search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்காதலி கொலை: 3-வதாக வேறு வாலிபருடன் நெருங்கி பழகியதால் தீர்த்துக்கட்டினேன்- சரண் அடைந்த வாலிபர் வாக்குமூலம்
    X

    கள்ளக்காதலி கொலை: 3-வதாக வேறு வாலிபருடன் நெருங்கி பழகியதால் தீர்த்துக்கட்டினேன்- சரண் அடைந்த வாலிபர் வாக்குமூலம்

    • சுஜின், வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தாரணியை கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்றார்.
    • சரண் அடைந்த சுஜின் மீது இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணி வழக்கு பதிவு செய்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள நின்னக்கரை ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சுந்தர். எலக்ட்ரீசியனாக உள்ளார்.

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மல்ரோஷபுரம் பகுதியை சேர்ந்தவர் சுஜின். இவர் அங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் வேலை செய்து வருகிறார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். பள்ளி பருவத்தில் இருந்தே பழகி வந்ததால் இணை பிரியாத நண்பர்களாக இருந்து வந்தனர்.

    சுந்தருக்கு திருமணமாகி தாரணி என்ற மனைவியும் 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. நண்பன் என்ற முறையில் சுந்தரின் வீட்டுக்கு சுஜின் அடிக்கடி சென்று வந்தார். அப்போது அவரது பார்வை, நண்பனின் மனைவியான தாரணி மீது பட்டது. சுந்தர் இல்லாத நேரத்தில் சுஜின் தாரணியை பார்ப்பதற்காக சென்று வந்தார்.

    அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. தனிமையில் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இதனை சுந்தர் கண்டித்துள்ளார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் இருவரும் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் சமீப காலமாக தாரணி, சுஜினுடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. சுந்தர் இல்லாத நேரத்தில் சுஜின் தாரணியை சந்தித்து சண்டை போட்டு வந்துள்ளார். என்னிடம் ஏன் சரியாக பேசுவதில்லை என்று கேட்டு தாரணியிடம் தகராறு செய்து வந்த சுஜின் நேற்று பிற்பகலில் கடுமையான கோபத்துடன் சுந்தரின் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த தாரணியிடம், என்னை ஏன் வெறுக்கிறாய் என்று கேட்டு சண்டை போட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுஜின், வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தாரணியை கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்றார்.

    அப்போது 1½ வயதே ஆன ஆண் குழந்தை பரிதாபமாக அழுது கொண்டே இருந்தது. இதையடுத்து சுஜின், மறைமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார்.

    தாரணியை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி சுஜின் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    தாரணி என்னுடன் பழகுவதை தவிர்த்து விட்டு வேறு ஒருவருடன் நெருங்கி பழகினார். இப்படி 3-வதாக வேறு நபருடன் பழகியது எனக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக தாரணியிடம் நான் கேட்டேன். அப்போது தாரணி தாலி கட்டிய கணவரான சுந்தரே அதுபற்றி கேட்பது இல்லை. நீ என்ன கேட்கிறாய்? என்று கேட்டு என்னை உதாசீதனப்படுத்தினார். இதனால் எனக்கு ஆத்திரம் தலைக்கேறியது. வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து வெட்டிக் கொன்றேன்.

    இவ்வாறு சுஜின் வாக்கு மூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சரண் அடைந்த சுஜின் மீது இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணி வழக்கு பதிவு செய்தார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×