளது. அந்த இடங்களில் இருந்து மீட்புப்படையினர் படகு மூலம் மக்களை வெளியேற்றினர். இரவு பகலாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

    • தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
    • தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தாமிரபரணி ஆற்றில் சுமார் 40 ஆயிரம் கனஅடி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சியளிக்கின்றன. சாலைகள், தெருக்களில் ஆற்றில் வெள்ளம் ஓடுவதுபோல் ஓடுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் காயல்பட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்துள்ளது.

    காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 84.5 செ.மீ. மழை பெய்துள்ளது. திருச்செந்தூரில் 66.9 செ.மீ. மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 60.70 செ.மீ. மழை பெய்துள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 59.7 செ.மீ. மழையும், பாளையங்கோட்டையில் 42.0 செ.மீ. மழையும, அம்பாசமுத்திரத்தில் 41.6 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

    • அம்பாசமுத்திரத்தில் அதிகபட்சமாக 41.66 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
    • மணிமுத்தாறில் 31.70 செ.மீட் மழை பெய்துள்ளது.

    திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலியின் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இன்று காலை 4.30 நிலவரப்படி 41.66 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. மணிமுத்தாறில் 31.70 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

    தற்போதும் மழை பெய்து வருவதால் அம்பையில் உள்ள மணிமுத்தாறு அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 86.66 அடி உயரமாக இருந்த நிலையில், ஒன்று ஒரே நாளில 108.8 அடியாக உயர்ந்துள்ளது.

    அணைக்கு தற்போது 17 அயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் 143.6 அடி உயரம் கொண்டி கரையாறு அணையில் 133 அடி உயரமாக நீர்மட்டம் உள்ளது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் இந்த மூன்று அணைகளும் விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதாவது அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் இந்த மூன்று அணைகளிலும் இருந்து சுமார் 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருகிறது. ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    தற்போது 80 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் ஓடுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்று கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ×