search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் பங்கேற்பு"

    • பெட்டகம், குழந்தை வளர்ப்பு கையேடு வழங்கினார்
    • அளவான குடும்பத்திற்கு 2 குழந்தைகளே போதுமானது.

    கடலூர்:

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்ட முன்னெடுப்பாகவும் மற்றும் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ் தாய்ப்பால் வார விழாவில் பிறந்த பெண் குழந்தைகளின் தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்டகம், மரக்கன்றுகள் மற்றும் குழந்தை வளர்ப்பு குறித்து கையேட்டினையும் வழங்கினார்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 'பெண் குழந்தைகளை காப்போம்-பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தின் கீழ் ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 1.8.2023 முதல் 7.8.2023 வரை தாய்ப்பால் வார விழாவில் பிறந்த 25 பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் அவர்களின் தாய்மார்களை பாராட்டி குழந்தை நலப் பெட்டகம், மரக்கன்றுகள் மற்றும் பச்சிளம் சிசு வளர்ப்பு குறித்து கையேடுகளையும் கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதம் காலத்திற்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மேலும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் தவறாமல் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அளவான குடும்பத்திற்கு 2 குழந்தைகளே போதுமானது. இதனை தாய்மார்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (மருத்துவ நலப்பணிகள்) டாக்டர் சாரா செலின்பால, மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி , அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் பாஸ்கர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடந்தது.
    • இந்த கூட்டத்தில் துணி நூல் ஆணையர்-கலெக்டர் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறிய ஜவுளி பூங்கா அமைப்பதற்கும், தொழில் நுட்ப ஜவுளி உற்பத்தி தொடர்பான வாய்ப்புகள் குறித்தும் ஜவுளி தொழில் முனை வோர்களிடையே விழிப்பு ணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலை வகித்தார்.

    இதில் துணி நூல் ஆணையர் வள்ளலார் தலைமை தாங்கி பேசியதா வது:-

    விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூருக்கு அருகில் இ.குமாரலிங்காபுரத்தில் 1,200 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைய உள்ளது. தமிழ்நாடு அரசு துணி நூல் துறையின் மூலம் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கையை வளப்படுத்தும் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வரு கிறது. இதற்கான ஆலோச னைகளை தொழில்முனை வோர்கள் வழங்கலாம்.தமிழ்நாட்டை ஜவுளி துறையில் முக்கியமாக தொழில்நுட்ப ஜவுளித்துறையை வளர்ச்சி அடைய செய்திட கடந்த மாதம் சென்னையில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட International Technical Textile - Conference இதற்கு ஒரு உதாரணமாகும்.

    விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு உகந்த இடமாக இருப்ப தற்காகவும், அதிக அளவில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கும், ஜவுளி உற்பத்தியை பெருக்கி, உள்ளூர் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாக வும் உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் துணி நூல் இணை இயக்குநர் சாரதி சுப்புராஜ், மண்டல துணை இயக்குநர் செந்தில்குமார் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி தொழில் முனைவோர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட முன்னோடி வாங்கி மேலாளா் அலெக்ஸ்சாண்டா், புஞ்சைத்தலையூா் ஊராட்சித் தலைவா் சிவராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
    • கிராம ஊராட்சிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் தொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மூலனூர்:

    மூலனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட புஞ்சைத்தலையூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் பாா்வையாளராக கலந்து கொண்டாா். இந்த கூட்டத்தில் அனைத்து கிராம மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கிராம ஊராட்சிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் தொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் 13 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் கடனுதவி, தோட்டக்கலைத் துறை மூலம் வெங்காய பரப்பு விரிவாக்கத்துக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் காசோலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இதில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் மதுமிதா, மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் மதுமிதா, மாவட்ட முன்னோடி வாங்கி மேலாளா் அலெக்ஸ்சாண்டா், புஞ்சைத்தலையூா் ஊராட்சித் தலைவா் சிவராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • மதுரையில் கிராம- நகர சபை கூட்டம் நடந்தது.
    • இதில் கலெக்டர், மேயர் பங்கேற்றனர்.

