search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரு பூர்ணிமா"

    • ஆடி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மாவிளக்கு போடுவார்கள்.
    • ஆடி மாதம் எள் தீபம் ஏற்றுங்கள் இது எதிர்ப்பு சக்தியை நமக்குத்தரும்.

    1. திருமாலுக்கு வாகனமாக அமைந்தவர் கருடன். இவர் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.

    2. ஆடி மாதத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

    3. ஆடி மாதம் என்றாலே மல்லிகை மணமும் கூடவே வரும். அம்மன் கோவில்களில் பூக்களால் அலங்கார பூஷிணியாக அம்மன் அமர்ந்திருப்பாள்.

    4. ஆடி மாதத்தில் தான் சதுர்மாஸ் விரதம் தொடங்குகிறது. அதாவது சன்யாசி போன்ற பிரியர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து பூஜை புனஸ்கரங்களை தொடருவர். இந்த காலத்தில் தான் பல ஊர்வன வகையை சேர்ந்த ஜீவராசிகள் மழை வெள்ளத்தை தாங்க முடியாமல் தங்கள் இருப்பிடத்தில் இருந்து வெளிவரும். அப்போது நடந்தால் அவைகள் மிதிபட்டு, துன்பப்பட்டு இறக்க நேரிடும் என்பதால் சன்யாசிகள், சாதுக்கள் ஒரு இடத்தில் போய் அமர்ந்து நாலு மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பர். வியாச பூஜையும் நடக்கும். இது ஆடி பவுர்ணமியில் குரு பூர்ணிமா என்ற பெயரில் நடக்கும்.

    5. ஆடி மாதம் வரும் ஏகாதசியை மகாராஷ்டரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். காவடி போல் தோளில் இரு பக்கமும், பால் அல்லது தயிர் எடுத்துக் கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலை தரிசனம் செய்துவிட்டு வருவார்கள். பண்டரிபுரம் வரை பொடி நடைதான். நடுநடுவே செல்வந்தர்கள் அவர்களுக்கு உணவு பந்தல் ஏற்பாடு செய்திருப்பார்கள்.

    6. ஆடி மாதத்திலேதான் ஜீவ நதிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. இதை ஜலப்பிரவாஹப்பூஜை என்று சொல்கிறார்கள். காவேரி அம்மனுக்கு மசக்கை என்று ஆடி பதினெட்டாம் பெருக்கை கொண்டாடுகிறார்கள்.

    7. அன்னை காமாட்சியும் சிவனை நோக்கித் தவம் இருந்து பின் ஈசனை அடைந்த மாதம் இந்த ஆடி மாதம்தான். ஆடி மாதம் சிலர் தேவியை வாராஹியாக வழிபடுவர். இவள் நமக்கு தைரியத்தை வழங்கி சத்ருவை அடக்குகிறாள்.

    8. அன்னையை பரா சக்தியாக கண்ட ஸ்ரீ அரவிந்தர் பிறந்த தினம். ஆகஸ்டு 15-ல் வருகிறது. ஷீரடியில் ஷீரடி பாபா உத்சவம் ஆடி மாதம் பிரமாதமாக நடக்கும்.

    9. உடலெல்லாம் தீக்காயங்களுடன் வந்த ரேணுகாதேவிக்கு, ஏழைகளான சலவைத் தொழிலாளர்கள் வேப்பிலை ஆடையும் உணவும் கொடுத்த நிகழ்ச்சி நடந்ததும் ஆடி மாதத்தில்தான். அதன் காரணமாகவே ஆடி மாதத்தில் வேப்பிலைச் சேலை கட்டி அம்மனை வலம் வருவதும், அவளுக்கு கஞ்சி, கூழ் வார்க்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10. தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஆடி வெள்ளியும் தென் மாவட்டங்களில் ஆடிச் செவ்வாயும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆடி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் கோவில்களில் பெண்கள் அம்பாளுக்கு மாவிளக்கு போடுவார்கள். இல்லத்தரசிகள் குத்து விளக்கு பூஜை செய்வர். ஸ்ரீதுர்காதேவிக்கு எலுமிச்சை பழ தீபம் ஏற்றுவார்கள்.

    11. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசியில் கோ பத்ம விரதம் (பசு வழிபாடு) கடைப்பிடித்தால் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பர்.

    12. ஆடி மாதத்தில் அவதரித்த நாயன்மார்கள்& சுந்தரமூர்த்தி நாயனார். கலிய நாயனார், புகழ்சோழர், மூர்த்தி நாயனார் ஆகியோர் ஆவர். ஆளவந்தார், புண்டரி காஷர், கந்தாடை தோழப்பர், பத்ரி நாராயணர் போன்ற ஆழ்வார்கள் அவதரித்ததும் ஆடி மாதத்தில்தான்.

