search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sriharikota"

    • ஆதித்யா-எல்1, செப்டம்பர் 1 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது
    • செப்டம்பர் 30 அன்று பூமியின் தாக்கத்திலிருந்து விடுபட்டு பயணிக்க தொடங்கியது

    கடந்த செப்டம்பர் 2 அன்று இந்திய அரசாங்கத்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அமைப்பினால், ஆந்திர பிரதேச ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து, சூரியனை குறித்த ஆராய்ச்சிகளுக்காக இந்தியாவின் முதல் முயற்சியாக பிஎஸ்எல்வி-சி57.1 (PSLV-C57.1) ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட விண்கலன், ஆதித்யா-எல்1 ஆர்பிடர் (Aditya-L1 Orbiter).

    தனது பயணப்பாதையில் கடந்த செப்டம்பர் 30 அன்று இந்த விண்கலன் பூமியின் தாக்கத்திலிருந்து விடுபட்டு சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான பாதையில் அது அடைய வேண்டிய இலக்கான முதல் லெக்ராஞ்சியன் புள்ளி எனப்படும் எல்1 புள்ளியை நோக்கி பயணித்தது.

    அதன் தற்போதைய நிலை குறித்து இஸ்ரோ தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் தெரிவித்திருப்பதாவது:

    ஆதித்யா-எல்1 விண்கலத்தின் செயல்பாடு திட்டமிட்டபடி நன்றாக உள்ளது. தனது பயண தடத்தில் அது செய்து கொள்ள வேண்டிய மாற்றங்களுக்கான ஒரு நடவடிக்கையான "டிராஜக்டரி கரெக்ஷன் மென்யூவர்" (Trajectory Correction Maneuver) வழிமுறையை நேற்று முன் தினம் ஆதித்யா 16 நொடிகளில் வெற்றிகரமாக செய்தது. எல்1 புள்ளியை அடைவதற்கு முன்பு கடந்த செப்டம்பர் 19 அன்றே டிரான்ஸ்-லெக்ராஞ்சியன் புள்ளியை தொடுதல் நடவடிக்கையும் முறையாக நடைபெற்றதை தொடர்ந்து தற்போதைய இந்த நடவடிக்கை தேவைப்பட்டது. தொடர்ந்து ஆதித்யா விண்கலன், தான் செல்ல வேண்டிய பாதையில் சரியான திசையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

    இவ்வாறு இஸ்ரோ அறிவித்திருக்கிறது.

    • 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
    • ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி விண்ணில் பாய்வதற்கு 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று தொடங்கியது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.

    இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

    செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. வாகனங்கள் வழிசெலுத்துவதற்கு திட்டமிடப்பட்ட 2-வது தலைமுறை செயற்கைகோள்களில் முதன்மையானது.

    அடுத்த தலைமுறைக்கான என்.வி.எஸ். வரிசை செயற்கைகோள்கள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து மேம்படுத்தும். இந்த தொடர் சேவைகளை விரிவுபடுத்த கூடுதலாக 'எல்1 பேண்ட் சிக்னல்'களை உள்ளடக்கியது.

    இதற்கான இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று காலை 7.12 மணிக்கு தொடங்கியது. 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்கியது.
    • ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை விண்ணில் பாய்வதற்கு 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்கியது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை நாளை (திங்கட்கிழமை) காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.

    இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

    செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

    வாகனங்கள் வழிசெலுத்துவதற்கு திட்டமிடப்பட்ட 2-வது தலைமுறை செயற்கைகோள்களில் முதன்மையானது. அடுத்த தலைமுறைக்கான என்.வி.எஸ். வரிசை செயற்கைகோள்கள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து மேம்படுத்தும். இந்த தொடர் சேவைகளை விரிவுபடுத்த கூடுதலாக 'எல்1 பேண்ட் சிக்னல்'களை உள்ளடக்கியது.

    இதற்கான இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.12 மணிக்கு தொடங்கியது.

