search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Senthilbalaji interview"

    • கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.
    • குட்கா மீது தடை விதிக்க மேல்முறையிடும் செய்யப்பட்டுள்ளது.

    கோவை

    கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள அரங்கத்தில் நடந்தது.

    இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் கலந்து கொண்டு 100 மாணவ- மாணவி களுக்கு வெள்ளை அங்கியி னை அணிவித்தார். பின்னர் மா. சுப்பிரமணியன் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவையில் மருத்துவ துறையில் புதிய கட்டமைப்புகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் ஆஸ்பத்திரிகளுக்கு அதிகளவு நான் வந்துள்ளேன். ஒரு மாதத்திற்கு ஒன்று இரண்டு முறை என இதுவரை 20-க்கும் மேற்பட்ட முறை கோவை வந்துள்ளேன்.

    முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்றபோது அங்குள்ள ஆம் ஆத்மி ஆஸ்பத்திரியை பார்வையிட்டார். அந்த ஆஸ்பத்திரியின் கட்டமைப்பை பார்த்து தமிழகத்திலும் ஏழை எளிய மக்கள் பயன் அடைய வேண்டும் என முடிவு செய்தார்.

    இதையடுத்து தமிழக முழுவதும் 708 ஆஸ்பத்திரிகளை கட்ட உத்தரவிட்டார். அதில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு மருந்து ஆளுநர், ஒரு உதவியாளரை நிய மித்துள்ளார். தமிழகத்தி லேயே கோவை மாவட்டத்திற்கு 72 ஆஸ்பத்திரிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மாநகராட்சிக்கு 64 ஆஸ்பத்திரிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அந்த 708 ஆஸ்பத்தி ரிகளில் பெரும்பாலான கட்டிடப் பணிகள் முடிவடைந்துவிட்டது. ஒரு சில ஆஸ்பத்திரிகள் மட்டும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதுவும் விரைவில் நிறைவடைய உள்ளது. மருத்துவத்துறை வரலாற்றில் தமிழகத்தில் முதல் முறையாக 500-க்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகளை முதல்-அமைச்சர் பிப்ரவரி 6-ந் தேதி திறந்து வைக்க உள்ளார். இது தவிர மணியக் காரம்பாளையத்தில் ஒரு சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டுகளில் 400 புற நோயாளிகள் வந்து கொண்டிருந்தனர். தற்போது அது 1200 ஆக உயர்ந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் 4000 ஆக உயர்ந்துள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் திட்டத்தில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு ரூ .56 லட்சம் உபகரணங்கள் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 500 இடங்கள் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு உட்பட்ட 679 ஆஸ்பத்திரியில் அரசு சார்பில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் விபத்து ஏற்பட்டு 48 மணி நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும். விபத்து ஏற்பட்ட வரை ஆஸ்பத்திரியில் அனுமதிப்பவருக்கு ரூ.5,000 ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 923 பேர் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்காக ரூ.125 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 2-ந் தேதி தமிழக முதல் அமைச்சர் 787 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணையை வழங்க உள்ளார். தமிழகம் காச நோயாளிகள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும்.

    குட்கா மீதான தடையை கோர்ட்டு நீக்கி உள்ளது ஆனால் தமிழக அரசு போதை பொருட்களை தமிழகத்தில் இருந்து முழுமையாக ஒழிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகளில் குட்காவை விற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். குட்கா மீது தடை விதிக்க மேல்முறையிடும் செய்யப்பட்டுள்ளது. வேண்டுமானால் தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  

    • மாநகராட்சியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
    • கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அதிக பட்சமாக 10.76 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.

