search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோக்கியா 4.2"

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் இரண்டு புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. #Nokia



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்த நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்கள் நோக்கியா இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களும் வலைதளத்தில் இடம்பெற்றிருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. முன்னதாக நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் நோக்கியா 3.2 ஜெர்மனியில் முன்பதிவு செய்யப்படுகிறது.

    விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இடம்பெறாத நிலையில், இன்னும் சில தினங்களில் ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கலாம் என தெரிகிறது.



    நோக்கியா 3.2 சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் TFT LCD ஸ்கிரீன், செல்ஃபி நாட்ச்
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட்
    - 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, F2.2/1.12µm
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.2/1.12µm
    - பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை
    - ஆண்ட்ராய்டு 9 பை
    - மைக்ரோ யு.எஸ்.பி. 
    - ஃபேஸ் அன்லாக்
    - கைரேகை சென்சார் (32 ஜி.பி. மெமரி மாடலில் மட்டும்)

    சர்வதேச சந்தையில் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஸ்டீல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை 139 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.9,873) என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷனின் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


     
    நோக்கியா 4.2 சிறப்பம்சங்கள்:

    - 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
    - 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. பிரமரி கேமரா, F2.2/1.12µm பிக்சல்
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, F2.2/1.75µm பிக்சல் 2 பேஸ் டிடெக்‌ஷன் மற்றும் பிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.0/1.12µm பிக்சல்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - கைரேகை சென்சார்
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - வைபை, வோல்ட்இ, ப்ளூடூத்

    சர்வதேச சந்தையில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சிக்னேச்சர் சேண்ட் பின்க் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) முதல் துவங்குகிறது.
    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது இரு மோட்டார்சைக்கிள்களின் விநியோக விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #JawaMotorcycles



    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இரு மோட்டார்சைக்கிள்களுக்கும் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், முன்பதிவுகள் செப்டம்பர் 2019 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனர் அனுபம் தரேஜா தனது ட்விட்டரில், ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள் மார்ச் மாதத்தின் நான்காவது வாரத்தில் இருந்து விநியோகம் செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார். இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார். 



    அறிமுகம் செய்யப்படும் போது ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. பின் இரண்டு ஜாவா மோட்டார்சைக்கிள்களும் செப்டம்பர் 2019 வரை முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும், எத்தனை மோட்டார்சைக்கிள்கள் முன்பதிவு செய்யப்பட்டன என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    தற்சமயம் வரை ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் நாடு முழுக்க சுமார் 100 விற்பனையகங்களை திறந்திருக்கிறது. விநியோகம் துவங்கியதும் வாடிக்கையாளர்கள் மோட்டார்சைக்கிளுக்கான முழு தொகையை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம். 

    இந்தியாவில் ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்கள் விலை முறையே ரூ.1.69 லட்சம் மற்றும் ரூ.1.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இரு மாடல்களிலும் 293சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது.
    சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Nokiamobile #MWC19



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஐந்து புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்தது. இதில் நோக்கியா 9 பியூர் வியூ மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையை தொடர்ந்து பார்ப்போம்.

    இதில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் ஐந்து பிரைமரி கேமரா செட்டப் கொண்டிருக்கிறது. நோக்கியாவின் புதிய ஃபிளாக்‌ஷிப் மாடலாக உருவாகி இருக்கும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.



    நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    - வயர்லெஸ் சார்ஜிங்

    நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.49,650) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 4.2 சிறப்பம்சங்கள்:

    - 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
    - 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. பிரமரி கேமரா, F2.2/1.12µm பிக்சல்
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, F2.2/1.75µm பிக்சல் 2 பேஸ் டிடெக்‌ஷன் மற்றும் பிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.0/1.12µm பிக்சல்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - கைரேகை சென்சார்
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - வைபை, வோல்ட்இ, ப்ளூடூத்

    நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சிக்னேச்சர் சேண்ட் பின்க் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) முதல் துவங்குகிறது.
    சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பட்ஜெட் விலையில் மூன்று புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 # #Nokiamobile



    பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. 

    நோக்கியாவின் புதிய மொபைல்களான நோக்கியா 1 பிளஸ், நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 210 மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கிறன.



    நோக்கியா 1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் FWVGA+ IPS டிஸ்ப்ளே
    - குவாட்கோர் மீடியாடெக் MT6739WW பிராசஸர்
    - 1 ஜி.பி. ரேம்
    - 8 ஜி.பி. மெமரி
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, ஃபிளாஷ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - ஆண்ட்ராய்டு 9 பை (கோ எடிஷன்)
    - 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - மைக்ரோ யு.எஸ்.பி.

    நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரெட், புளு மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,030) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 3.2 சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் TFT LCD ஸ்கிரீன், செல்ஃபி நாட்ச்
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட்
    - 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, F2.2/1.12µm
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.2/1.12µm
    - பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை
    - ஆண்ட்ராய்டு 9 பை
    - மைக்ரோ யு.எஸ்.பி. 
    - ஃபேஸ் அன்லாக்
    - கைரேகை சென்சார் (32 ஜி.பி. மெமரி மாடலில் மட்டும்)

    நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஸ்டீல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை 139 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.9,873) என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷனின் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 210 சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே
    - மீடியாடெக் MT6260A பிராசஸர்
    - வி.ஜி.ஏ. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 16 எம்.பி. இன்டெர்னல் மெமரி
    - எஃப்.எம். ரேடியோ
    - எம்.பி.3 பிளேயர்
    - ஃபேஸ்புக், ஸ்நேக் கேம்
    - செயலிகளை டவுன்லோடு செய்ய ஆப் ஸ்டோர்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 1020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்

    நோக்கியா 210 மொபைல் போன் சார்கோல், ரெட் மற்றும் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 35 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2,480) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்களின் விநியோக விவரங்களை பார்ப்போம். #Jawa #Jawa42



    ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் ஆட்டோம1பைல் சந்தையில் ரீ-எண்ட்ரி கொடுத்தது. ஜாவா மற்றும் ஜாவா 42 என இரு மோட்டார்சைக்கிள்களை முறையே ரூ.1.64 லட்சம் மற்றும் ரூ.1.55 லட்சம் விலையில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் அறிமுகம் செய்தது. 

    இரு ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. ரூ.5000 முன்பணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் ஜாவா அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது விற்பனையகம் சென்று முன்பதிவு செய்யலாம். ஜாவா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் செப்டம்பர் 2019 வரை வாகனங்கள் விற்று தீர்ந்ததாக அறிவித்துள்ளது. எனினும், மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு நடைபெறுகிறது.



    ஜாவா 42 மாடலில் 293சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. புது என்ஜின் பி.எஸ். VI ரக எமிஷன் கொண்டிருக்கிறது. ஜாவா பெராக் மாடலில் 334சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பெரிய போர் மற்றும் ஒரேவித ஸ்டிரோக் கொண்டிருக்கிறது. 

    ஜாவா மாடலில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் மஹிந்திரா மோஜோ மாடலில் வழங்கப்பட்டுள்ளதைப் போன்றதாகும். மஹிந்திரா மற்றும் ஜாவா இணைந்து புதிய மோட்டார்சைக்கிளின் என்ஜின் சத்தம் முந்தைய 2-ஸ்டிரோக் ஜாவா மாடல்களை போன்று ஒலிக்கும் படி உருவாக்கியுள்ளன. 

    புது ஜாவா மாடல்கள் மூன்று வித நிறங்கள்: ஜாவா பிளாக், ஜாவா மரூன் மற்றும் ஜாவா கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஜாவா 42 மாடல் ஹேலி டீல், கேலக்டிக் கிரீன், ஸ்டார்லைட் புளு, லூமினஸ் லைம், நெபுலா புளு மற்றும் கொமெட் ரெட் என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது.
    ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவன வாகனங்களின் விநியோகம் விரைவில் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. #jawamotorcycles #jawafortytwo



    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்களின் விநியோகத்தை அடுத்த மாத வாக்கில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் ரீஎன்ட்ரி இந்தியாவில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. 

    புதிய ஜாவா பைக்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை அனைத்து யூனிட்களும் விற்றுத் தீர்ந்ததாக அந்நி்றுவனம் முன்னதாக அறிவித்தது. புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களின் முன்பதிவு டிசம்பர் 25 ஆம் தேதியுடன் நிறைவுற்ற நிலையில், இதன் அடுத்தக்கட்ட முன்பதிவு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 

    ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் 100 விற்பனையகங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 60 ஜாவா விற்பனையகங்கள் டிசம்பர் 2018க்குள் திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.



    ஜாவா 42 மற்றும் ஜாவா என இரு மோட்டார்சைக்கிள் மாடல்களை முறையே ரூ.1.55 லட்சம் மற்றும் ரூ.1.64 லட்சம் விலையில் அறிமுகம் செய்தது. இரண்டு மோட்டார்சைக்கிள்களுடன் ஜாவா நிறுவனம் ஜாவா பெராக் என்ற மோட்டார்சைக்கிளை ரூ.1.89 லட்சம் விலையில் அறிமுகம் செய்தது.