    3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    பிஎஸ்எல்வி சி43 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவிகரமாக இருந்த இந்திய விஞ்ஞானிகளுக்கு ஜிகே வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். #GKVasan #ISRO #PSLVC43
    சென்னை:

    இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 23 செயற்கைக்கோள்கள், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், மலேசியா, கொலம்பியா, பின்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோளையும் சேர்த்து மொத்தம் 31 செயற்கைக்கோள்களை இந்திய விஞ்ஞானிகள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பாடுபட்டதற்கு த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.



    இந்த ஆண்டில் இஸ்ரோ செலுத்திய 6-வது செயற்கைக்கோள் இது. இந்தியாவின் 380 கிலோ எடை கொண்ட ஹைசிஸ் செயற்கைக்கோளானது விவசாயம், வனவளம், புவிபரப்பு, கடலோரப் பகுதிகள், உள்நாட்டு நீர் ஆதாரங்கள் ஆகியவற்றின் தன்மை குறித்த தகவல்களை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து பூமிக்கு அனுப்பும். இந்திய விஞ்ஞானிகள் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதிலும், வெற்றிகரமாக நிலை நிறுத்துவதிலும் தங்களின் திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். விஞ்ஞானிகளின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கின்ற பணியாளர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #GKVasan #ISRO #PSLVC43
    ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. #ISRO #PSLVC43
    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ “ஹைசிஸ்” (ஹைபர் ஸ்பெக்ரல் இமேஜிங் சாட்டிலைட்) எனும் அதிநவீன செயற்கைகோளை தயாரித்துள்ளது.

    இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை கடந்த சில மாதங்களாக இஸ்ரோ நிறுவனம் செய்து வந்தது.

    இதற்கிடையே அமெரிக்கா தனது 23 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவை நாடியது. அதுபோல ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, ஆலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளும் தங்களது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவிடம் உதவி கேட்டன.

    இதையடுத்து 8 வெளிநாடுகளின் 30 செயற்கைக் கோள்களுடன் இந்தியாவின் “ஹைசிஸ்” செயற்கைக் கோளையும் சேர்த்து மொத்தம் 31 செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் விண்ணில் செலுத்த இஸ்ரோ ஏற்பாடு செய்தது.

    31 செயற்கைக்கோள்களை சுமந்து செல்வதற்காக பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் உருவாக்கப்பட்டது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணி நேர கவுண்டவுன் நேற்று அதிகாலை 5.55 மணிக்கு தொடங்கியது.



    இன்று அதிகாலை ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டன. இதையடுத்து ராக்கெட் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இன்று அதிகாலை சரியாக 9.57 மணிக்கு சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் புறப்பட்டது. தீ பிழம்புகளை கக்கியபடி விண்ணில் பாய்ந்த அந்த ராக்கெட் வெற்றிகரமாக தனது பாதையில் பயணம் செய்தது.

    பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் பயணத்தின் வெற்றியை கண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஒரே சமயத்தில் 31 செயற்கைக்கோள்களுடன் பயந்த பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் அடுத்தடுத்து தனது பணிகளை செய்தது.

    அந்த ராக்கெட்டில் 4 பிரிவுகளில் எரிபொருள் வைக்கப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட தூரங்களில் அவை ஒவ்வொன்றாக பிரிந்தன.

    சூரியன் மண்டலத்தில் சுற்றுவட்ட பாதையில் 504 கிலோ மீட்டர் தொலைவில் அமெரிக்காவின் 23 செயற்கைக்கோள்களும், மற்ற 7 நாடுகளின் செயற்கைக் கோள்களும் நிலைநிறுத்தப்பட்டன. 17-வது நிமிடத்தில் 630 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியாவின் “ஹைசிஸ்” செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது.

    அடுத்த சில நிமிடங்களில் செயற்கைக்கோள்கள் அனைத்தும் தங்களது பணிகளை செய்தன. ஸ்ரீஹரிகோட்டா, பெங்களூர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்ரோ மையங்களுடன் செயற்கைக்கோள்கள் தொடர்பை ஏற்படுத்தின. இதன் மூலம் இன்றைய விண்வெளி ஆய்வு பணியில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

    விண்வெளி ஆய்வு துறையில் அமெரிக்கா, ரஷியா நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இன்று 31 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டை பறக்க விட்டது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவின் தயாரிப்பில் உருவாகும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் இன்று அனுப்பப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் 45-வது ராக்கெட் ஆகும். இந்த 45-வது பயணமும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த ராக்கெட் மூலம் நிலை நிறுத்தப்பட்டுள்ள “ஹைசிஸ்” செயற்கைக்கோள் 350 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கைக்கோள் மூலம் விவசாயம், வன வளம், புவி மேற்பரப்பு, கடலோர பகுதிகள், உள்நாட்டு நீர் ஆதாரங்கள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.

