search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல் போட்டி"

    • உணவு, இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு
    • வாழப்பாடி புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி

    வாழப்பாடி:

    பள்ளி குழந்தைகளிடையே சரிவிகித ஊட்டச்சத்து உணவு, இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வாழப்பாடி புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி நடத்தப்பட்டது.

    பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமி தலைமையில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகா தேவி, மேற்பார்வையாளர் பிரேமா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மாணவிகளிடையே போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதனைத்தொடர்ந்து சரிவிகித சத்துணவு, சுகாதாரம் மற்றும் ரத்த சோகை தவிர்ப்பு இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறுதானியங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் நன்மைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினர். நிறைவாக, அங்கன்வாடி பணியாளர் வசந்தி நன்றி கூறினார்.

    • இயற்கை உணவு சமையல் போட்டி நடந்தது.
    • ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை வளர்மதி செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராசரத்தினம் மகளிர் கல்லூரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காந்திய சிந்தனை அமைப்பின் சார்பில் இயற்கை உணவு சமையல் போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார்.

    கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணா அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் போட்டியில் 56 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் இளநிலை 2-ம் ஆண்டு மாணவிகள் விக்னேஸ்வரி, ஈஸ்வரி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

    இளநிலை 2-ம் ஆண்டு மாணவிகள் மேகலா, முத்தமிழ் மாலா ஆகியோர் 2-ம் பரிசும், இளநிலை முதலாம் ஆண்டு மாணவிகள் பிரியதர்ஷினி, சந்தியா ஆகியோர் 3-ம் பரிசும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காந்திய சிந்தனை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை வளர்மதி செய்திருந்தார்.

    • முருங்கை கீரை, மொடக்கத்தான் கீரை கலந்த சிறுதானிய ரொட்டிகள் போன்ற பல்வேறு புதுமையான உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.
    • பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன் நிபுணர்கள் குழுவால் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தால் 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டைக் கொண்டாடவும், சிறுதானிய உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காகவும் வாழ்க்கை முறை பகுதி விரிவாக்கத்தில் சிறுதானியங்களின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சிறுதானியங்கள் உணவுப் போட்டி அஞ்செட்டி கிராமத்தில் நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் உதவிப் பொது இயக்குநர் ரஞ்சய் குமார் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

    இதில் ஐதராபாத் பத்தாவது மண்டலத்தின் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஷேக் என்.மீரா, கவுகாத்தி ஆறாவது மண்டலத்தின் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கதிர்வேல் கோவிந்தசாமி, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் விரிவாக்க கல்வி இயக்குநர் முருகன், கிருஷ்ணகிரி மாவட்டட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணன் உள்பட பலர் பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் நடந்த சிறுதானிய உணவுப் போட்டியில், அஞ்செட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 80 போட்டியாளர்கள் கலந்துகொண்டு, போட்டிக்கான சிறுதானியங்கள் சார்ந்த உணவுப் பொருட்களான ராகி பர்ப்பி, சிறுதானிய அல்வா, லட்டு, ராகி பூரி, களி மற்றும் முருங்கை கீரை, மொடக்கத்தான் கீரை கலந்த சிறுதானிய ரொட்டிகள் போன்ற பல்வேறு புதுமையான உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.

    பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன் நிபுணர்கள் குழுவால் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் ஐதராபாத் பத்தாவது மண்டல வேளாண்மை தொழிற்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி பிரசாத், முதுநிலை விஞ்ஞானி மாலதி, தருமபுரி மாவட்ட வேளாண்மை அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் திட்ட அலுவலர் ஜெயந்தி, மருத்துவ அலுவலர் டாக்டர். ரஞ்சித், ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான சுந்தர்ராஜ் வரவேற்றார். முடிவில் மனையியல் தொழில்நுட்பட வல்லுநர் பூமதி நன்றி கூறினார்.

    • "போசான் அபியான்" என்னும் வளர் இளம் குழந்தைகளுக்கு அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் வடுகபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் "போசான் அபியான்" என்னும் வளர் இளம் குழந்தைகளுக்கு அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகள், புரதச்சத்து உணவுகள், மற்றும் உணவுகள் தயாரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை பல்லடம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா, பள்ளி தலைமை ஆசிரியை செல்வராணி, உள்ளிட்டோர் உணர்வுகளை சுவைத்து பார்த்து, அதனை சமைத்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர்.

    இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×