search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குவிந்த பொதுமக்கள்"

    • கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.
    • பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.

    இந்த கொட்டும் தண்ணீ ரில் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு வந்து செல்கி றார்கள். மேலும் விழா மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் பள்ளி காலாண்டு தேர்வு விடு முறை விடப்பட்டுள்ளது. மேலும் மிலாது நபி, சனி க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருகிறது.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 4 நாட்களாக மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.

    தொடர் விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களாக கொடிவேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    நேற்று (சனிக்கிழமை) மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வெளி மாவட்டங்களில் இருந்தும் பொது மக்கள் ஏராள மானோர் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளி த்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் இன்று ஞாயிற்றுக்கிழமை கொடிவேரிக்கு வழக்கத்ைத விட பொதுமக்கள் அதிகள வில் வந்தனர்.

    மேலும் இன்று வெளி மாவட்டங்களில் இருந்து கார், வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் இருந்து கொடிவேரிக்கு ஏராள மானோர் வந்திருந்தனர். காலை முதலே கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அலை மோதியது.

    ஈரோடு, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் மற்றும் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இரு ந்தும், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கொடிவேரிக்கு தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

    இதை தொடர்ந்து சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என பலர் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இளைஞர்கள் பலர் வந்து குளித்து குதுகளித்த னர். இதையடுத்து பொது மக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகள், வெளிப்பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன்களையும் ருசித்து விட்டு சென்றனர்.

    இதே போல் சத்தியமங்க லம் அருகே உள்ள பவானி சாகருக்கு இன்று பொது மக்கள் பலர் வந்திருந்தனர். இைத தொடர்ந்து குடும்பத்துடன் வந்திருந்த மக்கள் அணை பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.

    மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி குது களித்தனர். பெண்கள் பலர் சறுக்கு விளையாடி இயற்கையை ரசித்து சென்ற னர். இதே போல் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தனர்.

    இதனால் பவானிசாகர் பகுதியில் இன்று எங்கு பார்த்தாலும் பொது மக்க ளின் கூட்டமாவே காண ப்பட்டது. மேலும் இன்று அணை பூங்காவின் வெளி பகுதியில் மீன் மற்றும் பல்வேறு கடைகள் அமைக்க ப்பட்டு இருந்தன. அங்கும் மக்களின் கூட்டம் அலை மோதியது.

    மேலும் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பண்ணாரியம்மன் கோவில் என கோபி, சத்தியமங்கலம் சுற் வட்டார பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் எங்கு பார்த்தாலும் மக்க ளின் கூட்டமாக காணப்பட்டது.

    இதே போல் அந்தியூர் வரட்டுபள்ளம் அணை பகுதிக்கும் பொதுமக்கள் பலர் வந்து இருந்தனர். அங்கு இயற்கை அழகை ரசித்து சென்றனர்.

    மேலும் பர்கூர் வன ப்பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் ஏராள மானோர் வந்திருந்தனர். இரு சக்கர வாகனங்களில் வந்த அவர்கள் மலைப்பகுதி யின் அழ கை ரசித்து விட்டு சென்ற னர்.

    ஈரோடு வ.உ.சி. பூங்கா விலும் இன்று மக்களின் கூட்டம் அதிகளவில் இரு ந்தது. குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் அங்கு ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாடி குதுகளித்தனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளையும் உண்டு மகிழ்ந்தனர்.

    • கொடிவேரி தடுப்பணைக்கு வந்து கொட்டும் தண்ணீர் குளித்து மகிழ்ந்தனர்.
    • கொடிவேரி அணையில் கூட்டம அதிகரித்து காணப்பட்டது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் விடுமுறை தினங்களில் அதிகளவில் வருகை தந்து குளித்து மகிழ்ந்து சென்று வருகிறார்கள்.

    ஏப்ரல், ேம மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் ஏராளமான பேர் தினமும் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து கொட்டும் தண்ணீர் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக கொடிவேரி தடுப்பணை பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அவ்வ ப்போது சனி, ஞாயிற்றுக்கி ழமைகளில் மட்டுமே கூட்டம் ஓரளவுக்கு வந்தது.

    இந்நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை விடு முறையையொட்டி ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பேர் கொடி தடுப்பணைக்கு வந்தனர். அவர்கள் அருவி யில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் கூட்டம அதிகரித்து காண ப்பட்டது. சுற்றுலா பயணி கள் கொடிவேரி அணை பகுதியில் விற்பனையாகும் மீன்களை சுடச்சுட வாங்கி சாப்பிட்டனர்.

    • சுற்றுலா தலங்களில் இன்று 3-வது நாளாக மக்கள் குவிந்தனர்.
    • கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் இன்று 3-வது நாளாக மக்கள் குவிந்தனர்.

    சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணை உள்ளது. அதன் அருகே பூங்கா அமைந்துள்ளது.

