என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கள்ளக்காதலி கொலை"
- சுஜின், வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தாரணியை கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்றார்.
- சரண் அடைந்த சுஜின் மீது இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணி வழக்கு பதிவு செய்தார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள நின்னக்கரை ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சுந்தர். எலக்ட்ரீசியனாக உள்ளார்.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மல்ரோஷபுரம் பகுதியை சேர்ந்தவர் சுஜின். இவர் அங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் வேலை செய்து வருகிறார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். பள்ளி பருவத்தில் இருந்தே பழகி வந்ததால் இணை பிரியாத நண்பர்களாக இருந்து வந்தனர்.
சுந்தருக்கு திருமணமாகி தாரணி என்ற மனைவியும் 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. நண்பன் என்ற முறையில் சுந்தரின் வீட்டுக்கு சுஜின் அடிக்கடி சென்று வந்தார். அப்போது அவரது பார்வை, நண்பனின் மனைவியான தாரணி மீது பட்டது. சுந்தர் இல்லாத நேரத்தில் சுஜின் தாரணியை பார்ப்பதற்காக சென்று வந்தார்.
அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. தனிமையில் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இதனை சுந்தர் கண்டித்துள்ளார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் இருவரும் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் சமீப காலமாக தாரணி, சுஜினுடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. சுந்தர் இல்லாத நேரத்தில் சுஜின் தாரணியை சந்தித்து சண்டை போட்டு வந்துள்ளார். என்னிடம் ஏன் சரியாக பேசுவதில்லை என்று கேட்டு தாரணியிடம் தகராறு செய்து வந்த சுஜின் நேற்று பிற்பகலில் கடுமையான கோபத்துடன் சுந்தரின் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த தாரணியிடம், என்னை ஏன் வெறுக்கிறாய் என்று கேட்டு சண்டை போட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுஜின், வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தாரணியை கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்றார்.
அப்போது 1½ வயதே ஆன ஆண் குழந்தை பரிதாபமாக அழுது கொண்டே இருந்தது. இதையடுத்து சுஜின், மறைமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார்.
தாரணியை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி சுஜின் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
தாரணி என்னுடன் பழகுவதை தவிர்த்து விட்டு வேறு ஒருவருடன் நெருங்கி பழகினார். இப்படி 3-வதாக வேறு நபருடன் பழகியது எனக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக தாரணியிடம் நான் கேட்டேன். அப்போது தாரணி தாலி கட்டிய கணவரான சுந்தரே அதுபற்றி கேட்பது இல்லை. நீ என்ன கேட்கிறாய்? என்று கேட்டு என்னை உதாசீதனப்படுத்தினார். இதனால் எனக்கு ஆத்திரம் தலைக்கேறியது. வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து வெட்டிக் கொன்றேன்.
இவ்வாறு சுஜின் வாக்கு மூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சரண் அடைந்த சுஜின் மீது இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணி வழக்கு பதிவு செய்தார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- திருமணம் செய்யாமலேயே 2 பேரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.
- கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் திருமலைகிரி அருகே உள்ள கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). இவரது மனைவி அமுதா (40). இவர்களுக்கு 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவனை பிரிந்த அமுதா கடைசி மகன் பிரகாஷூடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (35) என்பவருடன் அமுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் தங்கராஜ் அடிக்கடி அமுதாவின் வீட்டிற்கு சென்று வந்தார். மேலும் இருவரும் வெளிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தனர்.
அப்போது அவர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து திருமணம் செய்யாமலேயே 2 பேரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.
நேற்று தங்கராஜ் வழக்கம் போல் அமுதாவின் வீட்டிற்கு சென்றார். மகன் பிரகாஷ் தச்சு வேலைக்கு சென்று விட்டதால் இரவில் தங்கராஜூம் அமுதாவும் வீட்டில் ஒன்றாக தங்கி இருந்ததாக தெரிகிறது.
இன்று காலை வேலைக்கு சென்று திரும்பிய பிரகாஷ் வீட்டின் கதவை வெகுநேரமாக தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் கூறினார். இதையடுத்து அங்கு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
பின்னர் பிரகாஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அமுதா உடலில் கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மேலும் அவரது அருகில் தங்கராஜூம் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தார்.