    மதுரை

    தமிழகத்தில் உள்ளாட்சி தினம் இன்று கடை பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே மாநிலம் முழுவதும் இன்று கிராம சபை மற்றும் நகர சபை கூட்டங்கள் நடந்து வருகின்றன.

    இங்கு குடிநீர் வினி யோகம், குடிநீர் குழாய் இணைப்பு, கட்டிடம் கட்டுவது, விதி மீறிய கட்டி டங்கள், தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எடுத்துக் கூறி நிவாரணம் பெற இயலும். இதில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

    கிராம- நகர சபை கூட்டங்களில் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் மட்டுமின்றி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளலூர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் அனீஸ் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    மாநகர உள்ளாட்சி களிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆரப்பாளையம் மந்தை (வார்டு-57), சுந்தரராஜபுரம் ஜே.ஆர்.ரோடு (வார்டு-75), திடீர் நகர் சமுதாயக்கூடம் (வார்டு-76) ஆகிய பகுதி களில் நடத்தப்பட்ட நகர சபை கூட்டங்களில் மேயர் இந்திராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இங்கு பொதுமக்களின் கோரிக்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.

    தமிழகத்தில் குடியரசு தினம் (ஜனவரி 26-ம் தேதி), உழைப்பாளர் தினம் (மே 1-ம் தேதி), சுதந்திர தினம் (ஆகஸ்டு 15-ம் தேதி), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2-ம் தேதி) ஆகிய நாட்களில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் மனநலம் சார்ந்த கருத்தரங்கம் நடந்தது.
    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார்.

    ராமநாதபுரம்

    சர்வதேச பெண்கள் அமைப்பான ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு உடல் மற்றும் மனநலம் சார்ந்த கருத்தரங்கம் நேஷனல் அகாடமி பள்ளி அரங்கத்தில் சங்கத் தலைவி கவிதா செந்தில்குமார் தலைமையேற்று வரவேற்புரை வழங்கினார்.

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார்.

    திட்ட ஒருங்கிணைப்பாளரான டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசி னார். மாதவிடாய் கால சுகாதாரம் குறித்து டாக்டர் கனகப்பிரியா, மனநலம் குறித்த ஆலோ சனைகளை டாக்டர் ரம்ய பிரியா, ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை குறித்த விழிப்புணர்வை டாக்டர் ராசிகா, பெண் குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பருவ மாற்றங்கள் குறித்து டாக்டர் ஆயிஷதுல் நஸிதா ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆப் ராம்நாட், ரோட்டரி கிளப் ஆப் ராம்நாட் ராயல்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாடு ஆகிய சங்கங்களும் கலந்து கொண்டு தங்களுடைய பங்களிப்பை அளித்தனர்.

    ரோட்டரி சங்க தலைவர் பார்த்திபன், லட்சுமிவர்தினி ஆகியோர் கலந்து கொண்ட னர். மாவட்ட ஐ.எஸ்.ஓ. கீதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சங்க செயலர் ஹரிதா நன்றி கூறினார்.இதில் ராமநாதபுரம் நகரில் உள்ள 12 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 2,100 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • சிவகங்கை மாவட்டம் நாலுகோட்டையில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், நாலுகோட்டை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்து.கலெக்டர் மதுசூதன் ரெட்டி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், கிராமப்புறங்களில் கழிப்பறைகளை முறையாகப் பயன்படுத்தி, சுகாதாரத்தினை பொதுமக்கள் பேணிக்காக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். சிவகங்கை மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில், காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    இதில் திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வானதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணி பாஸ்கரன், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) பழனிக்குமார், இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல், உதவி இயக்குநர் ஊராட்சிகள் குமார், நாலுகோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன் வட்டாட்சியர் தங்கமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×