search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்"

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி பதவிகளுக்கு 4 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணிப்படுகின்றன. #kashmirMunicipalelection
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர்.

    இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப்பதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் அறிவித்தார். இதனால், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் இந்த நகராட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.

    மொத்தம் 79 நகராட்சிகளுக்கு நடைபெற வேண்டிய தேர்தல் போட்டியிட யாரும் முன்வராததாலும், ஒருவர் மட்டுமே போட்டியிட்டதாலும் 27 இடங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. 52 இடங்களில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது. 

    தேர்தல் நடைபெற்ற நகராட்சி பகுதிகளில் மொத்தமுள்ள 598 வார்டு உறுப்பினர் பதவிகளில் 231 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 181 வார்டுகளில் யாருமே போட்டியிடவில்லை. இந்த 4 கட்ட தேர்தலிலும் சராசரியாக  மொத்தம் 35.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகின.

    இந்நிலையில், வாக்குகள் எண்ணும் பணி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. நாளை வெளியாகும் முடிவுகள் சுமார் 3 ஆயிரம் வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கவுள்ள நிலையில்  அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  #kashmirMunicipalelection
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நகராட்சிகளுக்கு நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட தேர்தலில் இன்று பிற்பகல் நிலவரப்படி பாரமுல்லா மாவட்டத்தில் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. #Voterturnout #BaramullaVoterturnout
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, இரண்டுகட்ட தேர்தல் முடிந்துள்ளது.
     
    பாரமுல்லா, சம்பா, அனந்த்நாக், ஸ்ரீநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 207 வார்டுகளில் 49 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


    62 வார்டுகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மீதமுள்ள 96 வார்டுகளில் இன்று காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் இன்று நண்பகல் 12 மணிவரை பதிவான வாக்கு சதவீதம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    பாரமுல்லா மாவட்டத்தில் 59.6 சதவீதம், சம்பா மாவட்டத்தில் 59.1% சதவீதம், அனந்த்நாக் மாவட்டத்தில் 2.5% சதவீதம், ஸ்ரீநகரில் 1.2% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. #Voterturnout #BaramullaVoterturnout
    ஜம்மு காஷ்மீரில் 2-ம் கட்டமாக 263 நகராட்சி வார்டுகளுக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் 31.3 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. #JammuAndKashmir #JKElection #LocalBodyPolls
    ஸ்ரீநகர் :

    காஷ்மீரில் 4 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்ட தேர்தல் ஏற்கனவே நடந்த நிலையில் இன்று 2–ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியங்களில் மொத்தம் 263 நகராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது.

    பிரதான கட்சிகளான தேசிய மாநாடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்ததால் வாக்காளர்களிடம் ஆர்வம் காணப்படவில்லை. மேலும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலாலும் பலர் வாக்களிக்க வரவில்லை. இதனால் பல வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    இதனால் பெரும்பாலான வார்டுகளில் குறைவான வாக்குகளே பதிவானது. குறிப்பாக காஷ்மீர் பகுதியில் உள்ள 2.20 லட்சம் வாக்காளர்களில் வெறும் 3.4 சதவீதத்தினரே தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். எனினும் ஜம்முவில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் 31.3 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    இந்த தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்தது. ராம்பான் மாவட்டத்தில் போட்டியிட்ட ஆசாத் சிங் ராஜு (வயது 62) என்ற பா.ஜனதா வேட்பாளர், ஓட்டுப்போடுவதற்காக வந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்தார்.

    மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மாவட்ட பா.ஜனதாவினர் அதிர்ச்சியடைந்தனர்.  #JammuAndKashmir #JKElection #LocalBodyPolls
    ஜம்மு-காஷ்மீரில் நாளை நகராட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் பிரிவினவாத இயக்கத் தலைவர் மிர்வாயிஸ் உமர் பாரூக் இன்று வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நகராட்சி தேர்தல்களும், பஞ்சாயத்து தேர்தல்களும் நடத்த தேர்தல் கமிஷன் தீர்மானித்தது.

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா அறிவித்தார்.

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறவுள்ளது.
    நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

    இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான ஜம்மு - காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசீன் மாலிக் ஸ்ரீநகரின் அபி குஸார் பகுதியில் உள்ள அலுவலகத்தில் கடந்த இரண்டாம் தேதி கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (8-ம் தேதி) தொடங்குவதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மிதவாத ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவரான மிர்வாயிஸ் உமர் பாரூக் இன்று போலீசாரால் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்.

    இதேபோல், ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானியும் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #J&KULBpolls #Mirwaizunderhousearrest
    ஜம்மு-காஷ்மீர் மாநில உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அம்மாநில பாரதிய ஜனதா கட்சி 380 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. #Kashmirlocalbodypolls #BJP
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா கடந்த ஞாயிறு அன்று அறிவித்தார்.

    இதற்கிடையே, காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாதிகள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

    இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. 380 பேர் அடங்கிய இந்த பட்டியலில் 120 பெண் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த உள்ளாட்சித் தேர்தலில் 17 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிட முதலில் காங்கிரஸ் தயங்கியது. தற்போது போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    அம்மாநில பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. #Kashmirlocalbodypolls 
    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அம்மாநில தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். #Kashmirlocalbodypolls #KashmirMunicipalElections
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. 

    இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் ஐந்தாம் தேதிவரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8-ம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாதிகள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

    இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

    மேற்கண்ட நாட்களில் காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். 4 கட்ட வாக்குப்பதிவும் முடிந்த பின்னர் அக்டோபர் 20-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா இன்றிரவு தெரிவித்துள்ளார். #Kashmirlocalbodypolls #KashmirMunicipalElections
    தேசிய மாநாட்டு கட்சியை தொடர்ந்து காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி இன்று அறிவித்துள்ளார். #PDPboycott #Kashmirlocalbodypolls #MehboobaMufti
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் ஐந்தாம் தேதிவரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் எட்டாம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடைபெறவுள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாதிகள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

    இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார்.

    இந்நிலையில், காஷ்மீரில் உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இன்று அறிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக, அக்கட்சியின் சார்பில் இயற்றப்பட்ட தீர்மானத்தை அவர் ஊடகங்களுக்கு செய்திக்குறிப்பாக அனுப்பி உள்ளார்.

    ‘சட்டப்பிரிவு 35-ஏ தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் சூழலில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படுவதை பெருவாரியான மக்கள் விரும்பவில்லை என்பதால் இந்த வேளையில் நடத்தப்படும் தேர்தல்கள் ஜனநாயக அமைப்புகளின் நம்பகத்தன்மையை சீர்குலைத்து விடும்.

    இத்தகையதொரு சந்தர்ப்பத்தில் தேர்தல் நடத்துவதை அரசு மறுபரிசீலனை செய்வதுடன் மக்களின் நம்பிக்கையை பெறத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எங்கள் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

    எனவே, இந்த தேர்தல்களை புறக்கணிப்பதாக எங்கள் கட்சியின் சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது’ என மெகபூபா முப்தி அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PDPboycott #Kashmirlocalbodypolls #MehboobaMufti

    ×