search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாக்லெட்"

    • 'கேக் அலங்காரம்' பற்றிய சில ஆலோசனைகள்.
    • பெண்கள் பலரும் 'கேக்' தயாரிப்பை சுயதொழிலாக செய்து வருகிறார்கள்.

    பெண்கள் பலரும் 'கேக்' தயாரிப்பை சுயதொழிலாக செய்து வருகிறார்கள். கேக்குகளை சுவைப்பதற்கு முன்பாக, அவற்றின் மேல் செய்யப்படும் அலங்காரம்தான் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்படி செய்கிறது. தயாரிப்பில் புதிதாக ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு 'கேக் அலங்காரம்' பற்றிய சில ஆலோசனைகள்...

     புரூட் கேக்

    வெள்ளை நிற கேக்கின் மேல் பகுதியில் ஒரு பக்கத்தில் மட்டும் மாதுனை முத்துகள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி இலைகளை வைக்கவும். அதைச் சுற்றிலும் சிறிய அளவுள்ள சர்க்கரை முத்துகளை தூவவும். இது பார்ப்பதற்கு அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சி அளிக்கும்.

     சாக்லெட் மற்றும் ஸ்பிரிங்கஸ் கேக்

    கேக்கின் மேல் பகுதியை தவிர்த்து, பக்கவாட்டுப் பகுதியைச் சுற்றிலும் சாக்லெட், ஸ்பிரிங்கஸ் (சிறிய அளவு சர்க்கரை பூக்கள்) மற்றும் கான்பெட்டி (வண்ணமயமான சாக்லேட் துணுக்குகள்) ஆகியவற்றை கொண்டு கேக்கை அலங்கரிக்கவும். அது பார்ப்பதற்கு வண்ணமயமான தோற்றத்தைத் தரும்.

     ரோஸ் கேக்

    'கேக்' அலங்கரிக்கும் ஐசிங் முனைகள் கொண்டு கேக்கின் கீழ்ப்பகுதியில் இருந்து மேல்பகுதி வரையிலும் 'ஐசிங் கிரிம் மூலம் ரோஜா பூக்கள் போன்று வடிவமைக்கவும். ஒவ்வொரு அடுக்குக்கும் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டு அலங்கரித்தால் அழகாக இருக்கும்.

     ஸ்ட்ராபெர்ரி கேக்

    வெனிலா கேக்கின் மேல்பகுதியின் மையத்தில் ஸ்ட்ராபெர்ரி கிரீமை பூசவும், அதற்கு மேல் ஸ்ட்ராபெர்ரி இலைகளை வைக்கவும், இது பார்ப்பதற்கு நேர்த்தியான தோற்றமளிக்கும் பெர்ரி பழங்கள், உண்ணக்கூடிய ரோஜா பூக்கள் மற்றும் ஸ்டாப்பேரி இலைகளை வைக்கவும் இது பார்ப்பதற்கு நேர்த்தியான தோற்றமளிக்கும்.

     பைப்பிங் கேக்:

    'கேக்'கின் நிறத்துக்கு ஏற்றவாறு டபுள் கலர் கிரீமைகொண்டு மேல் பகுதியில் பைப்பிங் செய்யவும். அது பார்ப்பதற்கு எளிமையாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்கும்.

     டஸ்டிங் பவுடர் கேக்:

    கேக்கின் மீது பொடித்த சர்க்கரை, கோகோ பவுடர் அல்லது உண்ணக்கூடிய மினுமினுப்பு கிளிட்டர்களை லேசாக தெளிக்கவும். இது எளிதாக செய்யக் கூடிய அலங்காரமாகும்.

     மக்ரூன்ஸ் கேக்:

    கேக்'கின் மேல்புறத்தில் மக்ரூன்களை கொண்டு பூ போன்ற வடிவத்தில் அடுக்கவும். கேக்கின் பக்க வாட்டுப் பகுதியையும் மக்ரூன்களை கொண்டு அலங்கரிக்கலாம்.

     பாஸ்கெட் வீவ் கேக்:

    கேக்கைச் சுற்றிலும் 'பாஸ்கெட் வீவ் (கூடை பின்னுவது போன்ற அமைப்பு) பைப்பிங் செய்யவும். பின்பு கிரீம் கொண்டு கேக்கின் மேலே ரோஜா பூக்கள் வடிவமைக்கவும். வெள்ளை நிற முத்துக்கள் கொண்டும் அலங்கரிக்கலாம்.