    புதிய ஜாவா 42 மாடலில் 293சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. புது என்ஜின் பி.எஸ். VI ரக எமிஷன் கொண்டிருக்கிறது. ஜாவா பெராக் மாடலில் 334சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் வெளியான தகவல்களின் படி 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களில் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. புதிய டூயல்-சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் கொண்ட ஜாவா மோட்டார்சைக்கிள்கள் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி கொண்ட மாடல்களின் விலை சாதாரண மாடல்களை விட ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். சமீபத்தில்  ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் இரண்டு விற்பனையகங்கள் பூனேவின் பேனர் மற்றும் சின்ச்வாட் நகரங்களில் துவங்கப்பட்டது.
    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் புதிய மோட்டார்சைக்கிள்களின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #JawaMotorcycles



    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் புதிய மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் என அழைக்கப்படும் புதிய மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களாக இருந்தன. 

    இந்தியாவில் என்ட்ரி-லெவல் ஜாவா 42 விலை ரூ.1.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) என்றும், ஜாவா பெராக் மாடல் விலை ரூ.1.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் புதிய மோட்டார்சைக்கிள்கள் ராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு நேரடி போட்டியாக அமைந்திருக்கிறது. சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய கான்டினென்டல் ஜி.டி. 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மாடல்களை அறிமுகம் செய்தது. 

    ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் மாடல்களில் ரெட்ரோ வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இவை பார்க்க ஏற்கனவே பிரபலமாக இருந்த ஜாவா மாடல்களைப் போன்று காட்சியளிக்கிறது. முந்தைய ஜாவா மாடல்களை போன்று, புதிய மாடல்களின் என்ஜின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.



    புது ஜாவா 42 மாடலில் 293சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. புது என்ஜின் பி.எஸ். VI ரக எமிஷன் கொண்டிருக்கிறது. ஜாவா பெராக் மாடலில் 334சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பெரிய போர் மற்றும் ஒரேவித ஸ்டிரோக் கொண்டிருக்கிறது. 

    ஜாவா மாடலில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் மஹிந்திரா மோஜோ மாடலில் வழங்கப்பட்டுள்ளதைப் போன்றதாகும். மஹிந்திரா மற்றும் ஜாவா இணைந்து புதிய மோட்டார்சைக்கிளின் என்ஜின் சத்தம் முந்தைய 2-ஸ்டிரோக் ஜாவா மாடல்களை போன்று ஒலிக்கும் படி உருவாக்கியுள்ளன. 

    புது ஜாவா மாடல்கள் மூன்று வித நிறங்கள்: ஜாவா பிளாக், ஜாவா மரூன் மற்றும் ஜாவா கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஜாவா 42 மாடல் ஹேலி டீல், கேலக்டிக் கிரீன், ஸ்டார்லைட் புளு, லூமினஸ் லைம், நெபுலா புளு மற்றும் கொமெட் ரெட் என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. #JawaMotorcycles #Jawa42 #JawaPerak
    இஸ்ரோ சார்பில் அடுத்த ஆறு மாதங்களில் 10 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். #ISRO #PSLVC42 #Sivan
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் நேற்று இரவு 10 மணி 8 நிமிடங்களுக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

    பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.

    இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.சி-42 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.



    இந்நிலையில், இஸ்ரோ சார்பில் அடுத்த ஆறு மாதங்களில் 10 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் கூறுகையில், பிஎஸ்எல்வி சி-42  ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இரு செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. 2 செயற்கைக்கோள்களும் பூமியில் இருந்து 583 கி.மீ புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. 17 நிமிடம் 45 வினாடிகளில் இரு செயற்கைக்கோள்களும் நிலை நிறுத்தப்பட்டது.

    2 செயற்கைக்கோள்களும் நிலப்பரப்பு ஆய்வு, பேரிடர் கால கண்காணிப்பு கடல் வாழ் வழி போக்குவரத்தை கண்காணிக்கும். ஒட்டுமொத்த விஞ்ஞானிகளுக்கும் செயற்கைகோள் வெற்றி காணிக்கையாக்கப்படுகிறது. செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு மிகவும் எளிமையான ராக்கெட் பிஎஸ்எல்.வி.

    வரும் காலங்களில் செலுத்த உள்ள செயற்கைக்கோள்கள் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு உதவியாக இருக்கும். அடுத்தாண்டு தொடக்கத்தில் சந்திராயன்- 2 விண்ணில் செலுத்தப்படும்.

    பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் வெற்றி எதிர்கால திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும். அடுத்த 6 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்தார். #PSLVC42 #ISRO #Sivan
    இஸ்ரோ சார்பில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #ISRO #PSLVC42 #Modi
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இன்று இரவு 10 மணி 8 நிமிடங்களுக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.