    மேலும் இந்த பிரிவுகளில் உள்ள பகுதிகளை மிக மிக துல்லியமாக படம் பிடித்து அனுப்பும் ஆற்றல் “ஹைசிஸ்” செயற்கைக்கோளுக்கு இருக்கிறது.

    குறிப்பாக அடர்ந்த காடுகளுக்குள் நடமாடும் மாவோயிஸ்டுகளை கண்டுபிடித்து தெரிவிக்கும் வகையில் “ஹைசிஸ்” செயற்கைக்கோளில் அதிநவீன ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமரா உள்ளது. எனவே மாவோயிஸ்டுகளை வேட்டையாட இந்த செயற்கைக்கோள் உதவும்.

    அதுபோல செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்துபவர்களை கண்டுபிடித்து காட்டவும் இந்த செயற்கைக்கோள் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். புவி மேற்பரப்பை பல்வேறு கோணங்களில் படம் பிடிக்க முடியும் என்பதால் இந்த செயற்கைக்கோள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த செயற்கைக்கோளை 5 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த ஆண்டு இந்தியா வெற்றிகரமாக செலுத்தி உள்ள 6-வது செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    தட்பவெட்ப நிலை மாற்றம், நீர் மேலாண்மை ஆகியவற்றுக்கும் உதவும் வகையில் ஹைசிஸ் செயற்கைக் கோள் பூமியை மிக மிக துல்லியமாக படம் பிடிக்கும் ஆற்றல் கொண்டது என்பதால் நாசா விஞ்ஞானிகளும் இந்த செயற்கைக்கோளை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். #ISRO #PSLVC43

    ஜிஎஸ்எல்வி மார்க்3 டி2, ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். #GSLVMark3D2 #ISRO #Sivan
    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

    இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிபன் கூறுகையில், விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்தியாவின் அடுத்த மைல்கல் இது என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஜிஎஸ்எல்வி மார்க்3 டி2, ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



    இதுதொடர்பாக பிரதமர் மொடி டுவிட்டரில் கூறுகையில், ஜிஎஸ்எல்வி மார்க் - 3 டி2 ராக்கெட் மூலம் ஜிசாட் -29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது இரட்டிப்பு வெற்றி என பதிவிட்டுள்ளார். 

    இதேபோல், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் செயலாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜிஎஸ்எல்வி மார்க் - 3 டி2 ராக்கெட் மூலம் ஜிசாட் -29 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்ரும் வடகிழக்கு மாநிலங்களில் தகவல் தொடர்பு மேம்பட உதவும் என பதிவிட்டுள்ளார். #GSLVMark3D2 #ISRO #Sivan 
    ஜிஎஸ்எல்வி மார்க்3 டி2, ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். #GSLVMark3D2 #ISRO #Sivan
    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

    இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

    இந்நிலையில், விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்தியா தயாரித்துள்ள ஜிசாட் 29 செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி எஸ் எல் வி மார்க் 3 டி 2 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 



    விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்தியாவின் அடுத்த மைல்கல் இது.

    இஸ்ரோவின் திறமை வாய்ந்த பணியாளர்களால் இது சாத்தியமானது. இந்தியாவின் மிக அதிக எடை கொண்ட சேட்டிலைட் இதுவாகும்.

    இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் தகவல் தொடர்புக்கு பேருதவியாக இருக்கும். வடகிழக்கு பகுதிகளில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தவும் இது உதவும்.

    அடுத்த ஆண்டு ஜனவரியில் சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்படும். மேலும்,  வரும் 2020-ம் ஆண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டமும் சாத்தியமாகும் என தெரிவித்துள்ளார். #GSLVMark3D2 #ISRO #Sivan 
    ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தயாரித்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் ஜிசாட் செயற்கைக்கோளுடன் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. #GSLVMark3D2 #ISRO
    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 ஆகும். தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைக்கோள் ஜிசாட்-29 இதில் பொருத்தப்பட்டு உள்ளது. 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 33-வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டு ஏவப்படும் 5-வது ராக்கெட் இதுவாகும்.


    ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின் ஆகிய 3 நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும்.  இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம் இஸ்ரோ அடுத்த சாதனைக்கு தயாராகி வருகிறது.

    கனரக வகையை சேர்ந்த இந்த ராக்கெட் மூலம் சுமார் 10 டன் எடை கொண்ட பொருளை எளிதாக விண்ணுக்கு தூக்கிச் செல்ல முடியும். ஜிசாட்-29 செயற்கைக்கோள் 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்புத்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #GSLVMark3D2 #ISRO 
    கஜா புயல் வரும் 15-ந்தேதி கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #GajaStorm #ChennaiRain
    சென்னை:

    அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து புயலாக மாறியது. இதற்கு ‘கஜா’ (யானை) என பெயரிடப்பட்டுள்ளது. இது இலங்கை சூட்டிய பெயர் ஆகும்.

    இந்நிலையில் கஜா புயல் வருகின்ற 15-ந்தேதி (வியாழக்கிழமை) முற்பகல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிமை மையம் தெரிவித்துள்ளது.



    இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில் ‘‘தற்போதைய நிலையில் சென்னையில் இருந்து 930 கிலோ மீட்டர் தொலைவில் கஜா புயல் உள்ளது. வருகிற 15-ந்தேதி முற்பகல் கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும். அப்போது காற்று 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

    சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் 14-ந்தேதி இரவில் இருந்தே மழை பெய்ய ஆரம்பிக்கும். சில இடங்களில கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது 13 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது பின்னர் மாறுபடலாம்’’ என்றார். #GajaStorm #ChennaiRain
    இஸ்ரோ சார்பில் அடுத்த ஆறு மாதங்களில் 10 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். #ISRO #PSLVC42 #Sivan
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் நேற்று இரவு 10 மணி 8 நிமிடங்களுக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

    பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.

    இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.சி-42 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.



    இந்நிலையில், இஸ்ரோ சார்பில் அடுத்த ஆறு மாதங்களில் 10 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் கூறுகையில், பிஎஸ்எல்வி சி-42  ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இரு செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. 2 செயற்கைக்கோள்களும் பூமியில் இருந்து 583 கி.மீ புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. 17 நிமிடம் 45 வினாடிகளில் இரு செயற்கைக்கோள்களும் நிலை நிறுத்தப்பட்டது.

    2 செயற்கைக்கோள்களும் நிலப்பரப்பு ஆய்வு, பேரிடர் கால கண்காணிப்பு கடல் வாழ் வழி போக்குவரத்தை கண்காணிக்கும். ஒட்டுமொத்த விஞ்ஞானிகளுக்கும் செயற்கைகோள் வெற்றி காணிக்கையாக்கப்படுகிறது. செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு மிகவும் எளிமையான ராக்கெட் பிஎஸ்எல்.வி.

    வரும் காலங்களில் செலுத்த உள்ள செயற்கைக்கோள்கள் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு உதவியாக இருக்கும். அடுத்தாண்டு தொடக்கத்தில் சந்திராயன்- 2 விண்ணில் செலுத்தப்படும்.

    பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் வெற்றி எதிர்கால திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும். அடுத்த 6 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்தார். #PSLVC42 #ISRO #Sivan
    இஸ்ரோ சார்பில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #ISRO #PSLVC42 #Modi
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இன்று இரவு 10 மணி 8 நிமிடங்களுக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.



    நோவாசர் 445 கிலோவும், எஸ்1-4 444 கிலோவும் எடை கொண்டவை. பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.

    இந்நிலையில், இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.சி-42 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
     
    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், இஸ்ரோ சார்பில் ஸ்ரீஹஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்தின் இரண்டு செயற்கைக்கோள்களை செலுத்தியுள்ளோம். ராக்கெட்டை வெற்றிகரமாக நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். #ISRO #PSLVC42 #Modi
    ×