search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாஸ்தா"

    • ஐயப்பனை வழிபடுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் மூன்றாகும்.
    • தண்ணீர் மட்டுமே பருகி முழு விரதம் இருத்தல் உத்தமானது.

    ஐயப்பனை வழிபடுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் மூன்றாகும்.

    அவை- புத வார விரதம், சனி வார விரதம், உத்திர நட்சத்திர விரதம்.

    இந்த விரதங்களை மேற்கொள்பவர்கள், ஏதேனும் ஒரு புதன்கிழமையன்றோ, சனிக்கிழமையன்றோ

    அல்லது ஒவ்வொரு மாதத்திலும் வரும் உத்திர நட்சத்திரத்தன்றோ விரதம் மேற்கொள்ள வேண்டும்.

    முதல் நாள் பகல் உணவோடு விரதத்தைத் தொடங்கி இரவு உணவை உண்ணாதிருக்க வேண்டும்.

    விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராடி, நித்ய கர்மாக்களை முடித்து,

    விதிமுறைப்படி ஸ்ரீமஹா சாஸ்தாவை வழிபாடு செய்தல் வேண்டும்.

    தண்ணீர் மட்டுமே பருகி முழு விரதம் இருத்தல் உத்தமானது.

    நாள் முழுவதும், பாராயணம், ஜபம், தியானம் ஆகியவற்றை மேற்கொண்டு,

    ஐயப்பனின் ஆலயத்துக்கும், சென்று வழிபட வேண்டும்.

    அதேபோல இரவு முழுவதும் கண்ணயராது ஐயனை தியானித்து, மறுநாள் அதிகாலையில் நீராடி,

    சாஸ்தாவை வழிபட்டு அவரின் அடியவருடன் கூடி உண்ண வேண்டும்.

    அன்றும் பகலில் உறங்காமல் இரவிலே உறங்குதல் வேண்டும்.

    • இந்த நாளில்தான் சிவபார்வதி திருமணம், முருகன்வள்ளி திருமணம் நடந்தது.
    • முத்துக் குமாரசுவாமியை வணங்கி வர நிச்சயமாக திருமணம் கைகூடும்.

    வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், கார்த்திகையில் வரும் கார்த்திகை,

    தைப்பூசம் ஆகிய சிறப்பு நட்சத்திரங்களின் வரிசையில் வருவது பங்குனி உத்திரம் ஆகும்.

    இந்த நாளில்தான் சிவபார்வதி திருமணம், முருகன்வள்ளி திருமணம்,

    சாஸ்தாவின் பிறப்பு ஆகியவை இந்த நட்சத்திர தினத்தில்தான் நடந்தது.

    செவ்வாய் தோஷமா?

    முருகப்பெருமான் பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்தவர் என்பதால், திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்கள், ஜாதக ரீதியாக செவ்வாய் தோஷம் உள்ளவர்கள்,

    காரணமின்றி திருமணம் தடைபடுபவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக் குமாரசுவாமியை (முருகன்)

    வணங்கி வர நிச்சயமாக உரிய பலன்கள் கிடைக்கும்.

    • சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள சிலை போலவே இவரது சிலையும் காட்சியளிக்கிறது.
    • விஷ்ணு மோகினி வடிவெடுத்து சிவனுடன் இணைந்து ஒரு மகனைப்பெற்றார்.

    நெல்லை மாவட்டம் ஆழ்வார் குறிச்சியில் காக்கும் பெருமாள் சாஸ்தா என்ற கோவில் உள்ளது.

    ராம நதிக்கரையில் குடிகொண்டுள்ள இவர் ராமரால் உருவாக்கப்பட்டவர்.

    பெருமாளின் பெயருடன் இந்த சாஸ்தா இருப்பதால் இவருக்கு மகிமை அதிகம்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள சிலை போலவே இவரது சிலையும் காட்சியளிக்கிறது.

