search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nalukottai"

    • சிவகங்கை மாவட்டம் நாலுகோட்டையில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், நாலுகோட்டை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்து.கலெக்டர் மதுசூதன் ரெட்டி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், கிராமப்புறங்களில் கழிப்பறைகளை முறையாகப் பயன்படுத்தி, சுகாதாரத்தினை பொதுமக்கள் பேணிக்காக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். சிவகங்கை மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில், காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    இதில் திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வானதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணி பாஸ்கரன், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) பழனிக்குமார், இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல், உதவி இயக்குநர் ஊராட்சிகள் குமார், நாலுகோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன் வட்டாட்சியர் தங்கமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×