search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நக்கீரன் கோபாலை சந்திக்க சென்ற வைகோ கைது
    X

    நக்கீரன் கோபாலை சந்திக்க சென்ற வைகோ கைது

    சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் உள்ள நக்கீரன் கோபாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தர்ணாவில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார். #NakkeeranGopal #MDMK #Vaiko
    சென்னை:

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டைக்கு அழைத்து வரப்பட்ட தகவல் அறிந்ததும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விரைந்து சென்றார்.

    அவரை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. உடனே வைகோ வக்கீல் என்ற முறையில் என்னை உள்ளே சென்று நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    ஆனால் அவரது கோரிக்கையை போலீசார் நிராகரித்தனர். நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடந்து வருவதால் தற்போது அனுமதிக்க இயலாது என்று தெரிவித்தனர்.

    இதனால் வைகோ ஆவேசமானார். போலீஸ் உயர்அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்றாலும் போலீசார் அவரை அனுமதிக்கவில்லை.


    இதனால் மேலும் ஆவேசமாக வைகோ அந்த இடத்திலேயே போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    போலீஸ் அதிகாரிகள் அவரை சமரசம் செய்ய முயன்றனர். எழுந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் வைகோ அதை ஏற்கவில்லை.

    இதைத் தொடர்ந்து 11.30 மணியளவில் வைகோ கைது செய்வதாக போலீசார் அறிவித்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார். நக்கீரன் கோபால் கைதை கண்டித்து பத்திரிகையாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். #NakkeeranGopal #MDMK #Vaiko
    Next Story
    ×