search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபாடி போட்டி"

    • மாநில அளவி லான யுனைடெட் ஃபார்மா டிராபி போட்டிகள் நடைபெற்றது.
    • கலாம் கல்லூரி மாணவர்கள் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.

    பேராவூரணி:

    கோயம்புத்தூர் யுனைடெட் காலேஜ் ஆப் பார்மசி கல்லூரியில் மாநில அளவி லான யுனைடெட் ஃபார்மா டிராபி போட்டிகள் நடைபெற்றது.

    இதில் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆவணம் டாக்டர் கலாம் காலேஜ் ஆப் பார்மசி கல்லூரி மாணவ, மாண விகள் கலந்து கொண்டு ஆடவர்களுக்கான கபாடி போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து கோப்பையை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.

    இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் சேர்மன் ஜெயசீலன்,நிர்வாக பிரதிநிதி அஜித் டேனியல், பார்மசி மற்றும் பாலி டெக்னிக் கல்லூரியின் முதல்வர்கள் அன்பழகன், மதிவாணன் மற்றும் துணை முதல்வர் பரிமளா தேவி மற்றும் துறை தலைவர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் பிரசாத், பாலமுருகன் குழந்தைவேல், ஆசிகா மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் மற்றும் அலுவலக உதவி யாளர்கள், மாணவ, மாணவிகளும் பாராட்டு களை தெரி வித்தனர்.

    • ராமநாதபுரம் எஸ்.பி.பட்டிணத்தில் மின்னொளி கபாடி போட்டி நடந்தது.
    • 2-ம் பரிசான ரூ. 30 ஆயிரம் சுழற்கோப்பையை சென்னை புதுக்கல்லூரி அணி பெற்றது.

    கீழக்கரை

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டிணத் தில் 12-ம் ஆண்டு ஃபிரண் ட்ஸ் ஸ்டார் அணியினர் நடத்திய மின்னொளியில் கபாடி போட்டி நடைபெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ. 35 ஆயிரமும் சுழற்கோப்பையையும் எஸ்.பி. பட்டிணம் வி.ஆர். எஸ். ஒய் பிரதர்ஸ் அணி பெற்றது.

    இரண்டாம் பரிசான ரூ. 30 ஆயிரம் சுழற்கோப்பையை சென்னை புதுக்கல்லூரி அணி பெற்றது. மூன்றாம் பரிசு ரூ.25 ஆயிரம் சுழற் கோப்பையை சோழகன் பேட்டை அணி பெற்றது.

    நான்காம் பரிசான ரூ.20 ஆயிரம் சுழற்கோப்பையை எஸ்.பி.பட்டிணம் ஸ்பார் டன்ஸ் அணி பெற்றது.

    ஐந்தாம் பரிசு ரூ.15 ஆயிரம் சுழற்கோப்பையை எஸ்.பி.பட்டிணம் லெஜண்ட் அணி பெற்றது.

    வெற்றி பெற்ற அணி வீரர்களை த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக்பாட்சா, மாவட்ட துணை செயலாளர் நிஸார் அஹமது, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாக்கி, தொண்டி இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் ராஜ சேகர், த.மு.மு.க. ஒன்றிய செயலாளர் ஜின்னா இளையோர் அணி புஹாரி தமிம், ம.ம.க. செயலாளர் பரக்கத் அலி ஆகியோர் வாழ்த்தினர்.

    • நண்பர்கள் கபாடி குழு சார்பில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி போட்டி நடை பெற்றது.
    • இதில் பெண்கள் பிரிவில் 30 அணிகளும், ஆண்கள் பிரிவில் 105 அணிகளும் கலந்து கொண்டனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, நண்பர்கள் கபாடி குழு சார்பில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி போட்டி நடை பெற்றது. இதில் பெண்கள் பிரிவில் 30 அணிகளும், ஆண்கள் பிரிவில் 105 அணிகளும் கலந்து கொண்டனர்.

