search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் கண்ணாடி"

    • 4 பேர் மீது வழக்குப்பதிவு
    • சி.சி.டி.வி. வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

    நாகர்கோவில் :

    தென்தாமரைகுளம் அருகே கோவில் விளையை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மனைவி சஜிதா (வயது 32). இவர்கள் சம்ப வத்தன்று வீட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் அந்த வழியாக சென்றனர். அவர்க ளை பார்த்து ராஜலிங்கத்தின் வீட்டில் உள்ள நாய் குறைத்த தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் ராஜலிங்கம் மற்றும் அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டனர். இருவரையும் அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கணவன்- மனைவி இருவரும் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் உள்ள கேட்டை பூட்டி விட்டு வீட்டிற்குள் சென்றனர். அதன் பிறகு அந்த வாலிபர்கள் வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து சென்று அவதூறாக பேசியதுடன் வீட்டின் முன்பு நின்ற காரின் கண்ணாடியையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

    மேலும் வீட்டிலிருந்த வெளியே இருந்த பொருட்களையும் சூறையாடினர். பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசில் சுஜிதா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை யும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் வீட்டை சூறையாடுவது போன்ற காட்சிகளும் ராஜலிங்கம் மற்றும் அவரது மனைவியிடம் அந்த கும்பல் தகராறில் ஈடுபடுவது போன்ற காட்சி களும் இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் போலீ சார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொட ர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது அந்த வாலிபர்கள் மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நட வடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    தற்பொழுது ராஜலிங்கம் மற்றும் அவரது மனைவி சஜிதாவிடம் தகராறில் ஈடுபட்ட சி.சி.டி.வி. வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீட்டில் இருந்த நாய் குரைத்ததற்காக வீட்டை சூறையாடியதுடன் கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் தென்தாமரைகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடப்பட்டது.
    • இதுகுறித்த புகாரின்பேரில் புதூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    கப்பலூர் அருகே உள்ள உச்சப்பட்டியை சேர்ந்தவர் சரவணகுமார்(வயது28). இவர் சம்பவத்தன்று தனது காரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையம் அருகே நிறுத்திவிட்டு சென்றார். மர்மநபர் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், ஐபேட், ஸ்மா ர்ட் வாட்ஸ், ஹெட்போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பி னான். இதுகுறித்த புகாரின்பேரில் புதூர் போலீ சார் வழக்குப்ப திவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றனர்.
    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    ஈத்தாமொழி பகுதி யைச் சேர்ந்தவர் சிவகுமார் டாக்டர். இவர் ஈத்தாமொழி மற்றும் நாகர்கோவில் பகுதியில் ஆஸ்பத்திரி வைத்துள்ளார்.

    நேற்று மாலை டாக்டர் சிவக்குமார் அவரது மருத் துவமனை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஆகிய இருவரும் நாகர்கோவிலுக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றனர்.

    பின்னர் அவர்கள் வந்தபோது காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. காரில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பேக் மற்றும் அதிலிருந்து ரூ.85 ஆயிரம் ரொக் கப்பணம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவை திருடப்பட்டிருந்தது.

    மேலும் மருத்துவ ஆவ ணங்கள் சிலவற்றையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்றிருந்தனர். இது குறித்து அரவிந்த், நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், மணிகண்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் நகர பகுதியில் இதேபோல் கார்களின் கண்ணாடியை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற னர். அதே கும்பல் தற்பொ ழுது மீண்டும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார் கள்.

    அவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். டாக்டர் காரின் கண்ணாடி உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மது அருந்துவதற்கு பணம் கேட்டதாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு
    • படுகாயமடைந்தவர்களுக்கு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் சரல்விளையை சேர்ந்தவர் அருமைநாயகம்.இவரது மகன் சேகர் (வயது 37). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.விடுமுறையில் கடந்த மாதம் ஊருக்கு வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் சேகர் மற்றும் அவரது உறவினர் அஜயன் (32) ஆகியோர் பைக்கில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினர். வீட்டுக்கு செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த இன்பராஜ் (34), அஜித்ராம் (34), பிரதீப் (32), ஸ்டாலின் (31) ஆகியோர் காரை நிறுத்தியிருந்தனர்.இதை பார்த்த சேகர், காரை வழிவிட்டு நிறுத்துமாறு கூறினார்.

    அப்போது 4 பேரும் மது அருந்துவதற்கு சேகரிடம் பணம் கேட்டதாக கூறப்ப டுகிறது. இதற்கு சேகர் மறுத்தார். இது சம்பந்தமாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆனது.பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.கலைந்து சென்ற 4 பேரும் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து சேகரின் வீட்டு காம்பவுண்டுக்குள் புகுந்து கார் கண்ணாடி மற்றும் சி.சி.டி. கேமராக்களை அடித்து உடைத்தனர். இதை தடுத்த சேகர் மற்றும் உறவினர் அஜயன் ஆகியோரை அவர்கள் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனர்.

    படுகாயமடைந்த இருவரும் குளச்சல் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறிப்பாக குளச்சல் போலீசார் மேற்கூறிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×