    கோவை,

    கோவை ரெயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி நடந்தது. இந்த பணியை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. சரியான மழை நீர் வடிகால் இல்லாத சூழல் இருந்தது. ஆகையால், நிறைய இடங்களில் பாலங்களின் அடியிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கியது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு கடந்த ஆண்டு எந்தெந்த இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது என்பதை உறுதி செய்து. இந்த ஆண்டு அந்த பாதிப்பு இல்லாத அளவிற்கு முன் னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

    கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அதிக பட்சமாக 10.76 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நேற்று பெய்த கனமழைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை கோவை மாவட்டத்தில் 32 பெரிய வாய்க்கால்கள் உள்ளன.

    அதில், 128 கி.மீ. அளவிற்கு ரூ.2.45 கோடி மதிப்பில் அதற்குண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன.மழை நீர் வடிகால்கள் பொருத்தவ ரை 273 கி.மீ. வரை ரூ.5. 06 கோடி மதிப்பில் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

    மழை நீரை வெளியேற்றும் மோட்டார்கள் தேவையான அளவு உள்ளது. ஆகையால், இதைவிட அதிக அளவில் மழை பெய்தாலும் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்படக்கூடிய இடங்களை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த ஆட்சியில் கோவை மாநகர பகுதிகளில் சாலைப்பணிகள் மேற்கொள்ளவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களில் ரூ.214 கோடி மதிப்பில் சாலைப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, கோவை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ.200 கோடியை விடுவிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதில் ரூ.26 கோடி. முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டு டெண்டர் முடிக்கப் பட்டு, அந்தப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் மாநகராட்சி பகுதியில் உள்ள சேதம் அடைந்த சாலை, புதுப்பிக்கப்பட வேண்டிய சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

    • கோவை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
    • 5 மாதங்களில் தமிழ்நாடு கயிறு மேம்பாட்டு நிறுவனத்தை முதல் அமைச்சர் திறந்து வைத்ததற்கு கோவை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கோவை:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புத்துயிர் பெரும் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

    கோவை மாவட்டத்தில் சொலவம்பாளையம் கிராமத்தில் 42.42 ஏக்கரில் ரூ.18.12 கோடி திட்ட மதிப்பீட்டில் 9.6 கோடி மானியத்துடன் கூடிய தனியார் தொழிற்பேட்டை அமைக்க அடிக்கல் நாட்டினார்.

    கோவை சிட்கோ தொழில் பேட்டையில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்ட 510 தொழிலாளர்கள் பயனடையும் வகையில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி அமைக்க அடிக்கல் நாட்டினார்.மேலும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களில் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கோவை விமான நிலையம் எதிரே தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவன அலுவலக கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.கோவையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கலெக்டர் சமீரன் பங்கேற்றனர்.

    பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாடு கயிறு வாரிய மேம்பாட்டு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று கோவையை தலைமை இடமாக ஏற்றுக் கொண்டு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

    கோவை மேற்கு மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று தி.மு.க தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு உள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, 5 மாதங்களில் தமிழ்நாடு கயிறு மேம்பாட்டு நிறுவனத்தை முதல் அமைச்சர் திறந்து வைத்ததற்கு கோவை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கோவை மாவட்டத்திற்கு தனியார் தொழிற்பேட்டை ரூ 18 கோடி மதிப்பீட்டிலும் கயிறு குழுமம் அமைப்பதற்காக ரூ9 கோடி மதிப்பீட்டிலும் தொழிலாளர்கள் தங்குவதற்கு ரூ 22 கோடி மதிப்பீட்டிலும் திட்டங்களை வழங்கி உள்ளார். மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் இரு க்கக்கூடிய நிபுணர்களின் எண்ணிக்கையை அதிக ரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினரை நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வெள்ளலூர் பஸ் நிலையத்தை மாநகராட்சி பொது நிதியை எடுத்து கட்டி விட்டு அரசு நிதி ஒதுக்கியது போல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் வெள்ளலூர் பேருந்து நிலையத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என கூற வேண்டும்.

    தமிழ்நாடு கயிறு மேம்பாட்டு நிறுவனம் என்பது ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். வரக்கூடிய காலங்களில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் இது அதிகரிக்கும். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன், மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    ×