search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்க தேர்தல்"

    • 17 வகையான ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்
    • கிராம நிர்வாக அலுவலரால் அளிக்கப்பட்டுள்ள அடையாள சான்றுகள் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

    நாகர்கோவில், ஏப்.20-

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டம் கோதை யாறு வடிநில கோட்டத்தில் அமைந்துள்ள 46 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளில் 8 தலைவர் பதவி மற்றும் 7 ஆட்சி மண்டல தொகுதி உறுப்பி னர்களின் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடை பெறவுள்ளது.

    வாக்குப்பதிவு தினத் தன்று வாக்காளர்கள் உரிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குப் பதிவு மையத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும். இந்திய தேர்தல் ஆணை யத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வருமான வரி அடையாள அட்டை, பணி அடையாள அட்டைகள் - மாநில, மைய அரசு (அல்லது) அரசு சார்பொது நிறுவனங்கள் (அல்லது) உள்ளாட்சி அமைப்புகள் (அல்லது) தனியார் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு வழங்கியுள்ள பணியாளர் அடையாள அட்டை, வங்கி, உழவர், அஞ்சல் நிலைய பற்று வரவு புத்தகம், தற்போது பயன்படுத்தி வரும் குடும்ப அட்டை, மாணவர் அடையாள அட்டை, சொத்து ஆவணங்கள், பட்டா மற்றும் பதிவு செய்யப்பட்ட பத்திரம் முதலியவை, படை கலம் உரிமம், நடத்துனர் உரிமம் (உரிய அதிகாரம் பெற்ற அலுவலரால் வழங்கப்பட்டது), ஓய்வூதிய ஆவணம், அதாவது முன்னாள் படை வீரர் ஓய்வூதிய புத்தகம், ஓய்வூதியம் வழங்கிய ஆவணம் போன்றவை, முன்னாள் படை வீரர்களின் விதவைகள், சார்ந்தோர் சான்றுகள், ரெயில், பேருந்து பயண அடையாள அட்டை, உடல் ஊனமுற்றோருக்கான சான்று, சுதந்திர போராட்ட வீரரின் அடையாள அட்டை, கிராம நிர்வாக அலுவலரால் அளிக்கப்பட்டுள்ள அடையாள சான்றுகள் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

    கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்டுள்ள சான்றுகள் வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடியதாகவும் மற்றும் வாக்காளரை சார்ந்த கீழ்க்கண்ட விவரங்களை தெரிவிப்ப தாகவும் இருக்க வேண்டும்.

    வாக்காளரின் பெயர், வாக்காளரின் வயது, தந்தையின் பெயர், விலாசம், வாக்காளர் பட்டியலில் வரிசை மற்றும் பகுதி எண் இடம் பெற்றிருக்க வேண்டும். நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலுக்கு வாக்களிக்க வருபவர்கள் புகைப்பட அடையாள அட்டையுடன் தங்கள் நில உரிமையாக காட்டும் ஆவணங்களையும் எடுத்துவர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில் இறந்து போனவர்களின் பெயர்கள் இடம் பெற்றதாக மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
    • பிரச்சினை உள்ள 12 பகுதிகளில் தேர்தலை தள்ளி வைக்க கோரினர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட 123 ஏரிகளுக்கான ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் இன்று நடைபெற இருந்தது. இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிடுபவருக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

    இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில் இறந்து போனவர்களின் பெயர்களும் விவசாயம் மேற்கொள்ளாத பட்டா இல்லாத நபர்களின் பெயர்களும் இடம் பெற்றதாக விவசாயிகள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

    மேலும் பிரச்சினை உள்ள 12 பகுதிகளில் தேர்தலை தள்ளி வைக்க கோரினர்.

    இதையடுத்து 12 ஏரி பகுதிகளில் நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நோட்டீஸ் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் பொன்னேரி கோட்டத்தில் கீழ்கண்ட கிராமங்களில் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தேர்தல் சில நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

    இலவம்பேடு ஏரி பெரிய மற்றும் சிறிய ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், ஒன்பாக்கம் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், ஆத்ரேய மங்கலம் பெரிய மற்றும் சிறிய ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், வேலூர் அம்மனேரி மற்றும் பள்ள ஏரி பெரிய மற்றும் சிறிய ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், பள்ளிப்பாளையம் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், சிறுளப்பாக்கம் பெரிய மற்றும் சிறிய ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம்.