     பான்டன்ட் ரிப்பன் கேக்:

    'பான்டன்ட் ரிப்பன்' மூலம் வடிவமைத்த ரோஜாக் களைக் கொண்டு 'கேக்'கைச் சுற்றி வட்ட வடிவில் அலங்கரிக்கவும். பின்பு 'கேக்'கின் மேல் ஸ்பிரிங்கின்ஸ் அல்லது வெள்ளி நிற பால்களை தூவவும்.

    • சாக்லேட் கோகோ பீன்சில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
    • டார்க் சாக்லெட் மற்ற சாக்லெட் வகைகளை விட சர்க்கரை குறைவாக இருக்கும்

    உலகம் எங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவுப்பொருட்களில் ஒன்றாக சாக்லெட் விளங்குகிறது. இது கோகோ பீன்சில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் சாக்லெட்டில் பிளாவனாய்டுகள், காபின், தியோ புரோமைன் உள்ளிட்ட உடலுக்கு நன்மை சேர்க்கும் சேர்மங்களும் கலந்துள்ளன. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாக்லெட் சாப்பிடலாமா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. சாக்லெட்டின் வகையும், அவரவரின் தனிப்பட்ட ஆரோக்கியமும்தான் அதனை தீர்மானிக்கும்.

    ஏனெனில் டார்க் சாக்லெட்டை பொறுத்தவரை மற்ற சாக்லெட்டுகளை விட ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் அதிக கோகோ உள்ளடங்கி இருக்கும். மற்ற சாக்லெட் வகைகளை விட சர்க்கரை குறைவாக இருக்கும் என்பதுதான் அதற்கு காரணம்.

    எந்த நோய் பாதிப்புக்கும் ஆளாகாதவர்கள் வெறும் வயிற்றில் டார்க் சாக்லெட் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி உடலுக்கு கூடுதல் எனர்ஜி கொடுக்க உதவும். அதேவேளையில் டார்க் சாக்லெட் சிலருக்கு செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அப்படிப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் டார்க் சாக்லெட் சாப்பிடக்கூடாது.

    டார்க் சாக்லெட்டை ஒப்பிடும்போது மில்க் சாக்லெட் மற்றும் ஒயிட் சாக்லெட் இவை இரண்டும் ஆரோக்கியம் குறைவானவை. இவற்றில் சர்க்கரை அதிகம் கலந்திருக்கும். கோகோ குறைவாகவே இருக்கும். வெறும் வயிற்றில் இந்த இரண்டு சாக்லெட்டுகளையும் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

    நீரிழிவு மற்றும் ரத்த சர்க்கரையுடன் தொடர்புடைய நோயாளிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மற்றவர்கள் இந்த சாக்லெட்டுகளை குறைவாக சாப்பிடலாம். அதிகமாக சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்வதோடு குமட்டல், செரிமான கோளாறு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் பருகிவிட்டு அதன் பிறகு சாக்லெட் சாப்பிடுவது சிறந்தது.

    • மீண்டும் சாப்பிட தூண்டும் சாக்லெட்டும் போதைதான் என விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பரபாரதி அறிமுகவுரையாற்றினார்.

    சிவகாசி,

    சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றம், பெண்கள் முன்னேற்ற அமைப்பு பகுதி -5, நுண்கலைகள் குழு ஆகிய அமைப்புகள் இணைந்து போதைப்பொருள் விழிப்பு ணர்வு கருத்தரங்கை நடத்தின.

    கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வேதியியல் துறை உதவிப்பேராசிரியர் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும்போது கூறிய தாவது:-

    போதைப் பொருள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், போதைப் பொருட்களின் வகைகள், அவற்றின் தீமைகள், அதற்கு மருந்து எடுத்துக் கொண்டால் அதுவும் போதைதான். நாம் சாப்பிடும் சாக்லேட் வகைகளை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டுவதும் ஒரு வகை போதைதான்.

    போதைப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தினால் சரிவர உணவு உண்ண முடியாது. மனச்சோர்வு ஏற்படும். ஞாபக மறதி உண்டாகும். பயம் ஏற்படும். உடல் மெலியும், குடல்புண், வாய்ப்புண் ஆகியவை உண்டாகும் நாளடைவில் மிகப்பெரிய மனநோயாளியாக மாற்றும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    முன்னதாக இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் பாண்டிக்குமார். வரவேற்றார். தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பரபாரதி அறிமுகவுரையாற்றினார். முடிவில் இளங்கலைத் தமிழ் 3-ம் ஆண்டு மாணவர் சிவகணேஷ் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழியல் துறை தலைவர் அமுதா, பெண்கள் முன்னேற்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரூபாதேவி. பகுதி-5 குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி ஆகியோர் செய்திருத்தனர்.

    ×