    நோவாசர் 445 கிலோவும், எஸ்1-4 444 கிலோவும் எடை கொண்டவை. பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.

    இந்நிலையில், இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.சி-42 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
     
    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், இஸ்ரோ சார்பில் ஸ்ரீஹஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்தின் இரண்டு செயற்கைக்கோள்களை செலுத்தியுள்ளோம். ராக்கெட்டை வெற்றிகரமாக நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். #ISRO #PSLVC42 #Modi
    ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.#ISRO #PSLVC42
    ஐதராபாத் :

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

    நோவாசர் 445 கிலோவும், எஸ்1-4 444 கிலோவும் எடை கொண்டவை. பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.



    இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 33 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 1 மணி 8 நிமிடத்தில் தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் இன்று இரவு 10 மணி 8 நிமிடங்களுக்கு ராக்கெட் வெற்றிகரமாக  விண்ணில் ஏவப்பட்டது. #ISRO #PSLVC42 
    ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டுக்கான 33 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று தொடங்கிய நிலையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) இரவு அது விண்ணில் ஏவப்படுகிறது. #ISRO #PSLVC42
    ஸ்ரீஹரிகோட்டா:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இன்று இரவு 10 மணி 7 நிமிடங்களில் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

    நோவாசர் 445 கிலோவும், எஸ்1-4 444 கிலோவும் எடை கொண்டவை. பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.

    இதற்காக 3 நிலைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டது.

    இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 33 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று (சனிக்கிழமை) பகல் 1 மணி 8 நிமிடத்தில் தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை தீவிரமாக விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

    விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி 7 நிமிடங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதால், சென்னைவாசிகள் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்தபடியே ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப் பாய்வதை காணலாம்.

    வானம் மேக மூட்டம் இல்லாமல் தெளிவாக இருந்தால், பொதுமக்கள் அனைவரும் இதனை கண்டுகளிக்க முடியும். இது வானில் ஒரு வர்ண ஜாலம் போல் காட்சி அளிக்கும்.

    மேற்கண்ட தகவலை இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.  #ISRO #PSLVC42
    பூமி கண்காணிப்பு செயற்கைகோளை, பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டில் பொறுத்தி, வரும் ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தற்போது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் ஒருங்கிணைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த ராக்கெட்டில் செலுத்துவதற்காக 800 முதல் 1,000 கிலோ எடைகொண்ட பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து வருகிறது.

    மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்த 250 கிலோ எடைகொண்ட 20 முதல் 30 செயற்கைகோள்களையும் இணைத்து வரும் ஆகஸ்டு மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த புதிய வாடிக்கையாளர்களும் தங்கள் செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோவிடம் அளித்து உள்ளனர். இவற்றை செலுத்துவதற்கான ஆயத்தபணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு ஏவப்படும் 4-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-42 ஆகும். அதில் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 3-வதாக உள்ளது.

    வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் உள்ள செயற்கைகோள்களை வாங்கி இஸ்ரோவுக்கு அளித்து வரும் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் தற்போது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் மூலம் விண்ணுக்கு ஏவுவதற்காக 20 முதல் 30 செயற்கைகோள்களை வாங்கி இஸ்ரோவுக்கு அளித்து உள்ளது.

    தகவல் தொடர்புக்காக 5 ஆயிரத்து 400 கிலோ எடையில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘ஜி.சாட்- 11’ செயற்கைகோளை பிரெஞ்சு கயானாவில் இருந்து ஐரோப்பிய நாட்டு ராக்கெட்டில் விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதற்கான இறுதிகட்ட சோதனை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் நடந்து வருகிறது. விரைவில் இதை விண்ணில் செலுத்தும் தேதி அறிவிக்கப்படும்.

    இஸ்ரோ இதுவரை 237 வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது.

    அதேபோன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் ராக்கெட்டுகள் ஆய்வு செய்யும் ஆய்வகம் ரூ.630 கோடியிலும், ராக்கெட் ஒருங்கிணைப்பு வசதி கொண்ட மையம் ரூ.475 கோடி மதிப்பிலும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப்பணிகள் அனைத்தும் நடப்பாண்டு இறுதியில் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    அதற்கு பிறகு முதல் ஏவுதளத்தில் இருந்து 15 ராக்கெட்டுகளையும், 2-வது ஏவுதளத்தில் இருந்து 11 ராக்கெட்டுகளையும் ஏவும் திறனை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையம் பெறும்.

    இந்த தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள். 
    ×