search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JK Election"

    ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. #JammuAndKashmir #JKElection #LocalBodyPolls
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, 2 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.

    இந்நிலையில், இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 207 வார்டுகளுக்கு இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 49 வார்டுகளில் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 62 வார்டுகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மீதமுள்ள 96 வார்டுகளில் இன்று காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும்.

    தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் பார்வையாளர்கள், நோடல் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முதல் இரண்டு கட்ட தேர்தலில் வாக்கு சதவீதம் மிக குறைவாக இருந்த நிலையில், இன்று வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    முக்கிய கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் இந்த தேர்தலை புறக்கணித்திருப்பதால், அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே தேசிய மாநாட்டுக் கட்சியின் இரண்டு தொண்டர்கள் நேற்று பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். மேலும், ஓட்டு போட யாரும் போகக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. #JammuAndKashmir #JKElection #LocalBodyPolls

    ஜம்மு காஷ்மீரில் 2-ம் கட்டமாக 263 நகராட்சி வார்டுகளுக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் 31.3 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. #JammuAndKashmir #JKElection #LocalBodyPolls
    ஸ்ரீநகர் :

    காஷ்மீரில் 4 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்ட தேர்தல் ஏற்கனவே நடந்த நிலையில் இன்று 2–ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியங்களில் மொத்தம் 263 நகராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது.

    பிரதான கட்சிகளான தேசிய மாநாடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்ததால் வாக்காளர்களிடம் ஆர்வம் காணப்படவில்லை. மேலும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலாலும் பலர் வாக்களிக்க வரவில்லை. இதனால் பல வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    இதனால் பெரும்பாலான வார்டுகளில் குறைவான வாக்குகளே பதிவானது. குறிப்பாக காஷ்மீர் பகுதியில் உள்ள 2.20 லட்சம் வாக்காளர்களில் வெறும் 3.4 சதவீதத்தினரே தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். எனினும் ஜம்முவில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் 31.3 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    இந்த தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்தது. ராம்பான் மாவட்டத்தில் போட்டியிட்ட ஆசாத் சிங் ராஜு (வயது 62) என்ற பா.ஜனதா வேட்பாளர், ஓட்டுப்போடுவதற்காக வந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்தார்.

    மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மாவட்ட பா.ஜனதாவினர் அதிர்ச்சியடைந்தனர்.  #JammuAndKashmir #JKElection #LocalBodyPolls
    ×