search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபடி வீரர்கள்"

    • மாநில கபடி கழக பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம் பயிற்சியை தொடங்கி வைத்தார்.
    • மாவட்ட நடுவர்குழு தலைவர் முத்துசாமி வரவேற்றார். இணை செயலாளர் வாலீசன் நன்றி கூறினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கபடி கழகம் சார்பில் மாவட்ட ஆண்கள் சீனியர் அணிக்கான பயிற்சி முகாம், மாவட்ட கபடி கழக மைதானத்தில் மே 1 முதல் 4 வரை நான்கு நாட்கள் நடந்தது. மாநில கபடி கழக பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம் பயிற்சியை தொடங்கி வைத்தார்.பயிற்சி முகாமில் 18 வீரர்கள் பங்கேற்றனர். 12 பேர் அணியை தேர்வுக்குழு தலைவர் ருத்ரன், வாலிசன் தேர்வு செய்தனர். பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.

    மாவட்ட கபடி கழக சேர்மன் முருகேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராமதாஸ், செய்தி தொடர்பாளர் சிவபாலன், புரவலர் சங்கீத் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு, டிராக் சூட், ஷூ, பேக், பெட்சீட், டி சர்ட், விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டது. மாவட்ட நடுவர்குழு தலைவர் முத்துசாமி வரவேற்றார். இணை செயலாளர் வாலீசன் நன்றி கூறினார்.

    மாவட்ட இணை செயலாளர் செல்வராஜ், வளர்ச்சிக்குழு தலைவர்கள் ராஜூ, காரல் மார்க்ஸ், ரவிச்சந்திரன், நாகராஜ், சேகர், சிவகுரு, செந்தில்மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பயிற்சி பெற்ற அணி பயிற்சியாளர் தண்டபாணி, அணித்தலைவர் வினோத் தலைமையில் செங்கல்பட்டில் நடக்கும் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க புறப்பட்டு சென்றனர். 

    • கடலூர் மாவட்ட ஜூனியர் கபடி அணி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
    • மாவட்ட பொருளாளர் மணிபாலன் துணைத் தலைவர் நவநீதராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு ஜூனியர் இளைஞர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வருகிற 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கடலூர் மாவட்ட ஜூனியர் கபடி அணி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை மாவட்டத் தலைவர் வேலவன் தொடங்கி வைத்தார் மாவட்ட பொருளாளர் மணிபாலன் துணைத் தலைவர் நவநீதராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 150 விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் தேர்வு பெறுபவர்கள் மேற்கண்ட போட்டியில் கலந்து கொள்ளலாம் இதில் மாவட்ட கபடி பயிற்சியாளர் புஷ்பராஜ், தேசிய வீரர் நாணமுருகன் சப்-இன்ஸ்பெக்டர் மாயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் நடராஜன் செய்திருந்தார்.

    ×