search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் எரிப்பு"

    • போலீசுக்கு தெரியாமல் மனைவி உடலை எரித்த கணவர்-உறவினர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.
    • சக்தீஸ்வரி மன விரக்தியில் இருந்துள்ளார்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சக்தீஸ்வரி (வயது 55). இவர்களின் எதிர்ப்பை மீறி மகன் காதல் திருமணம் செய்து கொண்டு தனியே வசிப்பதாக கூறப்படுகிறது. இதனால் சக்தீஸ்வரி மன விரக்தியில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான வயல்காட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசுக்கு தெரிவிக்காமல் கணவரும், உறவினர்களும் சேர்ந்து அந்தப் பெண்ணின் பிணத்தை எரித்துள்ளனர். ஆனால் மனைவி மாயமாகி விட்டதாக முருகன் கூறி வந்துள்ளார்.

    இதுகுறித்து புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மாரீஸ்வரனுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். போலீசார் முருகன் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்கொலை செய்த வாலிபர் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது.
    • 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு காலனியை சேர்ந்தவர் காஞ்சி வனத்துரை. இவரது மகன் வருண்(23). நேற்று இவர் குடும்ப பிரச்சி னை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து தந்தை காஞ்சி வனத்துரை, உறவின ர்களுடன் சேர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் வருணின் உடலை கூத்தியார் குண்டு சுடுகாட்டில் எரித்து விட்டனர்.

    தகவல் அறிந்த நிலையூர் கிராம நிர்வாக அதிகாரி கந்தவேலு இதுகுறித்து ஆஸ்டின் பட்டி போலீசில் புகார் செய்தார். இதை யடுத்து போலீசார் காஞ்சி வனத்துரை, மகன் பாவ ஈஸ்வரன், உறவினர்கள் கார்த்திக், பிரவீன், பிச்சை ராஜா, வேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் திருவிழா நடந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
    • ரங்கநாயக் உறவினர்கள் மீது அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள கோவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாயக் (வயது 55). கொசு வலை வியாபாரி. இவர் கடந்த 12-ந் தேதி உயிரிழந்தார்.

    இந்த நிலையில் அப்பகுதியில் ஜோதி லிங்கேஸ்வரர் சாமி கோவில் திருவிழா நடந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்து விட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக உரிகம் கிராம நிர்வாக அலுவலர் கிரிஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ரங்கநாயக் உறவினர்கள் மீது அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் கோவில் திருவிழாவில் ஒரு சமுதாயத்தினர் வைத்த பேனரில் தங்களுக்கு வேண்டியவரின் பெயரை அச்சடிக்கவில்லை என கூறி உயிரிழந்த ரங்கநாயக் உறவினர்கள் மற்றும் அவரது சமூகத்தை சேர்ந்தவர்கள் திருவிழாவில் நடக்கும் நாடகத்திற்கு செல்ல கூடாது என முடிவு செய்திருந்தனர்.

    ஆனால் அதையும் மீறி ரங்கநாத் நாடகத்தை பார்க்க சென்றதால் அவரை பிடித்து இழுத்து வந்த அவரது உறவினர்கள் தப்பி செல்ல முயன்றதால் அவரை தாக்கியதாவும் அதில் ரங்கநாயக் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே தற்கொலை செய்தவர் உடல் போலீசுக்கு தெரியாமல் எரித்த உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முருகன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த தகவலை போலீசுக்கு தெரிவிக்காமல் முருகனின் உடலை உறவினர்கள் எரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த கிராமத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி தற்கொலை செய்த நபர் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை எரித்ததாக உறவினர்கள் சேதுராமன், வீரராஜ், போஜராஜன், வெங்கட்ராமன், கோபால், சங்கரலிங்கம் ஆகிய 6 பேர் மீது இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×