search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கள்ளக்காதலியை கொன்று பிணத்துடன் 3 நாள் தங்கி இருந்த தொழிலாளி
    X

    கள்ளக்காதலியை கொன்று பிணத்துடன் 3 நாள் தங்கி இருந்த தொழிலாளி

    • கள்ளக்காதலியை கொலை செய்து பிணத்துடன் 3 நாள் தொழிலாளி தங்கி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கைதான தொழிலாளியிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஆண்டோ. ரப்பர் எஸ்டேட் தொழிலாளி.

    ஆண்டோவிற்கு திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வைத்ரி பகுதியில் வசித்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி பிரிந்துசென்றார்.

    அதன்பின்பு ஆண்டோ இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்தார். அவரும் திடீரென பிரிந்து சென்றார். அதன்பின்பு ஆண்டோவுக்கு நீது என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ஆண்டோவும், நீதுவும் ஊரை விட்டு வெளியேறி காசர்கோடு பகுதியில் உள்ள ரப்பர் எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்தனர். அங்கு தங்கி இருந்த போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஆண்டோ, நீதுவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். கடந்த மாதம் 27-ந்தேதி இந்த கொலை நடந்தது.

    ஆனால் அவர் நீதுவை கொலை செய்ததை வெளியில் கூறவில்லை. பிணத்துடனேயே அந்த வீட்டில் 3 நாட்கள் தங்கி இருந்தார். அதன்பின்பு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதும் அவர் அங்கிருந்து தலைமறைவானார்.

    அதன்பின்பு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது நீது இறந்து கிடப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் நீதுவின் கள்ளக்காதலன் ஆண்டோவை தேடி வந்தனர். மேலும் ரெயில் நிலையம், பஸ் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ஆண்டோ மும்பைக்கு தப்பி செல்ல திருவனந்தபுரம் ரெயில் நிலையம் வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதலியை கொலை செய்து பிணத்துடன் 3 நாள் ஆண்டோ தங்கி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×