அமுதாவை கத்தியால் குத்தி கொன்று விட்டு தங்கராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் தங்கராஜ் அமுதாவுக்கு அதிக அளவில் பணத்தை செலவு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன வேதனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலில் அமுதாவை கொன்று தங்கராஜ் தற்கொலை செய்தது தெரியவந்தது.
இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சமூகவலைதளங்களில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட கள்ளக்காதலியை வாலிபர் தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பிரேமா மரணத்திற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பாப்பினி வரதப்பம்பாளையம் காலனியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி பிரேமா (வயது 30). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேமா கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வரதப்பம்பாளையம் காலனியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். மேலும் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் பிரேமாவுக்கும் காங்கயம் நத்தக்காடையூர் பாரதியார்நகர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விஜய் (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.
நேற்று பிரேமா வீட்டிற்கு விஜய் சென்றார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து விஜய் அங்கிருந்து சென்ற நிலையில், பிரேமா உடலில் தீப்பற்றிய நிலையில் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்றனர். பின்னர் பிரேமா மீது பற்றிய தீயை அணைத்து, சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பிரேமா இறந்தார். அப்போது அவர் போலீசாரிடம் மரண வாக்குமூலம் அளித்தார். அதில் விஜய், தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பிரேமா மரணத்திற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
பிரேமா கணவரை விட்டு பிரிந்ததும் விஜய்யுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகியதுடன் தனியாக சந்தித்து உல்லாசமும் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் விஜய்க்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையறிந்த பிரேமா அதிர்ச்சியடைந்தார். இது பற்றி அவர் விஜய்யிடம் தட்டிக்கேட்டார். அப்போது விஜய் தனக்கு திருமணம் ஆனாலும் உன்னையும் பார்த்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அதனை பிரேமா ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் விஜய்யை பழிவாங்க நினைத்த அவர், இருவரும் பழகிய போது நெருக்கமாக இருந்த ஆபாச புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இதைப்பார்த்த விஜய் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து நேற்று பிரேமா வீட்டிற்கு சென்ற விஜய், எப்படி புகைப்படங்களை சமூகவலைதளங்களில பதிவிடலாம் என தட்டிக்கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் விஜய், பிரேமா மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டு சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. விஜய் போலீசாரிடம் கூறும்போது, தான் தீ வைக்கவில்லை என்றும், பிரேமாவே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
சமூகவலைதளங்களில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட கள்ளக்காதலியை வாலிபர் தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கள்ளக்காதலியை கொலை செய்து பிணத்துடன் 3 நாள் தொழிலாளி தங்கி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கைதான தொழிலாளியிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஆண்டோ. ரப்பர் எஸ்டேட் தொழிலாளி.
ஆண்டோவிற்கு திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வைத்ரி பகுதியில் வசித்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி பிரிந்துசென்றார்.
அதன்பின்பு ஆண்டோ இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்தார். அவரும் திடீரென பிரிந்து சென்றார். அதன்பின்பு ஆண்டோவுக்கு நீது என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஆண்டோவும், நீதுவும் ஊரை விட்டு வெளியேறி காசர்கோடு பகுதியில் உள்ள ரப்பர் எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்தனர். அங்கு தங்கி இருந்த போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஆண்டோ, நீதுவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். கடந்த மாதம் 27-ந்தேதி இந்த கொலை நடந்தது.
ஆனால் அவர் நீதுவை கொலை செய்ததை வெளியில் கூறவில்லை. பிணத்துடனேயே அந்த வீட்டில் 3 நாட்கள் தங்கி இருந்தார். அதன்பின்பு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதும் அவர் அங்கிருந்து தலைமறைவானார்.
அதன்பின்பு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது நீது இறந்து கிடப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நீதுவின் கள்ளக்காதலன் ஆண்டோவை தேடி வந்தனர். மேலும் ரெயில் நிலையம், பஸ் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஆண்டோ மும்பைக்கு தப்பி செல்ல திருவனந்தபுரம் ரெயில் நிலையம் வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதலியை கொலை செய்து பிணத்துடன் 3 நாள் ஆண்டோ தங்கி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்