    பங்குனி உத்திரத்தில் இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் பறந்தோடி விடும் என்று நம்பப்படுகிறது.

    அவதார நட்சத்திரம்

    மகிஷி என்ற அரக்கியை அழிக்க தேவர்கள் விரும்பினார்கள்.

    அவளை ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறக்காத ஒருவரே அழிக்க முடியும் என்பதால்,

    விஷ்ணு மோகினி வடிவெடுத்து சிவனுடன் இணைந்து ஒரு மகனைப்பெற்றார்.

    அந்த மகன் தர்மசாஸ்தா ஆவார்.

    இவர் மகிஷியை அழித்தார். அய்யப்பனின் அவதாரமாகக் கருதப்படுவது இவரே.

    சாஸ்தா அவதாரம் எடுத்தது பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஆகும்.

    • சாஸ்தாவை வெறும் வயிற்றுடன் வணங்கக்கூடாது என்பது மரபு.
    • மதிய வேளைக்குள் சாஸ்தாவுக்கு பாயாசம் படைக்க வேண்டும்.

    உத்திர நட்சத்திரத்தில் பிறந்த திருமணம் ஆகாத பெண்களும், திருமணத்துக்குப் பிறகு பொருளாதார அல்லது மனரீதியாகத் துயரப்படும் பெண்களும்

    பங்குனி உத்திரம் தினத்தன்று திருச்செந்தூர் சென்று நாழிக்கிணற்றில் நீராடி அதன் பிறகு கடலில் குளிக்க வேண்டும்.

    பிறகு முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் தீராத இன்னல்களும் தீரும்.

    வெறும் வயிற்றுடன் வணங்காதீர்

    பங்குனி உத்திரம் நாளன்று காலையில் வழக்கமான உணவை சாப்பிட வேண்டும்.

    ஏனெனில் சாஸ்தாவை வெறும் வயிற்றுடன் வணங்கக்கூடாது என்பது மரபு.

    அரை வயிறுக்கு சாப்பிட்டுவிட்டு, காடுகளில் இருக்கும் சாஸ்தாவை வணங்க செல்ல வேண்டும்.

    மதிய வேளைக்குள் சாஸ்தாவுக்கு பாயாசம் படைக்க வேண்டும்.

    அதை மதிய உணவாகக் கொள்ளலாம். இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது.

    • நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜையும் நடைபெற உள்ளது.
    • கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குடும்ப வாரிசுதாரர்கள் செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    சூரங்குடி அருகே உள்ள வத்தக்காவிளை இசக்கியம்மன் கோவில் கொடை விழா நாளை (27-ந்தேதி) தொடங்கி 29-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி நாளை மாலை 5 மணிக்கு பக்தி காணமும், 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு நையாண்டி மேளமும், 9 மணிக்கு சாஸ்தா கதை வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜையும் நடைபெற உள்ளது.

    நாளை மறுநாள் (28-ந்தேதி) காலை 5 மணிக்கு பக்தி காணமும், 8 மணிக்கு நையாண்டி மேளமும், 9 மணிக்கு இசக்கியம்மன் கதை வில்லிசையும், பகல் 1 மணிக்கு இசக்கியம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், 1.30 மணிக்கு அன்ன தானமும், மாலை 4 மணிக்கு பக்தி காணமும், மாலை 5 மணிக்கு நையாண்டி மேள மும், 6 மணிக்கு காலசுவாமி கதை வில்லிசையும், இரவு 7 மணிக்கு கால சுவாமிக்கு தீபாராதனையும், 8 மணிக்கு நையாண்டி மேளமும், 9 மணிக்கு வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், நடைபெற உள்ளது.

    விழாவின் 3-ம் நாளான 29-ந்தேதி காலை 6 மணிக்கு சுடலை மாடசுவாமி கதை வில்லிசையும், 7 மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது.

    கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குடும்ப வாரிசுதாரர்கள் செய்து வருகின்றனர்.

    ×