search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில் மாரியம்மன் திருவிழாவையொட்டி  கபாடி போட்டி
    X

    கபாடி போட்டி நடைபெற்ற போது எடுத்த படம்.

    குமாரபாளையத்தில் மாரியம்மன் திருவிழாவையொட்டி கபாடி போட்டி

    • நண்பர்கள் கபாடி குழு சார்பில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி போட்டி நடை பெற்றது.
    • இதில் பெண்கள் பிரிவில் 30 அணிகளும், ஆண்கள் பிரிவில் 105 அணிகளும் கலந்து கொண்டனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, நண்பர்கள் கபாடி குழு சார்பில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி போட்டி நடை பெற்றது. இதில் பெண்கள் பிரிவில் 30 அணிகளும், ஆண்கள் பிரிவில் 105 அணிகளும் கலந்து கொண்டனர்.

    நாமக்கல், சேலம், ஈரோடு, சென்னை, கரூர், கடலூர், திருச்சி, மதுரை, தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி என தமிழக முழுவதும் இருந்து ஏராள மான அணிகள் கலந்து கொண்ட ன.

    இதில் பெண்கள் பிரிவில் ஈரோடு மாவட்டம் அந்தி யூரைச் சேர்ந்த சக்தி அணி யினர் முதல் பரிசு பெற்ற னர். அதை தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான கபாடி போட்டியில் ஈரோடு மாவட்டம், கோபி செட்டி பாளையம், ஏ.எம்.கே.சி. அணியினர் முதல் பரிசும், குமாரபாளையம் சேவ ற்கொடி யோர் பேரவை அணியினர் 2-ம் பரிசும் சங்ககிரி சுவாமி அகாடமி அணியினர், 3-ம் பரிசும் குமாரபாளையம் ராஜா பிரதர்ஸ் அணியினர் 4-ம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினரை பலரும் பாராட்டினர்.

    Next Story
    ×