search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People gathered"

    • மலைக்கோட்டை மற்றும் அதன் அடிவாரத்தில் அமை ந்துள்ள குமரன் பூங்காவில் மட்டுமே பொது மக்கள் தங்கள் குழந்தைகளுடன் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.
    • இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் வாரவிடுமுறை அதனை தொடர்ந்து ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தென்மாவட்ட பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல குவிந்தனர். இதனால் பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    குடும்பத்துடன் ஆயுதபூஜை கொண்டாட தயாராகி வருகின்றனர். திண்டுக்கல் நகர் பகுதியில் சுற்றுலா இடங்கள் அதிக அளவில் இல்லை. மலைக்கோட்டை மற்றும் அதன் அடிவாரத்தில் அமை ந்துள்ள குமரன் பூங்காவில் மட்டுமே பொது மக்கள் தங்கள் குழந்தைகளுடன் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று மாலை முதலே அதிக அளவில் இளைஞர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் கூட்டம் கூட்டமாக மலைக்கோட்டையை சுற்றிப் பார்க்க வந்தனர்.

    இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். மேலும் குமரன் பூங்காவில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்களையும் கண்டு மகிழ்ந்தனர்.

    நகர் பகுதியில் மேலும் பூங்காக்கள், கோட்டை குளத்தில் படகு சவாரி உள்ளிட்ட அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருமணம் கைகூட கன்னி பெண்கள் விரதம் இருப்பது வழக்கம்.
    • கூட்டம் அதிகளவில் இருந்தது.

    கோவை,

    கோவையில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நேற்று மாட்டு பொங்கலை யொட்டி கால்நடைகளை வளர்ப்பவர்கள் தங்களது ஆடு, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, பூஜை செய்து வணங்கினர்.

    மேலும் காந்தி பார்க் அருகில் உள்ள கோவிலுக்கு கால்நடைகளை அழைத்து வந்து பூஜை செய்தனர். இதனை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிதனர். இன்று பொங்கல் விழாவின் கடைசி நாளான காணும் பொங்கல் கடைப்பிடிக்கப்பட்டது.

    காணும் பொங்கலில் வீட்டில் உள்ள எல்லோரும் இணைந்து வெளியில் சென்றால் தான் பொங்கல் கொண்டாட்டம் நிறைவு பெரும். வீட்டில் சமைத்து அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சிலர் சென்று வருவர். பொங்கல் அன்று சமைத்த சாதத்தை முன்னோர் நன்மைக்காகவும், உடன்பிறந்தோர் நலனுக்காகவும் காகம், குருவி போன்ற பறவைகளுக்கு அளிக்க வேண்டும் என்ற ஐதீகமும் உண்டு.

    திருமணம் கைகூட கன்னி பெண்கள் விரதம் இருப்பதும் காணும் பொங்கலில் வழக்கம்.

    ஆனாலும், கோவிலுக்கு செல்வதும், சுற்றுலா செல்வதும் மனதிற்கு இதம் அளிக்கும் என்பதாலும், இன்றுடன் பள்ளி கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் விடுமுறை முடிய உள்ளதாலும் மக்கள் குடும்பத்தினருடன் வெளியே சென்று வந்தனர்.

    இதையடுத்து இன்று கோவையின் முக்கிய இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது.

    வ.உ.சசி சிறுவர் பூங்காவில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் குவிந்தனர்.

    அங்கு குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். வாலாங்குளத்தில் படகு இல்லத்தில் குவிந்த மக்கள் படகு சவாரி செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோன்று கோவை உக்கடம் குளக்கரை, வேளாண்பல்கலைகழகம் பூங்கா, கோவை குற்றாலம் ஆகிய இடங்களில் கூட்டம் அதிகளவில் இருந்தது.

    ஆன்மிக தலங்களான மருதமலை கோவில், பேரூர் கோவில், புலயகுளம் விநாயகர் கோவில், பொள்ளாச்சியை அடுத்த மாசாணியம்மன் கோவில், உள்பட பல கோவில்களில் மக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதனால் கோவை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.இதையடுத்து மாநகர ோபலீசார் சார்பில் கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    • கும்கி யானையை காண தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் அங்கு குவிந்தனர்.
    • வனத்துறையினர் யாரையும் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. சுமார் 300 மீட்டர்தூரத்தில் இருந்து யானையை பார்த்து புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் பொதுமக்கள் மகிழ்ந்தனர்.

    தாளவாடி:

    தாளவாடி வனச்சர–கத்துக்கு உட்பட்ட இரியபுரம் ,தொட்டகாஜனூர், தர்மாபுரம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய பயிர்களை சேதபடுத்தியும் பொதுமக்களையும் தாக்கி வந்தது.

    அந்த யானையை கட்டுப்படுத்த பொள்ளாச்சி ஆணைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி மற்றும் ராஜவர்தன் என்ற 2 கும்கி யானைகள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தாளவாடி அடுத்த இரிபுரம் பகுதிக்கு கொண்டுவரபட்டது.

    இந்நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் கும்கி யானையை காண தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் அங்கு குவிந்தனர்.

    வனத்துறையினர் யாரையும் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. சுமார் 300 மீட்டர்தூரத்தில் இருந்து யானையை பார்த்து புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் பொதுமக்கள் மகிழ்ந்தனர். காலை முதல் மாலை வரை பொதுமக்கள் ஆவலுடன் வந்து யானையை பார்த்து சென்றனர்.

    ×