search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம்"

    கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் மற்றும் வைகோ ஆகியோரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். #NakkeeranGopal #MKStalin
    சென்னை:

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின்,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி வழங்கக்கோரி போலீஸ் நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இதேபோல் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வைகோவையும் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


    பின்னர் செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்து பேசினார். அபபோது, நக்கீரன் கோபால் மீது பாய்ந்துள்ள சட்டம், எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் மீது ஏன் பாயவில்லை? அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? என கேள்வி எழுப்பினார். நேரம் கிடைத்தால் ஆளுநரிடம் நக்கீரன் கோபால் குறித்து பேசப்படும் என்றும் கூறினார். #NakkeeranGopal #MKStalin
    சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் உள்ள நக்கீரன் கோபாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தர்ணாவில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார். #NakkeeranGopal #MDMK #Vaiko
    சென்னை:

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டைக்கு அழைத்து வரப்பட்ட தகவல் அறிந்ததும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விரைந்து சென்றார்.

    அவரை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. உடனே வைகோ வக்கீல் என்ற முறையில் என்னை உள்ளே சென்று நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    ஆனால் அவரது கோரிக்கையை போலீசார் நிராகரித்தனர். நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடந்து வருவதால் தற்போது அனுமதிக்க இயலாது என்று தெரிவித்தனர்.

    இதனால் வைகோ ஆவேசமானார். போலீஸ் உயர்அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்றாலும் போலீசார் அவரை அனுமதிக்கவில்லை.


    இதனால் மேலும் ஆவேசமாக வைகோ அந்த இடத்திலேயே போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    போலீஸ் அதிகாரிகள் அவரை சமரசம் செய்ய முயன்றனர். எழுந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் வைகோ அதை ஏற்கவில்லை.

    இதைத் தொடர்ந்து 11.30 மணியளவில் வைகோ கைது செய்வதாக போலீசார் அறிவித்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார். நக்கீரன் கோபால் கைதை கண்டித்து பத்திரிகையாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். #NakkeeranGopal #MDMK #Vaiko
    ×