search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலக்கோட்டையில் ஏ.டி.எம். மையம் முன்பு கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை
    X

    நிலக்கோட்டையில் ஏ.டி.எம். மையம் முன்பு கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை

    நிலக்கோட்டையில் ஏ.டி.எம். மையம் முன்பு கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பஸ் நிலையம் எதிரே பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியின் முன்பு ஏ.டி.எம். மையம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி, வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

    எப்போதுமே பரபரப்பாக காணப்படும் இந்த இடத்தில் மர்ம நபர்கள் சிலர் ஏ.டி.எம். கார்டை பெற்று பணம் எடுத்து தருவதாக கொள்ளையடித்து செல்வது கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

    அழகாபுரியை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் ரூ.50 ஆயிரத்தை தாலுகா அலுவலகத்தில் வைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர். முன்னாள் ராணுவ வீரர் உள்பட பலரிடம் இதுபோன்ற கொள்ளை நடந்து உள்ளது. இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டபோதிலும் இதுவரை யாரும் கைது செய்யப்பட வில்லை.

    கரட்டுப்பட்டி டாஸ்மாக் கடையில் உள்ள விற்பனை மேலாளர் சதீஷ்குமார் கடையில் விற்பனையான ரூ.3 லட்சம் பணத்தை வங்கியில் கட்டுவதற்காக காரில் வந்தார். அந்த பணத்தை கட்டிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காருக்குள் இருந்த ரூ.7 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து சதீஷ்குமார் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    வங்கி மற்றும் ஏ.டி.எம். மையம் முன்பு இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இங்கு சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தி கொள்ளையர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×