search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஜராத் முதல் மந்திரி"

    குஜராத்தில் வெளிமாநிலத்தவர்கள் மீதுநடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு வந்த குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானிக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம் நடைபெற்றது. #Congressworkers #blackballoons
    லக்னோ:

    குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரசிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.

    அம்மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

    குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள 6 மாட்டங்களில் இந்தி பேசும் வெளிமாநில கூலி தொழிலாளிகள் மீது அதிகமான தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது.

    இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் கடந்த ஒருவார காலத்தில் சுமார் 20 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும், தொடர்ந்து வெளியேறி வருவதாகவும் பிரபல ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டன.

    இந்நிலையில், வரும் 31-ம் தேதி குஜராத் மாநிலத்தில் நர்மதா ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை  விழாவில் பங்கேற்க வருமாறு உ.பி.முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்துக்கு அழைப்பு விடுப்பதற்காக குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி நேற்று லக்னோ நகருக்கு வந்தார்.

    லக்னோ விமான நிலையம் பகுதியில் நேற்றிரவு திரண்ட காங்கிரசார் கருப்பு பலூன்களை பறக்க விட்டு விஜய் ருபானிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். விஜய் ருபானியே திரும்பிப்போ என்னும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

    மேலும், இன்று முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் வீட்டுக்கு விஜய் ருபானி வந்தபோதும் இதேபோல் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களில் சிலரை போலீசார் கைது செய்து ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    இதற்கிடையில், லக்னோ நகரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய விஜய் ருபானி, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், பிரதமர் மோடி ஆகியோர் பிறந்த குஜராத் மாநிலம் ஒரு குட்டி இந்தியாவாகும். இந்தியா எல்லோருக்குமே பொதுவானது. 

    குஜராத்தின் வளர்ச்சிக்காக உ.பி., பீகார், மகாராஷ்டிரம், ஒடிசா உள்ளிட்ட மாநில மக்கள் அதிகமாக உழைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார். குஜராத்தில் அனைத்து மாநில மக்களுக்கான பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். #Congressworkers #blackballoons #GujaratCM #VijayRupani
    குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி ஆறுநாள் அரசுமுறை பயணமாக இன்று இஸ்ரேல் நாட்டுக்கு செல்கிறார். #GujaratCM #VijayRupani
    அகமதாபாத்:

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்திருந்தபோது குஜராத் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அப்போது தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானியை அவர் கேட்டு கொண்டார்.

    இதையடுத்து, ஆறுநாள் அரசுமுறை பயணமாக விஜய் ருபானி இன்று இஸ்ரேல் நாட்டுக்கு செல்கிறார். அவருடன் குஜராத் மாநில மந்திரிகள், உயரதிகாரிகள், பிரபல தொழிலதிபர்கள் கொண்ட குழுவினரும் மும்பையில் உள்ள இஸ்ரேல் துணை தூதரும் செல்கின்றனர்.

    நவீன முறையிலான வேளாண்மை தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் இஸ்ரேலில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது? என்பதை இந்த குழுவினர் பார்வையிட உள்ளனர்.

    கடந்த 1980-ம் ஆண்டில் இருந்து இஸ்ரேல் நாட்டில் வாழ்ந்துவரும் பெரும்பாலான குஜராத்தியர்கள் அங்கு வைர வியாபாரம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் மந்திரி மற்றும் உடன் செல்பவர்கள் அங்குள்ள இந்தியர்களை சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மற்றும் வேளாண்மைத்துறை மந்திரி உரி ஏரியல் ஆகியோரை சந்திக்கும் விஜய் ருபானி முன்னிலையில் இருநாடுகள் இடையில் சில முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் யூதர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டதை விவரிக்கும் ஜெருசலேம் அருங்காட்சியகத்தை பார்வையிடும் விஜய் ருபானி, இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் கல்லறைகளில் மரியாதை செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #VijayRupanivisitsIsrael #VijayRupani
    ×