search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை தேர்தல்கள்"

    • 2023ம் ஆண்டில் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது.
    • இதில் பா.ஜ.க. 3 மாநிலங்களிலும், கூட்டணி கட்சிகளோடு 3 மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்தது.

    வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சி


    கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து என 3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. திரிபுராவில் பாஜக, ஐபிஎஃப்டி கட்சி கூட்டணி ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. மேகாலயாவில் பா.ஜ.க, தேசிய மக்கள், ஐக்கிய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை அடங்கிய மேகாலயா ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. நாகாலாந்தில் என்.டி.பி.பி மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

    கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ்


    கடந்த மே மாதம் நடந்த கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமை நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சித்தராமையா முதல் மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதந்தோறும் 2,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.

    5 மாநில தேர்தலில் பா.ஜ.க. அபாரம்


    மிசோரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. பதவியை தக்கவைத்தது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை பறித்தது பா.ஜ.க. இதனால் 3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. தெலுங்கானாவில் காங்கிரசும், மிசோரமில் எதிர்க்கட்சியும் ஆட்சியைப் பிடித்தன.

    • காங்கிரஸ் உட்கட்சி பூசலை நிறைவுக்கு கொண்டு வந்து வெற்றி கண்டார், சுனில்
    • இருமுனை போட்டி மட்டுமே இருக்கும் வகையில் களத்தை தெளிவாக்கினார்

    தேர்தலில் அரசியல் கட்சிகள் வெற்றி பெற ஆலோசனைகளை கூறி, வியூகம் அமைத்து தரும் பணியை தனியார் அமைப்புகள் செய்து வருவதை கடந்த சில வருடங்களாகவே இந்திய மக்கள் கண்டு வருகின்றனர்.

    இதில் பிரசாந்த் கிஷோர், சுனில் கனுகொலு ஆகியோர் பிரபலமானவர்கள்.

    கடந்த வருடம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்ட கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றார் சுனில் கனுகொலு (Sunil Kanugolu). கடந்த மே மாதம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வியூகம் அமைத்து அதன் வெற்றிக்கு வழி வகுத்தார்.

    இதை தொடர்ந்து சுனில், தெலுங்கானாவில் கவனம் செலுத்தினார்.

    தெலுங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (முன்னர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி) கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கியிருந்தது.

    காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமையின்றி பல தலைவர்களின் கீழ் பல குழுக்கள் ஒன்றையொன்று எதிர்த்து வந்தன. முதல் வேலையாக கட்சிக்குள் கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும் என கட்சி தலைமையிடம் எடுத்து கூறி அந்த முயற்சியில் வெற்றி கண்டார் சுனில்.

    சுனிலை முடக்கும் வகையில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும், அப்போதைய முதல்வருமான கே.சி.ஆர்., சுனிலை காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாக்கினார். சுனிலின் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. அவரது அலுவலக பொருட்கள் காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டது.

    ஆனால், இதில் அச்சமடையாத சுனில், புதிய அலுவலகம் ஒன்றை அமைத்து மீண்டும் மன உறுதியுடன் காங்கிரஸ் வெற்றி பெற செயல்பட்டார்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்திக்கு ஆலோசனை வழங்க கூடிய சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், தன்னை எங்குமே முன்னிறுத்தி கொள்ள விரும்பாதவரான சுனில், ஊடகங்களை அறவே தவிர்ப்பவர்.

    பா.ஜ.க.விற்கு செல்ல கூடிய வாக்குகளால் கே.சி.ஆர். மீண்டும் பதவியில் அமர முடியும் என முதலிலேயே கணித்து அதை தகர்க்க துல்லியமாக திட்டமிட்டார். தெலுங்கானாவில் பா.ஜ.க.வின் தாக்கத்தை தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தீவிர பிரசாரத்திற்கும் திட்டமிட்டு தந்தார்.

    தன்னை கைது செய்ய உத்தரவிட்டிருந்த கே.சி.ஆர். மீது கோபத்தில் இருந்த ஒய்.எஸ்.ஆர். மகள் ஒய்.எஸ். ஷர்மிளா தேர்தலில் போட்டியிடாமல் நின்றால் ஓட்டு பிரிவை தடுக்க முடியும் என புரிய வைத்து அந்த முயற்சியில் வெற்றி பெற்றார்.

    அதே போன்று தெலுகு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்தலில் நிற்பதையும் சாதுர்யமாக பேச்சு நடத்தி தடுத்தார்.


    இதனால், 2023 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். என் இருமுனை போட்டி மட்டுமே நடைபெறும் வகையில் களத்தை தெளிவாக்கினார்.

    சுனில் கனுகொலு கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியின் செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். சென்னையில் வளர்ந்தவரான சுனில் அமெரிக்காவில் பட்டம் பெற்றவர்.