    13. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைக்கொட்டு விழா நடைபெறும் பத்து நாட்களில், ஆடி வீதி நான்கிலும் அம்மன் வலம் வருவார். ஆடி சுவாதியில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும் புறப்பாடும் நடைபெறும்.

    14. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆண்டாளுக்கு ஆடிப்பூர உற்சவம் மூன்று நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும். உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்தில், உதங்க முனிவருக்கு ஜவண்ணங்காட்டி அருளியதன் நினைவாக பஞ்சப் பிராகார விழா நடைபெறும்.

    15. கொடு முடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவில் ஆடிப்பதினெட்டில் மும்மூர்த்திகளும் காவிரிக்கு எழுந்தருள்வார்கள். அன்று இரவு பச்சை மண்ணில் பானை செய்து, மாவிளக்கு, காதோலை, கருகமணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை அதில் வைத்துவிட்டு வருவர்.

    சர்க்கரைக் காப்பு

    திருவல்லிக்கேணி அருள்மிகு எல்லை அம்மன் திருக்கோவிலில், ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அடுக்கி சுவாசினி பூஜை நடைபெறுகிறது. இப்பூஜை, சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த அம்மனுக்கு ஸ்ரீசக்ர மாலை உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்த அம்மனுக்கு சர்க்கரைக் காப்பு செய்து வழிபட குணம் பெறலாம் என்கிறார்கள். சர்க்கரையுடன் நெய் சேர்த்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து, முந்திரிப் பழங்களால் அலங்காரம் செய்வது வழக்கம்.

    எள் எண்ணை ஏற்றுங்கள்

    ஆடி மாதம் காற்று அதிகமாக வீசும். இது தொற்று நோய்களை பரவச் செய்து விடும். இதை தடுக்கும் ஆற்றல் எள் எண்ணை தீபத்துக்கு உண்டு. எள் எண்ணையில் இரும்புச்சத்து உள்ளது. எள் எண்ணை ஊற்றி தீபம் ஏற்றும் போது, அது சூடாகி பிராண சக்தியை அதிகப்படுத்தும். இந்த பிராண சக்தி தொற்று நோய் எதிர்ப்பு சக்தியை நமக்குத்தரும். எனவே ஆடி மாதம் அடிக்கடி எள் தீபம் ஏற்றுங்கள்.

    • ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு குருவின் வழிகாட்டுதல் அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
    • ‘உயிர் நோக்கம்’ என்ற எளிய ஆன்மீக பயிற்சி தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த குரு பெளர்ணமி தினமான இன்று ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "சத்குரு, உங்கள் இதய துடிப்பாக இருக்க முடியும், உங்கள் உயிர் மூச்சாக இருக்க முடியும் அல்லது உங்கள் முக்திக்கு நோக்கமாகவும் இருக்க முடியும். உங்கள் விருப்பம், நீங்கள் என்னை எப்படி வேண்டுமென்றாலும் எடுத்து கொள்ளலாம். ஆனால், நான் எப்போதுமே உங்களுக்காக தான் இருக்கிறேன்" என கூறியுள்ளார்.

    நம் பாரத கலாச்சாரத்தில் ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு குருவின் தேவையும், அவரின் வழிகாட்டுதலும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சத்குரு அவர்கள் சம காலத்தில் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ஆன்மீக சாதகர்களுக்கு குருவாக விளங்குகிறார்.

    குரு பெளர்ணமியை முன்னிட்டு சத்குருவின் அன்பளிப்பாக, 'உயிர் நோக்கம்' என்ற எளிய ஆன்மீக பயிற்சி தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஆன்லைன் வாயிலாக ஜூலை 7 முதல் ஜூலை 9 வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த யோகா வகுப்பில் பஞ்ச பூதங்களின் உதவியுடன் ஒருவர் தனது உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் கற்றுக் கொடுக்கப்படும்.

    இவ்வகுப்பில் பங்கேற்க Isha.co/unosm என்ற இணையதள முகவரியில் ஜூலை 4-ம் தேதி நள்ளிரவுக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • குரு பூர்ணிமா என்பது வேத வியாசரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகும்.
    • வேதத்தைத் தொகுத்து நான்காகப் பிரித்து நமக்கெல்லாம் எளிமையாக வழங்கி, சனாதனதர்மத்தை வேரூன்றச் செய்த வேத வியாசர் நமக்கெல்லாம் ஆதி குருவாக விளங்குகிறார்.

    ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. பவுர்ணமியில் எந்த மாதம் கிரிவலம் வருகிறோமோ அதற்கு ஏற்ப பலன் கிடைப்பதாக சொல்வார்கள். குறிப்பாக பவுர்ணமி தினத்தில் பித்ருக்கள் வழிபாடு, சித்தர்கள் வழிபாடு செய்வதற்கு மிகவும் ஏற்றது என்பார்கள். ஒவ்வொரு மாதத்திற்கும் ஏற்ப பவுர்ணமி வழிபாடுகளில் மாறுபாடு உள்ளது.

    அந்த வகையில் தற்போதைய ஆனி மாத பவுர்ணமி குரு பவுர்ணமி என்றும், வியாசர் பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பவுர்ணமியில் குருவை வழிபட வேண்டும் என்பது முக்கியமான நோக்கமாகும்.

    ஆதிகாலத்தில் ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் தங்களது முதன்மையான குருவான வியாசரை வணங்கி பூஜை செய்வார்கள். எனவேதான் ஆனி மாத பவுர்ணமியை வியாசர் பூர்ணிமா என்றும் அழைக்கிறார்கள்.

    தமிழர்கள் கலாச்சாரத்தில் குரு அல்லது ஆசிரியர் கடவுளுக்கு நிகராக கருதப்படுகிறார். அந்த அடிப்படையிலும், ஆனி மாத பவுர்ணமி தினத்தை குரு பவுர்ணமி தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு குரு பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45 மணிக்கு சதுர்த்தசி திதி முடிந்ததும் தொடங்குகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5.49 மணி வரை பவுர்ணமி இருக்கிறது.

    எனவே இந்த ஆண்டுக்கான குரு பவுர்ணமி வழிபாடுகள் நாளை இரவே தொடங்கி விடுகிறது.

    குரு பூர்ணிமா என்பது வேத வியாசரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகும். வியாசர் பண்டைய இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் குருக்களில் ஒருவராக அறியப்படுகிறார். வேத வியாசர் நான்கு வேதங்களை இயற்றினார், மகா பாரத இதிகாசத்தை இயற்றினார், பல புராணங்கள் மற்றும் இந்து புனிதக் கதைகளின் பரந்த கலைக்களஞ்சியங்களுக்கு அடித்தளம் அமைத்தார் என்பதையும் நவீன ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.

    குரு பூர்ணிமா என்பது, சிவபெருமான், ஆதி குரு அல்லது அசல் குரு வடிவில், வேதங்களின் ஞானிகளான ஏழு முனிவர்களுக்கு கற்பித்த தேதியைக் குறிக்கிறது. யோகா சூத்திரங்களில், பிரணவ அல்லது ஓம் வடிவில் உள்ள கடவுள் யோகாவின் ஆதி குரு என்று அழைக்கப்படுகிறார். புத்தர் சாரநாத்தில் தனது முதல் பிரசங்கத்தை இந்த நாளில் வழங்கியதாக நம்பப்படுகிறது. இது இந்த புனித நாளின் சக்தியைக் காட்டுகிறது

    குரு பூர்ணிமாவுடன் தொடர்புடைய விஷ்ணு வழிபாட்டின் முக்கியத்துவம் உள்ளது. இந்த நாளில், விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் என்று அழைக்கப்படும் விஷ்ணு சத்ரநாமத்தை உச்சரிக்க வேண்டும். இந்த நல்ல நாளில், உங்களுடன் இணக்கமாக இருங்கள் மற்றும் உங்கள் ஆற்றலைச் செலுத்துங்கள்.

    அமைதியும் செழிப்பும் உங்களுக்கு தொலைதூரக் கனவாகத் தோன்றினால், தனிப்பயனாக்கப்பட்ட நேரடி விஷ்ணு பூஜையை முழு-ஆதார தீர்வாக பதிவு செய்யவும்.

    இந்த நாளில், அதிகாலையில் எழுந்து, குளித்தல், பூஜை போன்ற உங்கள் அன்றாட வழக்கமான கடமைகளை மேற்கொள்ளுங்கள்; மேலும், நீங்கள் சரியான ஆடை அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    அதன் பிறகு, வியாசர் திருவுருவப் படத்திற்கு மலர்கள் மற்றும் நறுமண மாலையை வைத்து, பின்னர் உங்கள் சொந்த குருவிடம் ஆசீர்வாதம் பெறுங்கள்.

    உங்கள் குருவை ஒரு நாற்காலியில் அல்லது வேறு எங்காவது உட்கார வைத்து, பின்னர் அவருக்கு ஒரு மாலையை வழங்குங்கள்.