    இந்த பூங்காவுக்கு சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    அதே போல் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து அணையை ரசித்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டு மற்றும் நேற்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்து ரசித்து சென்றனர். கடந்த 2 நாட்களாக அணை பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    இந்த நிலையில் 3-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பவானிசாகர் அணை பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    காலை முதலே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம் என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.

    இதை தொடர்ந்து நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

    அணைப் பூங்காவுக்கு தங்கள் குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் அங்கு ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் சறுக்கு விளையாடி குதுகளித்தனர்.

    இதை தொடர்ந்து பொது மக்கள் பூங்காவின் இயற்கை அழகை கண்டு களித்தனர். மேலும் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தப்படி சென்றனர்.

    இதையொட்டி அணையின் வெளி பகுதியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அணையை ரசித்த பொதுமக்கள் அங்கு விற்பனை செய்யப்படும் மீன் வகைகளையும் ருசித்தனர்.

    அதே போல் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைளையும் ரோட்டோரம் அமர்ந்து சாப்பிட்டனர்.

    இதனால் இன்று காலை முதலே அணை பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது.

    தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையால் பவானிசாகர் பகுதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    இதே போல் கோபிசெட்டி பாளையம் அடுத்த கொடி வேரி தடுப்பணைக்கு இன்று 3-வது நாளாக பொது மக்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் கொடுவேரி தடுப்பணை பகுதியில் இன்றும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் இன்று காலை மக்கள் குறைந்து காணப்ப ட்டாலும் நேரம் செல்ல செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தது.

    குடும்பத்துடன் பூங்காவுக்கு வந்த மக்கள் அங்கு ஊஞ்சல், சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர்.

    மேலும் பண்ணாரி யம்மன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன், சென்னிமலை முருகன் கோவில், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்பட மாவட்டத்தின் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கடந்த 3 நாட்களாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

    • ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு பொது மக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் பலர் வந்திருந்தனர். பவானிசாகர் அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக இளைஞர்கள் பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    காலை பொதுமக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. ஆனால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணையின் வெளிபகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர்.

    • திருமணம் கைகூட கன்னி பெண்கள் விரதம் இருப்பது வழக்கம்.
    • கூட்டம் அதிகளவில் இருந்தது.

    கோவை,

    கோவையில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நேற்று மாட்டு பொங்கலை யொட்டி கால்நடைகளை வளர்ப்பவர்கள் தங்களது ஆடு, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, பூஜை செய்து வணங்கினர்.

    மேலும் காந்தி பார்க் அருகில் உள்ள கோவிலுக்கு கால்நடைகளை அழைத்து வந்து பூஜை செய்தனர். இதனை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிதனர். இன்று பொங்கல் விழாவின் கடைசி நாளான காணும் பொங்கல் கடைப்பிடிக்கப்பட்டது.

    காணும் பொங்கலில் வீட்டில் உள்ள எல்லோரும் இணைந்து வெளியில் சென்றால் தான் பொங்கல் கொண்டாட்டம் நிறைவு பெரும். வீட்டில் சமைத்து அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சிலர் சென்று வருவர். பொங்கல் அன்று சமைத்த சாதத்தை முன்னோர் நன்மைக்காகவும், உடன்பிறந்தோர் நலனுக்காகவும் காகம், குருவி போன்ற பறவைகளுக்கு அளிக்க வேண்டும் என்ற ஐதீகமும் உண்டு.

    திருமணம் கைகூட கன்னி பெண்கள் விரதம் இருப்பதும் காணும் பொங்கலில் வழக்கம்.

    ஆனாலும், கோவிலுக்கு செல்வதும், சுற்றுலா செல்வதும் மனதிற்கு இதம் அளிக்கும் என்பதாலும், இன்றுடன் பள்ளி கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் விடுமுறை முடிய உள்ளதாலும் மக்கள் குடும்பத்தினருடன் வெளியே சென்று வந்தனர்.

    இதையடுத்து இன்று கோவையின் முக்கிய இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது.

    வ.உ.சசி சிறுவர் பூங்காவில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் குவிந்தனர்.

    அங்கு குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். வாலாங்குளத்தில் படகு இல்லத்தில் குவிந்த மக்கள் படகு சவாரி செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோன்று கோவை உக்கடம் குளக்கரை, வேளாண்பல்கலைகழகம் பூங்கா, கோவை குற்றாலம் ஆகிய இடங்களில் கூட்டம் அதிகளவில் இருந்தது.

    ஆன்மிக தலங்களான மருதமலை கோவில், பேரூர் கோவில், புலயகுளம் விநாயகர் கோவில், பொள்ளாச்சியை அடுத்த மாசாணியம்மன் கோவில், உள்பட பல கோவில்களில் மக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதனால் கோவை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.இதையடுத்து மாநகர ோபலீசார் சார்பில் கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    ×