    நிர்வாக மேலாண்மை ஆலோசனைக்கான புகழ் பெற்ற மெக்கின்சே (McKinsey) நிறுவனத்தில் பணியாற்றியவர்.

    இந்தியா திரும்பிய சுனில் அசோசியேஷன் ஆஃப் பில்லியன் மைண்ட்ஸ் (ABM) எனும் அரசியல் கட்சிகளுக்கு வியூகங்கள் வகுத்து தரும் நிறுவனத்தை தொடங்கி பா.ஜ.க., தி.மு.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகளுக்கு ஆலோசகராக செயல்பட்டவர்.

    கல்வகுன்ட்லா சந்திரசேகர் ராவ் (KCR) வகுத்த வியூகங்கள், கனுகொலு சுனில் வியூகங்கள் முன் எடுபடாமல் தோற்றதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 மாநிலங்களில் இவ்வருட இறுதிக்குள் சட்டசபை காலம் நிறைவடைகிறது
    • 5 மாநிலங்களிலும் மொத்தம் 16.1 கோடி வாக்காளர்கள் உள்ளனர்

    இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

    இதற்கிடையே, தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் நிறைவடைகிறது.

    அந்த 5 மாநிலங்களில் நடைபெற வேண்டிய 2023க்கான சட்டசபை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பதிலிருந்து கட்டமைப்பு வசதிகளின் தேவை உள்ளிட்ட முக்கிய ஏற்பாடுகளை செய்வது வரை தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

    அதே நேரம் இம்மாநிலங்களில் தேர்தலை எதிர்நோக்கியுள்ள கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன.

    தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

    இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இதனை வெளியிட்டார். தேர்தலை அமைதியாக நடத்த உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க முழுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இம்முறை சத்தீஸ்கரில் மட்டும் 2 கட்டங்களாகவும் பிற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.

    5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 16.1 கோடி வாக்காளர்களில் 60.2 லட்சம் முதன்முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 8.2 கோடி பேர் ஆண் வாக்காளர்கள்; 7.8 கோடி பேர் பெண் வாக்காளர்கள்.

    மொத்தம் 1.79 லட்சம் வாக்கு சாவடிகள் அமைய உள்ளன. இவற்றில் 1 கோடியே 1 லட்சம் வாக்குச் சாவடிகளில் பதிவாகும் வாக்குகளை நேரில் கண்காணிக்க "வெப் கேமிரா" (web camera) அமைக்கப்பட உள்ளது.

    மிசோரமில் நவம்பர் 7-ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்படும். மிசோரத்தில் வருகிற 13-ந்தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும். அன்றே மனுதாக்கல் தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 20-ந்தேதி ஆகும்.

    சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்டத்துக்கான தேர்தல் அறிக்கை வருகிற 13-ஆம்தேதியும், இரண்டாம் கட்டத்துக்கான தேர்தல் அறிகை 21-ஆம் தேதியும் வெளியிடப்படும்.

    மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17 அன்று தேர்தல் நடைபெறும். வருகிற 21-ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். 30-ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும்.

    ராஜஸ்தானில் நவம்பர் 23 அன்று  தேர்தல் நடைபெறும். வருகிற 30-ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அன்று தொடங்கி நவம்பர் 6 வரை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யலாம்.

    தெலுங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெறும். நவம்பர் 3-ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அன்று தொடங்கி நவம்பர் 10-ஆம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம்.

    ஐந்து மாநிலங்களிலும் டிசம்பர் 3-ஆம் தேதி, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்..

    5 மாநிலங்களிலும் உள்ள தற்போதைய சட்டசபை நிலவரம்:

    தெலுங்கானா - மொத்த இடங்கள்: 119 - ஆளும் கட்சி: பாரத் ராஷ்ட்ரிய சமிதி

    மத்திய பிரதேசம் - மொத்த இடங்கள்: 230 - ஆளும் கட்சி: பா.ஜ.க.

    சத்தீஸ்கர் - மொத்த இடங்கள்: 90 - ஆளும் கட்சி: காங்கிரஸ்

    ராஜஸ்தான் - மொத்த இடங்கள்: 200 - ஆளும் கட்சி: காங்கிரஸ்

    மிசோரம் - மொத்த இடங்கள்: 40 - ஆளும் கட்சி: மிசோ தேசிய முன்னணி

    இம்முறை ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா தீவிரமாக உள்ளது. அதே போல் மத்திய பிரதேசத்தை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.

    ஐந்து  மாநில தேர்தல்கள் முடிந்த 4 மாதங்களில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. எனவே 5 மாநில தேர்தல்கள் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.

    இதன் காரணமாக 5 மாநில தேர்தல் முடிவை நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    ×