    அதன்பிறகு, உங்கள் குருவுக்கு வஸ்திரம், பழங்கள், மலர்கள், மாலைகள், தட்சிணை போன்றவற்றைப் பணமாக அளித்து, அவர்களின் ஆசிகளைப் பெறுங்கள்.

    உங்கள் ஜாதகத்தில் வலுவான வியாழன் இருந்தால் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று வேத ஜோதிடம் வெளிப்படுத்துகிறது. இது உங்கள் ஜாதகத்தில் உள்ள நல்ல பலன்களான குரு அல்லது கடவுள் வியாழனை வலுப்படுத்த உதவும். உங்கள் ஜாதகத்தில் வியாழன் வலுவிழந்த ராசியான 9-ல் (அதாவது மகரம் ) இருந்தால், நீங்கள் தவறாமல் குரு யந்திரத்தை வழிபட வேண்டும்.

    உங்கள் ஜாதகத்தில் வியாழன்-ராகு, வியாழன்-கேது அல்லது வியாழன்-சனியின் சேர்க்கை இருந்தாலும் குரு யந்திரத்தை வழிபடுவது உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் ஜாதகத்தில் வியாழன் பலவீனமான வீட்டில் அதாவது 6, 8 அல்லது பன்னிரண்டாம் வீட்டில் இருந்தால், நீங்கள் ஆற்றல் மிக்க குரு யந்திரத்தை வணங்க வேண்டும் .

    தனியாக ஒரு மனிதன் சிந்தித்து, பரம்பொருளை உணர்ந்து, ஞானம் அடைவது கடினம். அதற்கு குருவின் துணை இன்றியமையாதது.

    குரு என்பவர் யார்?. "கு' என்றால் "இருள்'. "ரு' என்றால் "போக்குபவர்'. அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி ஞானமாகிய ஒளியைத் தருபவரே குரு ஆவார். தன் சீடர்களுக்கு ஆன்மிக முன்னேற்றம் ஏற்பட, யார் அவர்களுக்கு சாதனையைக் கற்றுத் தந்து, ஆன்மிக அனுபவங்களை அருள்கின்றாரோ அவரே குரு எனப்படுகிறார்.

    தன்னை நம்பி வருகின்றவர்கள் நல்ல வழியில் செல்ல வேண்டும் என்று எந்தவொரு குருவும் நினைப்பார். அவர்களிடமிருந்து எவ்விதப் பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் நல்வழிப்படுத்தி இறையின்பத்தை அனுபவிக்கச் செய்கின்ற பெருந்தன்மையை குருவைத் தவிர வேறு யாரிடமும் காணமுடியாது.

    குருவே தெய்வம். குருவே பிரம்மா. குருவே விஷ்ணு. குருவே மகேஸ்வரன். குருவே தேவர்கள். குருவே சாட்சாத் பரப் பிரம்மம். இத்தகைய பெருமை வாய்ந்த குருவைப் போற்றும் திருநாளான "குரு பூர்ணிமா' இவ்வருடம் நாளை (ஞாயிறு) இரவு தொடங்குகிறது.

    வேதத்தைத் தொகுத்து நான்காகப் பிரித்து நமக்கெல்லாம் எளிமையாக வழங்கி, சனாதனதர்மத்தை வேரூன்றச் செய்த வேத வியாசர் நமக்கெல்லாம் ஆதி குருவாக விளங்குகிறார்.

    அவர் வடக்கில் "நைமி சாரண்யம்' என்ற இடத்தில் அமர்ந்து வேதங்களைத் தொகுத்து புராணங்களை இயற்றியதாகக் கூறப்படுகிறது. அவரைப் போற்றும் வகையில் இந்த பவுர்ணமி "வியாச பவுர்ணமி' என்றும் அழைக்கப்படுகிறது.

    தென்னகத்தில், சென்னை மாகாணத்தில் மகரிஷி வியாசரும், அவரது சீடர்களும் வாழ்ந்த ஒரு பகுதி "வியாசர் பாடி' என்றழைக்கப்படு கிறது.

    இவ்வூரில் அமைந்துள்ள ஸ்ரீமரகதாம்பாள் சமேத ரவீஸ்வரர் திருக்கோயிலில் சிவன் சந்நிதிக்குப் பின்புறம் வியாசருக்குத் தனி சந்நிதி அமைந்துள்ளது. இங்கு, வியாசர் புலித்தோல் மீது பத்மாசனத்தில் அமர்ந்து அருள் புரிகிறார். கல்வி, கேள்விகளில் தங்கள் குழந்தைகள் சிறந்து விளங்க இவரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

    வியாச பவுர்ணமியன்று நாமும் வியாசரைத் துதித்து அவர் அருள் பெறுவதோடு நமக்கு குருவாய் அமைந்த அனைவரையும், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை மனதில் தியா னித்து வேண்டிக் கொண்டால் அவர்கள் அருளால் நம் வாழ்வு சிறக்கும்.

