search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறு"

    • சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ. 75,000 வரை முதலீட்டு மானியத்தை கலெக்டர் வழங்கினார்.
    • சிவகாசி கிளை மேலாளர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    சிவகாசி வேலாயுதம் சாலையில் உள்ள இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழிற்கடன் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தொழில் கடன் பெற்று பயன்பெற்று வரும் வாடிக்கையாளர் களை கலெக்டர் கவுர வித்தார்.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    சிறப்பு தொழிற்கடன் விழாவில் 11 விண்ணப்பதாரர்களிடமிருந்து ரூ.11.74 கோடி மதிப்பில் புதிய தொழில் தொடங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    நீட்ஸ் திட்டத்தில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகித முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த முகாமில் வருகிற 1-ந்தேதி சமர்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப் பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர்/தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் பொது மேலாளர் துரைராஜ், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மண்டல மேலாளர் முருகேசன், இந்திய பட்டய கணக்காளர்கள் கழகத்தின் தலைவர் பாலமுருகன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சிவகாசி கிளை மேலாளர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம் வருகிற 21-ந் தேதி முதல் நடக்கிறது.
    • கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்க பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற் சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடி யாக திகழ்கிறது.

    இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவு களை விரிவு படுத்துவதற்கும், உற்பத்தி யை பன்முகப் படுத்து வதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    விருதுநகர் மாவட்ட சிவகாசி கிளை அலுவல கத்தில் (முகவரி:-98/சி4 சேர்மன் சண்முகநாடார் ரோடு, 2-வது தளம், சிவகாசி 626 123, விருதுநகர் மாவட்டம்;) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா முகாம் வருகிற 21-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் ரூ.150 இலட்சம் வரை, வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.NEEDS திட்டத்தில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் / தொழிலதி பர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் சிறு, குறுதொழில் நிறுவனங்கள் ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் 20-ந் தேதி நடைபெறுகிறது.
    • உத்தேச திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட சிறு, குறு தொழில் நிறுவன பிரதிநிதிகள் இன்று காலை நிருபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழக சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள் சமீபத்தில் முதல்- அமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மின் கட்டணங்களை குறைத்தால் மட்டுமே சிறுதொழில் நிறு வனங்கள் தங்கு தடையின்றி இயங்க முடியும். எனவே மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மனு கொடுத்தோம்.

    ஆனால் அரசு எங்களின் கோரிக்கைகளை நிறை வேற்றவில்லை. எனவே சிறு, குறுந்தொழில் நிறுவ னங்கள் பாதிப்பு அடைந்து உள்ளது. இந்த நிலையில் திருச்சி செயற்குழு கூட்ட தீர்மானத்தின்படி தமிழகம் முழுவதும் வருகிற 20-ந் தேதி ஒரு நாள் கதவடைப்பு செய்தும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதில் மதுரை மாவட்ட த்தில் உள்ள 20 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்புகள் பங்கேற்க உள்ளன. அன்றைய தினம் காலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    தாழ்வழுத்த மின் சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுககு, 50 கிலோவாட் வரை ரூ.35 ஆகவும், 51 முதல் 112 கிலோவாட் வரை ரூ.75 ஆகவும் குறைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். உச்ச பயன்பாடு நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத் திற்கு 25 சதவீத மின் கட்டண உயர்வை 15 சதவீதம் ஆக குறைப்பது தொடர்பாக அரசு உத்தரவு வெளியிட்டு உள்ளது. ஆனாலும் இதனால் பெரிய அளவில் பலன் இல்லை.

    தமிழக மின்வாரியத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாமல் கால தாமதப் படுத்து கின்றனர். லட்சக்கணக்கில் பணம் செலுத்தினால் மட்டுமே மின் இணைப்பின் அளவை குறைக்க முடியும் என்று தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இதனால் எண்ணற்ற சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. நகர பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளை 99 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாம் என்ற உத்தேச திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் சிறு தொழில் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனாலும் தமிழக அரசு இதுவரை எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை.

    கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட சிறு, குறுந் தொழில் நிறுவனங்களை மீட்பது தொடர்பான உயர் மட்டக் குழுவின் 50 பரிந்துரைகளை உடனடி யாக செயல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக் ககளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கோவை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
    • 5 மாதங்களில் தமிழ்நாடு கயிறு மேம்பாட்டு நிறுவனத்தை முதல் அமைச்சர் திறந்து வைத்ததற்கு கோவை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கோவை:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புத்துயிர் பெரும் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

    கோவை மாவட்டத்தில் சொலவம்பாளையம் கிராமத்தில் 42.42 ஏக்கரில் ரூ.18.12 கோடி திட்ட மதிப்பீட்டில் 9.6 கோடி மானியத்துடன் கூடிய தனியார் தொழிற்பேட்டை அமைக்க அடிக்கல் நாட்டினார்.

    கோவை சிட்கோ தொழில் பேட்டையில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்ட 510 தொழிலாளர்கள் பயனடையும் வகையில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி அமைக்க அடிக்கல் நாட்டினார்.மேலும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களில் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கோவை விமான நிலையம் எதிரே தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவன அலுவலக கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.கோவையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கலெக்டர் சமீரன் பங்கேற்றனர்.

    பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாடு கயிறு வாரிய மேம்பாட்டு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று கோவையை தலைமை இடமாக ஏற்றுக் கொண்டு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

    கோவை மேற்கு மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று தி.மு.க தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு உள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, 5 மாதங்களில் தமிழ்நாடு கயிறு மேம்பாட்டு நிறுவனத்தை முதல் அமைச்சர் திறந்து வைத்ததற்கு கோவை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கோவை மாவட்டத்திற்கு தனியார் தொழிற்பேட்டை ரூ 18 கோடி மதிப்பீட்டிலும் கயிறு குழுமம் அமைப்பதற்காக ரூ9 கோடி மதிப்பீட்டிலும் தொழிலாளர்கள் தங்குவதற்கு ரூ 22 கோடி மதிப்பீட்டிலும் திட்டங்களை வழங்கி உள்ளார். மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் இரு க்கக்கூடிய நிபுணர்களின் எண்ணிக்கையை அதிக ரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினரை நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வெள்ளலூர் பஸ் நிலையத்தை மாநகராட்சி பொது நிதியை எடுத்து கட்டி விட்டு அரசு நிதி ஒதுக்கியது போல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் வெள்ளலூர் பேருந்து நிலையத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என கூற வேண்டும்.

    தமிழ்நாடு கயிறு மேம்பாட்டு நிறுவனம் என்பது ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். வரக்கூடிய காலங்களில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் இது அதிகரிக்கும். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன், மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    ×