    நாமக்கல், சேலம், ஈரோடு, சென்னை, கரூர், கடலூர், திருச்சி, மதுரை, தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி என தமிழக முழுவதும் இருந்து ஏராள மான அணிகள் கலந்து கொண்ட ன.

    இதில் பெண்கள் பிரிவில் ஈரோடு மாவட்டம் அந்தி யூரைச் சேர்ந்த சக்தி அணி யினர் முதல் பரிசு பெற்ற னர். அதை தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான கபாடி போட்டியில் ஈரோடு மாவட்டம், கோபி செட்டி பாளையம், ஏ.எம்.கே.சி. அணியினர் முதல் பரிசும், குமாரபாளையம் சேவ ற்கொடி யோர் பேரவை அணியினர் 2-ம் பரிசும் சங்ககிரி சுவாமி அகாடமி அணியினர், 3-ம் பரிசும் குமாரபாளையம் ராஜா பிரதர்ஸ் அணியினர் 4-ம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினரை பலரும் பாராட்டினர்.

    • ஜெ.ஏ.பி போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி கடந்த 14, 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைப்பெற்றது.
    • இந்த போட்டியை தி.மு.க மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் ஜாகீர் அம்மாபாளைத்தில் ஜெ.ஏ.பி போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி கடந்த 14, 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைப்பெற்றது. இந்த போட்டியை தி.மு.க மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னாள் துணை மேயரும், மெய்யனூர் பகுதி செயலாளருமான கவுன்சிலர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் தி.மு.கவினர் மற்றும் ஜெ.ஏ.பி போர்ட்ஸ் கிளாப் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • பொன்னமராவதி அருகே கபாடி போட்டி நடைபெற்றது
    • 400 வீரர்கள் கலந்து கொண்டு 5 சுற்றுகளாக லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்கலம் ஊராட்சி காயம்பட்டி கிராமத்தில் ஊர்பொதுமக்கள், ஸ்டார் கபாடி குழு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 22-ம் ஆண்டு கபாடி போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 40 அணிகளில் பங்கேற்ற போட்டியில் 400 வீரர்கள் கலந்து கொண்டு 5 சுற்றுகளாக லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றி கோப்பை மறறும் ரொக்க பரிசுகள் விழா கமிட்டியார்கள் வழங்கினர். சிறந்த ஆட்டக்காரர்களுக்கு பரிசுகள் மற்றும் மெடல் வழங்கப்பட்டது.


    • கபடி போட்டியை பர்கூர் எம், எல், எ, மதியழகன் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டு துவக்கி வைத்தார்.
    • ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சூரியா கபடி குழு மற்றும் பொதுமக்கள் நடத்தும் அகில இந்திய (எ) கிரேடு கபாடி போட்டியை பர்கூர் எம், எல், எ, மதியழகன் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டு துவக்கி வைத்தார்.

    உடன் திமுக மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன், ஷேக் ரஷீத்,, ஒசூர் துணை சேர்மன் ஆன்ந்தையா, மாநில விவசாய அணி வெங்கடேஷ், பி, டி, ஒ.க்கள் கோபாலகிருஷ்ணன், சிவகுமார், காவல் உதவி ஆய்வாளர் மனோகரன், சூரியாகபடிக்குழு நிர்வாகிகள் ஜுயாஉல்லா, சுரேஷ், குமார், மற்றும் குழுவினர், கண் வினர் கோபால், மற்றும் அமைச்சூர் கபாடி குழுமாநில செயலாளர் ஷபியுல்லா, கிருஷ்ணகிரி தலைவர் குமார், செயலர் சக்கரவர்த்தி, மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் ஊராட்சிமன்ற, தலைவர்கள்,, ஒன்றிய நிர்வாகிகள், தொழில் அதிபர்கள்பொதுமக்கள் கலந்து ெகாண்டனர். 

    ×