    • ஆனி மாத பவுர்ணமியை குரு பூர்ணிமா என வட இந்தியர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
    • மயிலாடுதுறை-விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில்கள், திருவண்ணாமலைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    ஆனி மாத பவுர்ணமியானது நாளை (ஜூலை 2-ம் தேதி) இரவு 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் (3-ம் தேதி) இரவு 5.49 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    திருவண்ணாமலையில் இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆனி மாத பவுர்ணமியை குரு பூர்ணிமா என வட இந்தியர்கள் கடைபிடித்து வருகின்றனர். இவர்களை போன்று ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வழிபடுகின்றனர். ஆனி மாத பவுர்ணமி என்பது வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்குவதால், தமிழக பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் கணித்துள்ளனர்.

    இதையொட்டி, அருணாசலேஸ்வரர் மற்றும் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    பவுர்ணமி கிரிவலத்தை ஒட்டி தெற்கு ரெயில்வே துறை சார்பில் சென்னை கடற்கரை-வேலூர் மெமு ரெயில், தாம்பரம்-விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை-விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில்கள், திருவண்ணாமலைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • நம்மை ஊக்கப்படுத்தி, வழிகாட்டி, வாழ்க்கையை பற்றி நமக்கு பலவற்றை கற்று தந்த அனைத்து முன்மாதிரியான குருக்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் நாள்.
    • நமது குருக்களின் ஆசிகள் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லட்டும்.

    புதுடெல்லி:

    குரு பூர்ணிமா விழாவையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:-

    நம்மை ஊக்கப்படுத்தி, வழிகாட்டி, வாழ்க்கையை பற்றி நமக்கு பலவற்றை கற்று தந்த அனைத்து முன்மாதிரியான குருக்களுக்கும் இது நன்றியை தெரிவிக்கும் நாள். நமது சமூகம் கற்றலுக்கும் ஞானத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. நமது குருக்களின் ஆசிகள் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லட்டும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும்போது புனிதமான ஆஷாதா பூர்ணிமா நல்வாழ்த்துக்கள். புத்த பெருமானின் உன்னதமான போதனைகளை நினைவு கூர்வதோடு நீதியும் கருணையும் கொண்ட சமுதாயம் பற்றிய அவரது அறிவொளி பார்வையை நனவாக்க நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம் என்றார்.

    • குரு பூர்ணிமா மலர் அபிஷேகம் 13-ந்தேதி நடக்கிறது
    • பொற்றையடியில் அமைந்துள்ளது ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆனந்த ஆலயம்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கன்னியாகுமரி மெயின் ரோட்டில் பொற்றையடியில் அமைந்துள்ளது ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆனந்த ஆலயம். இந்த ஆலயத்தில் 13-ந்தேதி (புதன்கிழமை) குரு பூர்ணிமா மலர் அபிஷேகம் நடைபெறுகிறது.

    காலை 6 மணிக்கு யாக நிகழ்ச்சியும், காலை 9 மணி முதல் 11 மணி வரை பாபாவிற்கு 9 விதமான அபிஷேகமும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஆனந்த சாய் பஜன்ஸ், திரைப்பட பின்னணி பாடகர் ராகுல், திரைப்பட பின்னணி பாடகி சாயி பிரேமி சவீதா சாய் ஆகியோரின் சாய்பாபாவின் பக்தி பரவச மூட்டும் கான மழை நடைபெறுகிறது.

    காலை 11 மணி முதல் 1 மணி வரை மாபெரும் மலர் அபிஷேக மும் மதியம் 1 மணிக்கு ஆரத்தி நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. மாலை 5 மணி முதல் சிங்காரி மேள தாளத்துடன் சிறுவர், சிறுமியர் கோலாட்டமும், முத்துகுடை அலங்காரத்து டன் மலர் அலங்கார பல்லாக்கு ஊர்வலமும் நடைபெறுகிறது. காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையும், இரவு 7 மணி முதல் அன்ன தானம் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீஷீரடி சாயி சேவா சங்கத் தினர், ஸ்ரீஷீரடி சாயி சேரிட்டபிள் டிரஸ்ட் நிர்வா கத்தினர் மற்றும் பணியா ளர்கள் செய்து வருகின்ற னர்.

    ×