வெற்றிகரமாக பயணிக்கும் ஆதித்யா-எல்1: இஸ்ரோ தகவல்

ஆதித்யா-எல்1, செப்டம்பர் 1 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டதுசெப்டம்பர் 30 அன்று பூமியின் தாக்கத்திலிருந்து விடுபட்டு பயணிக்க தொடங்கியது
வெற்றிகரமாக பயணிக்கும் ஆதித்யா-எல்1: இஸ்ரோ தகவல்
Published on

கடந்த செப்டம்பர் 2 அன்று இந்திய அரசாங்கத்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அமைப்பினால், ஆந்திர பிரதேச ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து, சூரியனை குறித்த ஆராய்ச்சிகளுக்காக இந்தியாவின் முதல் முயற்சியாக பிஎஸ்எல்வி-சி57.1 (PSLV-C57.1) ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட விண்கலன், ஆதித்யா-எல்1 ஆர்பிடர் (Aditya-L1 Orbiter).

தனது பயணப்பாதையில் கடந்த செப்டம்பர் 30 அன்று இந்த விண்கலன் பூமியின் தாக்கத்திலிருந்து விடுபட்டு சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான பாதையில் அது அடைய வேண்டிய இலக்கான முதல் லெக்ராஞ்சியன் புள்ளி எனப்படும் எல்1 புள்ளியை நோக்கி பயணித்தது.

அதன் தற்போதைய நிலை குறித்து இஸ்ரோ தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் தெரிவித்திருப்பதாவது:

ஆதித்யா-எல்1 விண்கலத்தின் செயல்பாடு திட்டமிட்டபடி நன்றாக உள்ளது. தனது பயண தடத்தில் அது செய்து கொள்ள வேண்டிய மாற்றங்களுக்கான ஒரு நடவடிக்கையான "டிராஜக்டரி கரெக்ஷன் மென்யூவர்" (Trajectory Correction Maneuver) வழிமுறையை நேற்று முன் தினம் ஆதித்யா 16 நொடிகளில் வெற்றிகரமாக செய்தது. எல்1 புள்ளியை அடைவதற்கு முன்பு கடந்த செப்டம்பர் 19 அன்றே டிரான்ஸ்-லெக்ராஞ்சியன் புள்ளியை தொடுதல் நடவடிக்கையும் முறையாக நடைபெற்றதை தொடர்ந்து தற்போதைய இந்த நடவடிக்கை தேவைப்பட்டது. தொடர்ந்து ஆதித்யா விண்கலன், தான் செல்ல வேண்டிய பாதையில் சரியான திசையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு இஸ்ரோ அறிவித்திருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com