    ஆரணி ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், சின்னம்பேடு பெரிய ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், குமார சிறுளப்பாக்கம் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், சேகண்யம் பெரிய ஏரி மற்றும் சித்தேரி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம், உப்புநெல்வாய் ஏரி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம், வழுதலம்பேடு பெரிய மற்றும் சிறிய ஏரி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் ஆகிய சங்க தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஏரி பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் குறித்து வருவாய் மற்றும் பொதுப்பணி துறையினர் முறையான அறிவிப்பை வெளியிடவில்லை.
    • பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தவர்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளதால் தேர்தலை ரத்து செய்து மாற்று தேதியில் நடத்த வேண்டும்.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் ஏரி நீரை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதிகளின் உறுப்பினர் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யும் பணி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிலையில் வருகிற 19ஆம் தேதி சங்க தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவுரிவாக்கம் கொளத்தூர் - குமரசிரலப்பாக்கம் இரண்டு ஏரிகளில் வருவாய் மற்றும் பொதுப்பணி துறையினர் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஆட்சி மண்டல தொகுதிகளின் உறுப்பினர் பட்டியலில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த இருவரின் பெயர்கள் தற்போதும் இடம்பெற்றுள்ளதால் இரண்டு ஏரிகளுக்கும் வருகிற 19 ஆம் தேதி தேர்தலை நடத்தாமல் ரத்து செய்து மாற்றுத் தேதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் எனவும், வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யக்கூடாது எனவும் கூறி மனு அளித்ததாகவும் அதனை அதிகாரிகள் ஏற்க மறுப்பதாகவும் தேர்தல் நடத்துவது குறித்து முறையாக அறிவிப்பை வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் வெளியிடவில்லை எனவும் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடக்கிறது.
    • வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ந்தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, கீழக்கரை மற்றும் கமுதி வட்டங்களில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் நீர்வளத்துறையினரால் அமைக்கப்பட்ட நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்க

    ளுக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

    நீரினை பயன்படுத் துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து நாளை (24-ந்தேதி) முதல் 27-ந்தேதி வரை (காலை 9 மணியில் இருந்து 4 மணி வரை) சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் வேட்பு மனுக்கள் பெறப்படும்.

    இந்த வேட்புமனுக்கள் 28-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கூர்ந்தாய்வு செய்து, ஏற்கத்தக்க வேட்பு மனுக்களை சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும். போட்டியில் இருந்து விலகிகொள்ள விரும்பும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை 28-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

    போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் 28-ந்தேதி மாலை 5 மணிக்கு மேல் அறிவிப்பார். நீரினை பயன்படுத்துவோர் சங்கங் களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ந்தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

    பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 5.2.2023 அன்று மாலை 4 மணி முதல் எண்ணத் தொடங்கி முடிவுகள் தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    ராமநாதபுரம் வட்டம் சார்ந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவ லகத்திலும், பரமக்குடி வட்டத்திற்கு உதவி ஆட்சியர் அலுவலகத்திலும், பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருவாடானை வட்டத்தில் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்திலும், கீழக்கரை வட்டத்தில் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்திலும், கமுதி வட்டத்தில் கமுதி வட்டாட்சியர் அலுவ லகத்தில் பெற்றுக் கொள்ள லாம் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • ஈஸ்வரன் போட்டியின்றி மீண்டும் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
    • 25 ஆண்டுகளுக்கு பிறகு சைமா சங்க தேர்தல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

    திருப்பூர்:

    திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களை உறுப்பினராக கொண்டு இயங்கி வருகிறது தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்(சைமா). இந்த சங்கத்தின் 2022- 2025 க்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. வக்கீல் ராமமூர்த்தி தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். வைகிங் ஈஸ்வரன் அணி, பிரியா ஒசைரிஸ் பாலசந்தரை துணை தலைவராக நிறுத்தி மாற்றத்திற்கான அணி என இரண்டு அணியாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஈஸ்வரன் போட்டியின்றி மீண்டும் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    பிற பதவிகளுக்கு மொத்தம் 52 பேர் போட்டியிட்டனர். திருப்பூர் ஹார்வி ரோட்டில் உள்ள சைமா சங்க வளாகத்தில் இன்று காலை 9மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மதியம் 2 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

    துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணை செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் பதவி என மொத்தம் 5 ஓட்டுச்சீட்டு வழங்கப்பட்டது. ஓட்டுச்சீட்டில் போட்டியாளர்கள் பெயர், போட்டோ, இடம் பெற்று இருந்தது. ஓட்டுச்சீட்டில் முத்திரை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். பேனாவால் டிக் செய்யக்கூடாது என தேர்தல் அதிகாரியால் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    காலை 9மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. உறுப்பினர்கள் ஆர்வமுடன் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர். மதியம் 2 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததையடுத்து மாலை 3 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அதிக வாக்குகள் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். நாளை நடைபெறும் மகா சபை கூட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் புதிய நிர்வாகிகளாக பதவி ஏற்க உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு பிறகு சைமா சங்க தேர்தல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆலங்குடி பணிமனையில் தி.மு.க. தொழிற் சங்க தேர்தல் நடைபெற்றது
    • நான்கு பதவிகளுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதுக்கோட்டை மண்டலம் ஆ லங்குடி கிளையில் நடைபெற்ற தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தல் ஆலங்குடி பணிமனை நடைபெற்றது. இதில் பொருளாளர் பதவிக்கு கொத்தமங்கலம் நடத்துனர் சந்திரசேகரன் மற்றும் பாரதி போட்டியிட்டனர். சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் அதிகாரியக சுப்பிரமணியன், சத்தியமூர்த்தி, ஐயப்பன், ஆறுமுகம் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் தேர்தல் வெற்றி பெற்றவர்கள் பணிமனை எதிரில் வெடி வெடித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர். முன்னதாக தலைவராக நடத்துனர் செல்வம், துணைத் தலைவராக ஓட்டுநர் சுந்தர்ராஜன். செயலாளராக ஓட்டுநர் கணேசன், துணைச் செயலாளராக செபஸ்தியார் மொத்தம் நான்கு பதவிகளுக்கு ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.

    ×