search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்கி யானையை காண  குவிந்த பொதுமக்கள்
    X

    கும்கி யானையை காண குவிந்த பொதுமக்கள்

    • கும்கி யானையை காண தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் அங்கு குவிந்தனர்.
    • வனத்துறையினர் யாரையும் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. சுமார் 300 மீட்டர்தூரத்தில் இருந்து யானையை பார்த்து புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் பொதுமக்கள் மகிழ்ந்தனர்.

    தாளவாடி:

    தாளவாடி வனச்சர–கத்துக்கு உட்பட்ட இரியபுரம் ,தொட்டகாஜனூர், தர்மாபுரம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய பயிர்களை சேதபடுத்தியும் பொதுமக்களையும் தாக்கி வந்தது.

    அந்த யானையை கட்டுப்படுத்த பொள்ளாச்சி ஆணைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி மற்றும் ராஜவர்தன் என்ற 2 கும்கி யானைகள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தாளவாடி அடுத்த இரிபுரம் பகுதிக்கு கொண்டுவரபட்டது.

    இந்நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் கும்கி யானையை காண தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் அங்கு குவிந்தனர்.

    வனத்துறையினர் யாரையும் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. சுமார் 300 மீட்டர்தூரத்தில் இருந்து யானையை பார்த்து புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் பொதுமக்கள் மகிழ்ந்தனர். காலை முதல் மாலை வரை பொதுமக்கள் ஆவலுடன் வந்து யானையை பார்த்து சென்றனர்.

    Next Story
    ×